காவியத்தாயின் இளைய மகன்.. காலத்தை வென்ற.. கண்ணதாசன்!

Jun 24, 2025,12:21 PM IST

- தமிழ்மாமணி இரா. கலைச்செல்வி


காலங்கள் கடந்தாலும், காவியமாய் வாழும் .

கண்ணதாசன் என்னும் கவிஞனின் நாமம். 


காலங்கள் மாறும். காட்சிகள் மறையும் .

கண்ணதாசனின் கவிகள் என்றும் நிலைக்கும்.


காலத்தை வென்ற கவிஞன் இவன்.

காலத்தால் அழியாதவை இவன் கவிகள்.


காதல் சுவை கொட்டும் இவன் கவிதை .

காவியமாகும் இவன்  கவி படைப்புகள்.


இவன் கவிதைகளில் சந்தங்கள் விளையாடும்.

இவன் எழுத்தில் சொற்கள் நடனமாடும்.




வாழ்க்கை பற்றிய ஆழமான சிந்தனைகளை,

வரிந்து எழுதிய , வாழ்க்கை சித்தர்.


நம்பிக்கையும், நகைச்சுவையும், கலந்த நாயகன்.

நயமிக்க இனிய பாடலுக்கு சொந்தக்காரன். 


பாட்டாலே உலகத்தை ஈர்த்தவன் அவன்.

படைப்புகளால் மனித மனங்களை மகிழ்வித்தவன். 


சாமானிய மக்களின்  மனதில் பதிந்தவன்.      

சாகித்திய அகடாமி விருதுபெற்ற  கவிஞன்.


அர்த்தமுள்ள இந்து மதத்தின் நூலாசிரியர்.

ஆன்மீக  தேடலில் வழிகாட்டி அவர்.


தமிழ் மொழிக்கு கிடைத்த பெரும் பொக்கிஷம்.

திரைப்படத் துறையில் தனக்கென தனிஇடம் பதித்தவர்.


காலத்தை வென்ற ஒரு கவிஞன் .

கண்ணதாசன் நாமம் என்றும் நம் நினைவில்.


(எழுத்தாளர்  பற்றி... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார்.  கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். சாதனைப் பெண், தங்கத் தாரகை, கவிஞாயிறு உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கோவை, நீலகிரிக்கு நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்

news

ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்

news

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கல்விக் கண் திறந்த காமராசர்.. பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் புகழாரம்

news

இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு

news

காற்றில் கலந்தார் கன்னடத்து பைங்கிளி... சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்

news

வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினார் சுபான்ஷு சுக்லா.. ஆக்ஸியம் 4 குழுவினரும் பத்திரமாக திரும்பினர்!

news

அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி

news

இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?

அதிகம் பார்க்கும் செய்திகள்