காவியத்தாயின் இளைய மகன்.. காலத்தை வென்ற.. கண்ணதாசன்!

Jun 24, 2025,12:21 PM IST

- தமிழ்மாமணி இரா. கலைச்செல்வி


காலங்கள் கடந்தாலும், காவியமாய் வாழும் .

கண்ணதாசன் என்னும் கவிஞனின் நாமம். 


காலங்கள் மாறும். காட்சிகள் மறையும் .

கண்ணதாசனின் கவிகள் என்றும் நிலைக்கும்.


காலத்தை வென்ற கவிஞன் இவன்.

காலத்தால் அழியாதவை இவன் கவிகள்.


காதல் சுவை கொட்டும் இவன் கவிதை .

காவியமாகும் இவன்  கவி படைப்புகள்.


இவன் கவிதைகளில் சந்தங்கள் விளையாடும்.

இவன் எழுத்தில் சொற்கள் நடனமாடும்.




வாழ்க்கை பற்றிய ஆழமான சிந்தனைகளை,

வரிந்து எழுதிய , வாழ்க்கை சித்தர்.


நம்பிக்கையும், நகைச்சுவையும், கலந்த நாயகன்.

நயமிக்க இனிய பாடலுக்கு சொந்தக்காரன். 


பாட்டாலே உலகத்தை ஈர்த்தவன் அவன்.

படைப்புகளால் மனித மனங்களை மகிழ்வித்தவன். 


சாமானிய மக்களின்  மனதில் பதிந்தவன்.      

சாகித்திய அகடாமி விருதுபெற்ற  கவிஞன்.


அர்த்தமுள்ள இந்து மதத்தின் நூலாசிரியர்.

ஆன்மீக  தேடலில் வழிகாட்டி அவர்.


தமிழ் மொழிக்கு கிடைத்த பெரும் பொக்கிஷம்.

திரைப்படத் துறையில் தனக்கென தனிஇடம் பதித்தவர்.


காலத்தை வென்ற ஒரு கவிஞன் .

கண்ணதாசன் நாமம் என்றும் நம் நினைவில்.


(எழுத்தாளர்  பற்றி... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார்.  கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். சாதனைப் பெண், தங்கத் தாரகை, கவிஞாயிறு உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Akshaya Tritiya 2026: அட்சய திருதியை.. எப்போது சாமி கும்பிடலாம்.. பஞ்சாங்கம் என்ன சொல்கிறது?

news

Kanakathara Sthothram: அட்சய திருதியை.. ஸ்ரீ ஆதி சங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரம் படிப்போம்!

news

அட்சய திருதியை.. சித்திரை மாத பொன்னான நாளிது.. மூன்றாம் பிறையில் வரும் நாளிது!

news

அட்சய திருதியை அன்று...இதை வைத்துப் பூஜை செய்வோம்.. காலத்தின் அவசியம் இது!

news

IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்

news

மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!

news

எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!

news

Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!

news

பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)

அதிகம் பார்க்கும் செய்திகள்