காவியத்தாயின் இளைய மகன்.. காலத்தை வென்ற.. கண்ணதாசன்!

Jun 24, 2025,12:21 PM IST

- தமிழ்மாமணி இரா. கலைச்செல்வி


காலங்கள் கடந்தாலும், காவியமாய் வாழும் .

கண்ணதாசன் என்னும் கவிஞனின் நாமம். 


காலங்கள் மாறும். காட்சிகள் மறையும் .

கண்ணதாசனின் கவிகள் என்றும் நிலைக்கும்.


காலத்தை வென்ற கவிஞன் இவன்.

காலத்தால் அழியாதவை இவன் கவிகள்.


காதல் சுவை கொட்டும் இவன் கவிதை .

காவியமாகும் இவன்  கவி படைப்புகள்.


இவன் கவிதைகளில் சந்தங்கள் விளையாடும்.

இவன் எழுத்தில் சொற்கள் நடனமாடும்.




வாழ்க்கை பற்றிய ஆழமான சிந்தனைகளை,

வரிந்து எழுதிய , வாழ்க்கை சித்தர்.


நம்பிக்கையும், நகைச்சுவையும், கலந்த நாயகன்.

நயமிக்க இனிய பாடலுக்கு சொந்தக்காரன். 


பாட்டாலே உலகத்தை ஈர்த்தவன் அவன்.

படைப்புகளால் மனித மனங்களை மகிழ்வித்தவன். 


சாமானிய மக்களின்  மனதில் பதிந்தவன்.      

சாகித்திய அகடாமி விருதுபெற்ற  கவிஞன்.


அர்த்தமுள்ள இந்து மதத்தின் நூலாசிரியர்.

ஆன்மீக  தேடலில் வழிகாட்டி அவர்.


தமிழ் மொழிக்கு கிடைத்த பெரும் பொக்கிஷம்.

திரைப்படத் துறையில் தனக்கென தனிஇடம் பதித்தவர்.


காலத்தை வென்ற ஒரு கவிஞன் .

கண்ணதாசன் நாமம் என்றும் நம் நினைவில்.


(எழுத்தாளர்  பற்றி... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார்.  கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். சாதனைப் பெண், தங்கத் தாரகை, கவிஞாயிறு உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆசையே அலை போலே!

news

அப்பத்தா அப்பத்தா!.. ஒரு நிமிடக் கதை (14)

news

இலங்கையில் பரிதாபம்.. முதியோர் இல்லத்தில் கோர தீ விபத்து.. 12 பேர் உயிரிழப்பு

news

காங்கிரஸால் காயப்பட்டுள்ளோம்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்.. திமுக

news

ரோஜா பூ கொடுத்து புதிய மாணவர்களை அன்புடன் வரவேற்ற தேவகோட்டை ஆசிரியர்கள்!

news

புதிய கல்வியாண்டு.. அனைவரும் இணைந்து அறிவுச் சுடரை உயர்த்திப் பிடிப்போம்!

news

Tamil Life Qoutes: தெரிந்து கொள்வதை விட புரிந்து கொண்டால் .. அன்பு ஆயுள் வரை நீடிக்கும்.!

news

மாணவர் நலனைக் காப்பாற்றுங்கள்.. அமைச்சரிடம் கணினி ஆசிரியர்கள் கோரிக்கை

news

Vipuvana sangadahara chaturthi: விபுவன சங்கடஹர சதுர்த்தி.. விரதம் இருந்து விநாயகனை வழிபடுவோம்

அதிகம் பார்க்கும் செய்திகள்