- ஸ்வர்ணலட்சுமி
சென்னை : கார்த்திகை சோமவாரம் என்பது, கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமைகளில் சிவ பெருமானுக்கு கடைபிடிக்கப்படும் வழிபாடு ஆகும். திங்கட்கிழமைகளில் சிவ பெருமானுக்கு இருக்கக் கூடிய விரதம் சோமவார விரதமாகும். இது கார்த்திகை மாதத்தில் வரும் போது கூடுதல் விசேஷமானதாக கருதப்படுகிறது.
திங்கட்கிழமை என்பது நவகிரகங்களில் சந்திரனுக்குரிய கிழமையாகும். இவரே மனக்குழப்பம், மன வேதனை, தடுமாற்றம், மனஅழுத்தம் ஆகியவற்றிற்கு காரணமானவராக கருதப்படுகிறார். சந்திரனுக்கு ஏற்பட்ட சாபத்தை சிவபெருமான் நீக்கிய மாதமாக கார்த்திகை மாதம் கருதப்படுகிறது. அதனால் கார்த்திகை மாதத்தில் வரும் சோமவாரங்களில் சிவ பெருமானுக்கு விரதம் இருந்தால் நம்முடைய வாழ்க்கையிலும் இருக்கும் பிரச்சனைகள் தீரும் என்பது நம்பிக்கை.

கார்த்திகை சோமவாரத்தில் அனைத்து சிவன் கோவில்களிலும் சங்காபிஷேகம் நடத்தப்படும். இதை சென்று தரிசிக்கலாம். இது தவிர வீடுகளில் மாலை நேரத்தில் வாசற்காலுக்கு அருகில் கோலமிட்டு நல்லெண்ணெய் அல்லது நெய்யால் அகல் விளக்கில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். நிலைவாசலுக்கு அருகில் மேலே குறிப்பிட்டுள்ள கோலத்தை அரிசி மாவு அல்லது கோலமாவில் போடுவது சிறப்பு. இதனை சிவன் கண் கோலம் என்பார்கள். இதன் மத்தியில் வரும் அமைப்பு சிவனின் முக்கண் வடிவத்தை கொண்டதாக இருப்பதால் இதனை சிவன் கண் கோலம் என்கிறோம். இந்த கோலத்தை வாசலில் போடுவதால் சிவனின் அருள் எப்போதும் வீட்டில் நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. இந்த கோலத்தை சுற்றி விளக்கேற்றி வைப்பது மிகவும் நல்லது.
சிவன் வேறு, முருகன் வேறு இல்லை என்பார்கள். கார்த்திகை மாதம் என்பது கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்ட முருகப் பெருமானுக்கும் உரிய மாதமாகும். அதனால் கார்த்திகை மாதத்தில் வரும் சோமவாரத்தின் வீட்டின் பூஜை அறையில் முருகப் பெருமானுக்குரிய ஷட்கோண தீபம் ஏற்றி வழிபடுவதால் நம்முடைய வேண்டுதல்கள் நிறைவேறும். இது தவிர கார்த்திகை சோமவாரத்தில் யாராவது இரண்டு பேருக்கு அன்னதானம் வழங்குவது மிக மிக சிறந்தது. தானங்களில் சிறந்த தானம் அன்னதானம் என்பதால், உலகிற்கே படியளக்கும் ஈசனுக்குரிய விரத நாளில் அன்னதானம் வழங்குவதால் நம்முடைய கர்ம வினைகள் நீங்கும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..வருகிற 15ம் தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி:வானிலை மையம்
திமுகவிடம் தாலி கட்டிய மனைவி போல் தான் உள்ளனர் கூட்டணி கட்சிகள்: செல்லூர் ராஜூ விமர்சனம்!
சேலம் வருகிறார் விஜய்.. நாளை நிர்வாகிகள் சந்திப்பு.. 4,998 பேருக்கு மட்டுமே அனுமதி!
சத்துணவு ஊழியர்கள் போராட்டம்: நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார் நயினார் நாகேந்திரன்
தொலைந்த பைசா தினம்.. ஆமாங்க.. இப்படியும் ஒரு தினம் இருக்கு.. அதுவும் இன்றுதான் அது!
கமகமக்கும் இறால் தொக்கு.. நம்ம ஊரு ஸ்டைல்ல.. சாப்ட்டுப் பாருங்க.. நாக்கு ஊறும்!
தாயையும் தம்பியையும்.. பள்ளியில் புகுந்து மாணவர்களை வேட்டையாடிய 18 வயது திருநங்கை!
கல்யாணம் காது குத்தா.. சுப நிகழ்ச்சிகளுக்கு இனி அரசு பேருந்து உங்கள் வாசலில்!
ஒரு சிறு பயணம்.. நிறைவாக கடப்போம்.. A Short Journey
{{comments.comment}}