கர்நாடகாவில் காங்கிரஸுக்கு ஷாக்.. சிங்கிள் டிஜிட்டில்தான் வெற்றி.. பாஜகவுக்கு 20க்கு மேல் கிடைக்குமா

Jun 01, 2024,08:27 PM IST

பெங்களூரு: கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு சிங்கிள் டிஜிட்டில்தான் சீட் கிடைக்கும் என்று பெரும்பாலான எக்சிட் போல் கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. இது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.


கர்நாடகத்தில் சில மாதங்களுக்கு முன்பு நடந்த சட்டசபைத் தேர்தலில் யாரும் எதிர்பாராத அளவுக்கு மிகப் பெரிய வெற்றியை காங்கிரஸ் பெற்றது. பாஜகவுக்கு பெரும் தோல்வியே கிடைத்தது.  தேர்தல் வெற்றிக்குப் பின்னர் மகளிர் இலவசப் பேருந்து உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை காங்கிரஸ் கொண்டு வந்தது.




ஆனால் இன்று வெளியான எக்சிட் போல் முடிவுகளைப் பார்த்தால் பெரும் ஆச்சரியமும், அதிர்ச்சியும்தான் மிஞ்சுகிறது. அதாவது சிங்கிள் டிஜிட்டில்தான் காங்கிரஸுக்கு அங்கு வெற்றி கிடைக்கும் என்று எக்சிட் போல் முடிவுகள் தெரிவித்துள்ளன. கிட்டத்தட்ட எல்லா எக்சிட் போல் முடிவுகளுமே அப்படித்தான் சொல்லியுள்ளன. அதாவது சொல்லி வைத்தாற் போல அத்தனை பேரும் ஒரே மாதிரி சொல்லியுள்ளனர்.


இந்தியா டுடே  எக்சிட் போல் கணிப்பில்,   காங்கிரஸ் (3-5) , பாஜக (20-22) கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிஎன்என் நியூஸ் 18   கணிப்பில், காங்கிரஸ் (3-5),  பாஜக (23-26) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஜான் கி பாத் கணிப்பில் - காங்கிரஸ் (5-7) , பாஜக  (21-23) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏபிபி சிவோட்டர் கணிப்பில்,  காங்கிரஸ் (3-5) , பாஜக  (23-25) என்று சீட்டுகளைப் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன் மூலம் கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி மீது மக்கள் கடும் அதிருப்தியுடன் இருப்பதாக கணிக்கப்படுகிறது. மேலும் பாஜக தனது பலத்தை இன்னும் முழுமையாக இழக்கவில்லை என்றும் ஊகிக்க முடிகிறது.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்