பெங்களூரு: கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு சிங்கிள் டிஜிட்டில்தான் சீட் கிடைக்கும் என்று பெரும்பாலான எக்சிட் போல் கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. இது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
கர்நாடகத்தில் சில மாதங்களுக்கு முன்பு நடந்த சட்டசபைத் தேர்தலில் யாரும் எதிர்பாராத அளவுக்கு மிகப் பெரிய வெற்றியை காங்கிரஸ் பெற்றது. பாஜகவுக்கு பெரும் தோல்வியே கிடைத்தது. தேர்தல் வெற்றிக்குப் பின்னர் மகளிர் இலவசப் பேருந்து உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை காங்கிரஸ் கொண்டு வந்தது.

ஆனால் இன்று வெளியான எக்சிட் போல் முடிவுகளைப் பார்த்தால் பெரும் ஆச்சரியமும், அதிர்ச்சியும்தான் மிஞ்சுகிறது. அதாவது சிங்கிள் டிஜிட்டில்தான் காங்கிரஸுக்கு அங்கு வெற்றி கிடைக்கும் என்று எக்சிட் போல் முடிவுகள் தெரிவித்துள்ளன. கிட்டத்தட்ட எல்லா எக்சிட் போல் முடிவுகளுமே அப்படித்தான் சொல்லியுள்ளன. அதாவது சொல்லி வைத்தாற் போல அத்தனை பேரும் ஒரே மாதிரி சொல்லியுள்ளனர்.
இந்தியா டுடே எக்சிட் போல் கணிப்பில், காங்கிரஸ் (3-5) , பாஜக (20-22) கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிஎன்என் நியூஸ் 18 கணிப்பில், காங்கிரஸ் (3-5), பாஜக (23-26) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜான் கி பாத் கணிப்பில் - காங்கிரஸ் (5-7) , பாஜக (21-23) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏபிபி சிவோட்டர் கணிப்பில், காங்கிரஸ் (3-5) , பாஜக (23-25) என்று சீட்டுகளைப் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி மீது மக்கள் கடும் அதிருப்தியுடன் இருப்பதாக கணிக்கப்படுகிறது. மேலும் பாஜக தனது பலத்தை இன்னும் முழுமையாக இழக்கவில்லை என்றும் ஊகிக்க முடிகிறது.
IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்
மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!
பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)
சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!
A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!
மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!
True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?
{{comments.comment}}