பெங்களூரு: பெங்களூருவில், கர்நாடக மாநில அரசு பெண் அதிகாரி ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.
அவர் வீட்டில் தனியாகஇருந்ததை நோட்டமிட்டு வெட்டிக் கொலை செய்துள்ளனர். அந்தப் பெண் அதிகாரி கர்நாடக மாநில அரசின் சுரங்கத் துறையில் பணியாற்றி வந்தவர் ஆவார். கொல்லப்பட்ட அதிகாரிக்கு வயது 37 ஆகிறது.

கொல்லப்பட்ட அதிகாரியின் பெயர் பிரதீமா. கர்நாடக மாநில சுரங்கம் மற்றும் மண்ணியல் துறையில் துணை இயக்குநராக இருந்து வந்தார். இவரது வீடு குவெம்பு நகரில் உள்ள தொட்டகள்ளசந்திரா பகுதியில் உள்ளது. இது வாடகை வீடாகும். இவரது கணவர் வெளியூர் போயிருந்தார். வீட்டில் பிரதீமா மட்டும் தனியாக இருந்துள்ளார். இந்த நிலையில் இன்று அதிகாலை அவரது வீடு பூட்டியே கிடந்ததைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து பூட்டை உடைத்து உள்ளே போய் பார்த்தபோதுதான் பிரதீமா கொல்லப்பட்டிருந்தது தெரிய வந்தது.
கொல்லப்பட்ட பிரதீமாவின் தனது சொந்த ஊரான தீர்த்தஹள்ளிக்குப் போயிருந்தார். இவர்களுக்கு ஒரே ஒரு மகன் மட்டும் உள்ளார். பிரதீமா எல்லோரிடமும் நன்றாக, அன்பாகப் பேசக் கூடியவராம். இதுகுறித்து அவரது வீட்டுக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவர் கூறுகையில்,எட்டு வருடமாக பிரதீமா குடும்பத்தினர் இங்கு வசித்து வருகின்றனர். எல்லோரிடமும் நன்றாகப் பேசுவார்கள். அவர்களால் யாருக்கும் எந்தப் பிரச்சினையும் வந்ததில்லை. மிகவும் அன்பானவர்கள் என்றார்.
சுரங்கத் துறையில் பணியாற்றி வந்தவர் என்பதால் சுரங்க லைசென்ஸ் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏதாவது அவருக்கு இருந்ததா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}