பெங்களூரு: பெங்களூருவில், கர்நாடக மாநில அரசு பெண் அதிகாரி ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.
அவர் வீட்டில் தனியாகஇருந்ததை நோட்டமிட்டு வெட்டிக் கொலை செய்துள்ளனர். அந்தப் பெண் அதிகாரி கர்நாடக மாநில அரசின் சுரங்கத் துறையில் பணியாற்றி வந்தவர் ஆவார். கொல்லப்பட்ட அதிகாரிக்கு வயது 37 ஆகிறது.

கொல்லப்பட்ட அதிகாரியின் பெயர் பிரதீமா. கர்நாடக மாநில சுரங்கம் மற்றும் மண்ணியல் துறையில் துணை இயக்குநராக இருந்து வந்தார். இவரது வீடு குவெம்பு நகரில் உள்ள தொட்டகள்ளசந்திரா பகுதியில் உள்ளது. இது வாடகை வீடாகும். இவரது கணவர் வெளியூர் போயிருந்தார். வீட்டில் பிரதீமா மட்டும் தனியாக இருந்துள்ளார். இந்த நிலையில் இன்று அதிகாலை அவரது வீடு பூட்டியே கிடந்ததைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து பூட்டை உடைத்து உள்ளே போய் பார்த்தபோதுதான் பிரதீமா கொல்லப்பட்டிருந்தது தெரிய வந்தது.
கொல்லப்பட்ட பிரதீமாவின் தனது சொந்த ஊரான தீர்த்தஹள்ளிக்குப் போயிருந்தார். இவர்களுக்கு ஒரே ஒரு மகன் மட்டும் உள்ளார். பிரதீமா எல்லோரிடமும் நன்றாக, அன்பாகப் பேசக் கூடியவராம். இதுகுறித்து அவரது வீட்டுக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவர் கூறுகையில்,எட்டு வருடமாக பிரதீமா குடும்பத்தினர் இங்கு வசித்து வருகின்றனர். எல்லோரிடமும் நன்றாகப் பேசுவார்கள். அவர்களால் யாருக்கும் எந்தப் பிரச்சினையும் வந்ததில்லை. மிகவும் அன்பானவர்கள் என்றார்.
சுரங்கத் துறையில் பணியாற்றி வந்தவர் என்பதால் சுரங்க லைசென்ஸ் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏதாவது அவருக்கு இருந்ததா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Attention, Dear ’80s Trend Mongers! .. ரெட்ரோ மோகம் vs AI-ன் தாக்கம் பற்றி தெரிஞ்சுக்குங்க!
Short Story: "வெந்நீர் கொடுப்பாளா காவேரிக்கரையில?"
போதை உன்னை தொட்டவுடன் போற இடம் மறந்ததடா.... போதை விழிப்புணர்வுக் கவிதை!
Solomon Pappaiah: தமிழின் இனிமையை தன் நாவால் உலகறியச் செய்தவர்.. சாலமன் பாப்பையா!
வழிகாட்டி தேவதை.. ஒரு நிமிடக் கதை (16)
கடைசி வரை மூக்கு கண்ணாடியே கிடையாது.. ஸ்ரீ உ.வே. குப்புசாமி அய்யங்கார்!
பெருநம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன்.. குலச்சிறை நாயனார் !
தமிழுக்கு ஓர் இழப்பு!
ரீல்ஸ் மோகம்!
{{comments.comment}}