தக்லைஃப் படத்தின் வழக்கு ஜூன் 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு

Jun 10, 2025,11:15 AM IST

பெங்களுரு : கமல் நடித்த தக்லைஃப் படம் தொடர்பான வழக்கை ஜூன் 13ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக கர்நாடக ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த படம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வரும் விசாரணையும் ஜூன் 13ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


கமல்-மணிரத்னம் கூட்டணியில் உருவான தக்லைஃப் படம் ஜூன் 05ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டு, கலவையான விமர்சனங்களை பெற்றது. முன்னதாக படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கமல், தமிழில் இருந்து தான் கன்னடம் உருவானதாக தெரிவித்தார். கமலின் இந்த பேச்சிற்கு கடும் கண்டனங்கள் எழுந்தது. கர்நாடகாவில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, கன்னட அமைப்புகள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். கமலுக்கு எதிராக கண்டனங்கள் எழுந்தது. 


எதிர்ப்புகள் அதிகரித்து வந்ததால் தக்லைஃப் படம் வெளியிடப்படும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், எதன் அடிப்படையில் தமிழில் இருந்து தான் கன்னடம் வந்தது கூறினீர்கள்? மக்களின் உணர்வுகளை காயப்படும் கருத்துக்களை யார் பேசினாலும் ஏற்க முடியாது எனக் கூறி கமலை மன்னிப்பு கேட்கும் படி கூறியது. ஆனால் கமல், மன்னிப்பு கேட்க முடியாது என உறுதியாக மறுத்து விட்டார். இதனால் தயாரிப்பு நிறுவனமே கர்நாடகாவில் தக்ஃலைப் படத்தின் ரிலீசை ஒத்திவைப்பதாக அறிவித்தது. 




இதற்கிடையில் கர்நாடக தியேட்டர்கள் சங்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. தக்லைஃப் படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு தீ வைக்கப் போவதாக மிரட்டல்கள் வருவதால் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கேட்கப்பட்டது. ஆனால் இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், தீ வைத்தால் தீயணைப்பு கருவிகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என கூறி மனுவை தள்ளுபடி செய்தது. இருந்தாலும் தொடர்ந்து மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு ஜூன் 13ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்திருந்தது.


கர்நாடகா ஐகோர்ட்டில் ஏற்கனவே நடந்து வந்த தக்லைஃப் படத்தின் வழக்கை ஜூன் 10ம் தேதி விசாரிக்கப்படும் என ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்றும் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் அவகாசம் கேட்டதால் வழக்கு விசாரணை ஜூன் 13ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஓபிஎஸ், தினகரன், செங்கோட்டையன், சசிகலா நால்வர் கூட்டணியால் யாருக்கு பலம்.. யாருக்கு பலவீனம்?

news

வந்தே மாதரம்.. 150வது ஆண்டைக் கொண்டாடும் இந்தியாவின் தேசியப் பாடல்!

news

மீண்டும் சரிவை நோக்கி சரிந்து வரும் தங்கம் விலை... சவரனுக்கு ரூ.400 சரிந்தது!

news

அறிவுப்பூர்வமான செய்தியாளர்கள் அருகிப் போனது ஏன்?

news

கலைஞானி கமல்ஹாசன் 71.. முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

news

மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!

news

நெல்லையில் தோற்றால் பதவிகள் பறிக்கப்படும்: மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை

news

அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கேட்ட கேள்வி.. திமுகவை நோக்கி திருப்பி விடும் அதிமுக!

news

குடியிருப்புகளுக்கு அருகில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படுவதை கைவிட வேண்டும்: சீமான்

அதிகம் பார்க்கும் செய்திகள்