பெங்களூரு: பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கன்னட அமைப்பினரால் நடிகர் சித்தார்த் அவமானப்படுத்தப்பட்டது தொடர்பாக கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் மன்னிப்பு கேட்டுள்ளார்.
காவிரி பிரச்சனையால் கர்நாடகாவில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. விவசாய அமைப்புகள், கன்னட அமைப்புகள், அரசியல் கட்சிகள் இதில் பங்கேற்றுள்ளன. இன்று மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையில் பெங்களூரில் நேற்று எஸ்ஆர் திரையரங்கில் சித்தார்த் தயாரித்து நடித்த சித்தா திரைப்படம் குறித்து செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. நிகழ்ச்சியின் போது சித்தார்த் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அங்கு வந்த கன்ட அமைப்பினர் சித்தார்த் பேச்சை இடைமறித்து நிறுத்தினர்.
கர்நாடகத்தில் காவிரிப் பிரச்சினை நடந்து கொண்டிருக்கும்போது உங்களது திரைப்பட நிகழ்ச்சியை நடத்துவதா, நடத்தக் கூடாது என்று கூறி கோஷமிட்டனர், ஆவேசமாக பேசினர். இந்த எதிர்ப்பு காரணமாக, நடிகர் சித்தார்த் தனது பிரஸ்மீட்டை நிறுத்தி விட்டு கிளம்பிச் சென்றார்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இதைக் கண்டித்துள்ளனர். கன்னட நடிகர் சிவராஜ் குமார் இதுகுறித்துக் கூறுகையில், பிரஸ் மீட் நிகழ்ச்சியில் இருந்து நடிகர் சித்தார்த் கன்னட அமைப்பினர் எதிர்ப்பால் வெளியேற்றப்பட்டது மிகுந்த வேதனை அளிக்கிறது. எல்லா மொழி படங்களையும் பார்க்கக் கூடியவர்கள் கன்னட மக்கள். அவர்கள் சார்பில் நான் மன்னிப்பு கேட்கிறேன் என கூறினார்.
பிரகாஷ்ராஜ் கண்டனம்
இதேபோல நடிகர் சித்தார்த்திடம் கன்னட அமைப்பினர் தகராறு செய்ததை கண்டித்து நடிகர் பிரகாஷ் ராஜும் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனத்தைப் பதிவிட்டு உள்ளார்.
நீண்ட காலமாக தொடரும் காவிரி பிரச்சனையை தீர்க்காத மத்திய அரசு, அரசியல் தலைவர்கள், நெருக்கடி தராத எம்பிக்களிடம் கேள்வி கேட்காமல் சித்தார்த் போன்ற நடிகருக்கு தொந்தரவு கொடுக்கக் கூடாது. ஒரு
கன்னடராக கன்னட மக்கள் சார்பாக மன்னிப்பு கேட்பதாக கூறியுள்ளார் பிரகாஷ் ராஜ்.
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
Sunday Special Veg dish.. மீன் குழம்புக்கு டஃப் தரும் கத்திரிக்காய் பலாக்கொட்டை புளிக்குழம்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
{{comments.comment}}