- தமிழ்மாமணி இரா. கலைச்செல்வி
காலங்கள் கடந்தாலும், காவியமாய் வாழும் .
கண்ணதாசன் என்னும் கவிஞனின் நாமம்.
காலங்கள் மாறும். காட்சிகள் மறையும் .
கண்ணதாசனின் கவிகள் என்றும் நிலைக்கும்.
காலத்தை வென்ற கவிஞன் இவன்.
காலத்தால் அழியாதவை இவன் கவிகள்.
காதல் சுவை கொட்டும் இவன் கவிதை .
காவியமாகும் இவன் கவி படைப்புகள்.
இவன் கவிதைகளில் சந்தங்கள் விளையாடும்.
இவன் எழுத்தில் சொற்கள் நடனமாடும்.
வாழ்க்கை பற்றிய ஆழமான சிந்தனைகளை,
வரிந்து எழுதிய , வாழ்க்கை சித்தர்.
நம்பிக்கையும், நகைச்சுவையும், கலந்த நாயகன்.
நயமிக்க இனிய பாடலுக்கு சொந்தக்காரன்.
பாட்டாலே உலகத்தை ஈர்த்தவன் அவன்.
படைப்புகளால் மனித மனங்களை மகிழ்வித்தவன்.
சாமானிய மக்களின் மனதில் பதிந்தவன்.
சாகித்திய அகடாமி விருதுபெற்ற கவிஞன்.
அர்த்தமுள்ள இந்து மதத்தின் நூலாசிரியர்.
ஆன்மீக தேடலில் வழிகாட்டி அவர்.
தமிழ் மொழிக்கு கிடைத்த பெரும் பொக்கிஷம்.
திரைப்படத் துறையில் தனக்கென தனிஇடம் பதித்தவர்.
காலத்தை வென்ற ஒரு கவிஞன் .
கண்ணதாசன் நாமம் என்றும் நம் நினைவில்.
(எழுத்தாளர் பற்றி... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார். கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். சாதனைப் பெண், தங்கத் தாரகை, கவிஞாயிறு உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்).
புஸ்ஸி ஆனந்த், சிடிஆர் நிர்மல்குமார் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி.. இன்று இரவுக்குள் கைது?
விஜய்க்கு தலைமைத்துவ பண்பே இல்லை.. தவெகவை சரமாரியாக விமர்சித்த ஹைகோர்ட் நீதிபதி செந்தில்குமார்
கரூர் சம்பவம்... சிறப்பு புலனாய்வு குழு நியமனம்: உயர் நீதிமன்றம் உத்தரவு
கீழடி கண்டேன், பெருமிதம் கொண்டேன்: கீழடி குறித்த முதல்வர் முக ஸ்டாலினின் நெகிழ்ச்சி பதிவு!
இரத்தத்தை உறிஞ்சி உயிர்வாழும் ஒட்டுண்ணி பாஜக: முதல்வர் முக ஸ்டாலின் விமர்சனம்
தவெக மாவட்டச் செயலாளர் சதீஷ்குமாரின் முன்ஜாமின் மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு
கரூர் சம்பவத்திற்கு சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி... மதுரை ஹைகோர்ட் கிளை அதிரடி உத்தரவு
210 தொகுதிகளில் அதிமுக வெல்லும்..அதற்கு சாட்சி தருமபுரியில் கூடிய இந்த கூட்டம் எடப்பாடி பழனிச்சாமி
முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் மாளிகை, நடிகை திரிஷா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
{{comments.comment}}