ஹைதராபாத்: கண்ணப்பா திரைப்படத்தில் பிரபாஸ், மோகன்லால் உடன் இணைந்துள்ளார் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார்.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான விஷ்ணு மஞ்சுவின் கண்ணப்பா திரைப்படத்தின் பூஜை சில நாட்களுக்கு முன்னர் தான் போடப்பட்டது. தற்பொழுது முதல் கட்ட படப்பிடிப்பு நியூசிலாந்து நாட்டில் தொடங்கி உள்ளது.
பான் இந்தியா படமான இதில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் பிரபாஸ், கம்ப்ளீட் ஆக்டர் என்று அழைக்கப்படும் மலையாளத்து மோகன்லால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இந்த நிலையில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாரும் இந்த மெகா கூட்டணியில் தற்பொழுது இணைந்துள்ளார்.
கண்ணப்பா திரைப்படத்தில் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருவதால், இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்திருக்கிறது எனலாம்.
இந்த காவிய திரைப்படத்தை உயிர்பிக்கும் நிலையில் தயாரிப்பு துறையினர் ரெடியாகி வருகின்றனர்.
சிவ மெச்சிட கண்ணப்பா என்ற கன்னடத் திரைப்படத்தில் தின்னா -அர்ஜுனா கதாபாத்திரத்தில் சிவராஜ்குமார் நடித்திருந்தது, தற்போது கண்ணப்பாவில் அவருக்கான முக்கியத்துவத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. இந்த படத்தில் சிவராஜ்குமார் தலைசிறந்த பங்களிப்பை தருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
ஸ்டார் பிளஸ்சில் மகாபாரதம் தொடரை இயக்கிய முகேஷ் குமார் சிங் இப்படத்தை இயக்குகிறார். கண்ணப்பா திரைப்படம் இந்திய திரையுலகில் கதை சொல்லலை மறுவரையறை செய்வதோடு மட்டுமல்லாமல், கண்ணப்பாவின் அசாதாரணக் கதையையும், சிவபெருமான் மீதான அவரது அசைக்க முடியாத பக்தியையும் விவரிக்கும் காவியமாக உருவாகி வருகிறது.
ஏற்கனவே ரஜினிகாந்த்தின் ஜெயிலர் படத்தில் மோகன்லால், சிவராஜ் குமார் இணைந்திருந்தனர். இப்போது தெலுங்குப் படத்தில் கை கோர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு
போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு
கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை
கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி
கரூர் விவகாரத்திற்கு பின்னால்... ஏதோ அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது: நயினார் நாகேந்திரன்!
வானிலை விடுத்த அலர்ட்.. 16 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு!
தமிழ்நாடு சட்டசபைத் தொடர் நாளை கூடுகிறது.. 3 நாட்கள் கூட்டம் நடைபெறும்
சுப்ரீம் கோர்ட் உத்தரவால் சாதகமான சூழல்.. மீண்டும் பிரச்சாரத்தை துவக்குவாரா விஜய்?
கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வரும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்
{{comments.comment}}