பெங்களூரு: பெங்களூருவில், கர்நாடக மாநில அரசு பெண் அதிகாரி ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.
அவர் வீட்டில் தனியாகஇருந்ததை நோட்டமிட்டு வெட்டிக் கொலை செய்துள்ளனர். அந்தப் பெண் அதிகாரி கர்நாடக மாநில அரசின் சுரங்கத் துறையில் பணியாற்றி வந்தவர் ஆவார். கொல்லப்பட்ட அதிகாரிக்கு வயது 37 ஆகிறது.

கொல்லப்பட்ட அதிகாரியின் பெயர் பிரதீமா. கர்நாடக மாநில சுரங்கம் மற்றும் மண்ணியல் துறையில் துணை இயக்குநராக இருந்து வந்தார். இவரது வீடு குவெம்பு நகரில் உள்ள தொட்டகள்ளசந்திரா பகுதியில் உள்ளது. இது வாடகை வீடாகும். இவரது கணவர் வெளியூர் போயிருந்தார். வீட்டில் பிரதீமா மட்டும் தனியாக இருந்துள்ளார். இந்த நிலையில் இன்று அதிகாலை அவரது வீடு பூட்டியே கிடந்ததைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து பூட்டை உடைத்து உள்ளே போய் பார்த்தபோதுதான் பிரதீமா கொல்லப்பட்டிருந்தது தெரிய வந்தது.
கொல்லப்பட்ட பிரதீமாவின் தனது சொந்த ஊரான தீர்த்தஹள்ளிக்குப் போயிருந்தார். இவர்களுக்கு ஒரே ஒரு மகன் மட்டும் உள்ளார். பிரதீமா எல்லோரிடமும் நன்றாக, அன்பாகப் பேசக் கூடியவராம். இதுகுறித்து அவரது வீட்டுக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவர் கூறுகையில்,எட்டு வருடமாக பிரதீமா குடும்பத்தினர் இங்கு வசித்து வருகின்றனர். எல்லோரிடமும் நன்றாகப் பேசுவார்கள். அவர்களால் யாருக்கும் எந்தப் பிரச்சினையும் வந்ததில்லை. மிகவும் அன்பானவர்கள் என்றார்.
சுரங்கத் துறையில் பணியாற்றி வந்தவர் என்பதால் சுரங்க லைசென்ஸ் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏதாவது அவருக்கு இருந்ததா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
செந்தில் பாலாஜிக்கு முற்றும் நெருக்கடி.. முன்ஜாமின் மனு தள்ளுபடி.. அடுத்து என்ன நடக்கும்?
தவெக அரசைக் கண்டித்து ஆகஸ்ட் 3-ல் திமுக பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்
டெல்லி ஜந்தர் மந்தரில் உச்சக்கட்ட பாதுகாப்பு: மாணவர்கள் போராட்டம் தீவிரமடைய வாய்ப்பு
சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் நெய்மர்
திருநாவுக்கரசர் நாயனார்.. நான்கு சைவக்குரவர்களில் முதன்மையான அப்பர் சாமிகள்!
கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அஜிங்க்யா ரஹானே அறிவிப்பு!
டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடிசெய்தது ஹைகோர்ட்
70 வயது தேவ் ஆனந்த் மகனின் மரணம் சொல்லும் செய்தி.. 2வது ஹார்ட் அட்டாக் அபாயகரமானது?
நட்பு .. அன்பென்ற சொல்லின் உன்னதமான உயிர்ப்பு!
{{comments.comment}}