கன்னட நடிகரின் 45 வயது மனைவி திடீர் மரணம்.. பாங்காக் சென்றவருக்கு மாரடைப்பு!

Aug 07, 2023,01:25 PM IST
பெங்களூர்: கன்னட நடிகரான விஜய ராகவேந்திராவின் மனைவி ஸ்பாந்தனா, பாங்காக் சென்றிருந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அவர் நல்ல உடல் நலத்துடன் இருந்தவர் என்று கூறப்படுகிறது.

பாங்காக் நகருக்கு அவர் சுற்றுலா சென்றிருந்தார். அங்கு அவருக்கு நெஞ்சு வலி ஏற்படவே மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

தனது குடும்பத்துடன் தாய்லாந்துக்கு சுற்றுலா போயிருந்தார் ஸ்பாந்தனா.  போன இடத்தில் அவருக்கு குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் மாரடைப்பு ஏற்பட்டு மரணத்தை சந்தித்துள்ளார். ஸ்பாந்தனாவின் உடல் நாளை பெங்களூருக்குக் கொண்டு வரப்படும் என்று தெரிகிறது.



ஸ்பாந்தனாவின் தந்தை பி.கே.சிவராம், காவல்துறை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர் ஆவார். கடந்த 2007ம் ஆண்டு ஸ்பாந்தனாவுக்கும், விஜய ராகவேந்திராவுக்கும் திருமணம் நடைபெற்றது.  விஜய ராகவேந்திரா தற்போது பாங்காக்கில்தான் இருக்கிறார். 

நல்ல உடல் நலத்துடன் இருப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந்த திடீர் மாரடைப்பால் பலரும் அகால மரணத்தைச் சந்தித்துள்ளனர். கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாரும் இப்படித்தான் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். ஸ்பாந்தனாவின் மரணச் செய்தி கன்னடத் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு

news

போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு

news

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை

news

கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி

news

கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!

news

வானிலை விடுத்த அலர்ட்.. 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு!

news

தமிழ்நாடு சட்டசபைத் தொடர் நாளை கூடுகிறது.. 3 நாட்கள் கூட்டம் நடைபெறும்

news

சுப்ரீம் கோர்ட் உத்தரவால் சாதகமான சூழல்.. மீண்டும் பிரச்சாரத்தை துவக்குவாரா விஜய்?

news

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்