மாமியாரின் போக்கில் கோபம்.. கூட்டாளிகளுடன் சேர்ந்து.. கர்நாடக டாக்டர் எடுத்த விபரீத முடிவு

Aug 12, 2025,01:46 PM IST

தும்கூரு: கர்நாடக மாநிலம் தும்கூரு மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமி தேவம்மா என்ற பெண்ணை கொடூரமாக கத்தியால் குத்திக் கொன்றதாக அவரது மருமகன் டாக்டர் ராமச்சந்திரப்பா மற்றும் அவருடன் சேர்ந்து இந்த செயலில் ஈடுபட்ட 2 பேரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.


கொரட்டகரேவைச் சேர்ந்தவர் லட்சுமி தேவம்மா. இவரது மருமகன் டாக்டர் ராமச்சந்திரப்பா. இவர் பல் மருத்துவர் ஆவார். இந்த நிலையில் சமீபத்தில் லட்சுமி தேவம்மா காணாமல் போய் விட்டார். இதையடுத்து போலீஸில் புகார் கொடுத்தார் அவரது கணவர் பசவராஜ்.




இந்தப் பின்னணியில் கொரட்டகரே கிராமத்தில் உள்ள ஒரு சாலையில் ஒரு பெண்ணின் தலை மற்றும் துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடலின் பாகங்கள், பல பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்டு, அழுகிய நிலையில் ஆங்காங்கே கிடந்துள்ளன. ஆகஸ்ட் 7ம் தேதி சில உடல் பாகங்களும், 8ம் தேதி சில பாகங்களும் என அடுத்தடுத்த நாட்களில் இந்த உடல் பாகங்கள் சிக்கின. இந்தப் பகுதியானது மாநில காவல்துறை அமைச்சரின் தொகுதிக்குட்பட்டதாகும். எனவே மாநிலம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.


இதையடுத்து போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கினர். விசாரணையில் கொலை செய்யப்பட்டது லட்சுமி தேவம்மா என்று தெரிய வந்தது. மொத்தம் 19 துண்டுகளாக உடலை வெட்டியிருந்தனர்.  சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டு நடந்து வந்த தீவிர தேடுதலில் டாக்டர் ராமச்சந்திரப்பா சிக்கினார். அவருடன் கூட்டாளிகள் கிரண் மற்றும் சதீஷ் என இருவரும் சிக்கினர்.


லட்சுமி தேவம்மாவின் நடத்தை சரியில்லாமல் இருந்துள்ளது. அவர் தவறான பாதையில் போக ஆரம்பித்திருக்கிறார். கூடவே தனது மகளையும் அதில் ஈடுபடுத்தப் பார்த்திருக்கிறார். இதனால் மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளார் டாக்டர் ராமச்சந்திரப்பா. மாமியாரிடம் புத்திமதி சொல்லியும் அவர் கேட்கவில்லை போலும். இதனால்தான் கூட்டாளிகளை துணைக்கு அழைத்துக் கொண்டு இந்த விபரீத முடிவை எடுத்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்

news

மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!

news

எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!

news

Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!

news

பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)

news

சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!

news

A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!

news

மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!

news

True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?

அதிகம் பார்க்கும் செய்திகள்