- ஸ்வர்ணலட்சுமி
சென்னை : கார்த்திகை சோமவாரம் என்பது, கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமைகளில் சிவ பெருமானுக்கு கடைபிடிக்கப்படும் வழிபாடு ஆகும். திங்கட்கிழமைகளில் சிவ பெருமானுக்கு இருக்கக் கூடிய விரதம் சோமவார விரதமாகும். இது கார்த்திகை மாதத்தில் வரும் போது கூடுதல் விசேஷமானதாக கருதப்படுகிறது.
திங்கட்கிழமை என்பது நவகிரகங்களில் சந்திரனுக்குரிய கிழமையாகும். இவரே மனக்குழப்பம், மன வேதனை, தடுமாற்றம், மனஅழுத்தம் ஆகியவற்றிற்கு காரணமானவராக கருதப்படுகிறார். சந்திரனுக்கு ஏற்பட்ட சாபத்தை சிவபெருமான் நீக்கிய மாதமாக கார்த்திகை மாதம் கருதப்படுகிறது. அதனால் கார்த்திகை மாதத்தில் வரும் சோமவாரங்களில் சிவ பெருமானுக்கு விரதம் இருந்தால் நம்முடைய வாழ்க்கையிலும் இருக்கும் பிரச்சனைகள் தீரும் என்பது நம்பிக்கை.
கார்த்திகை சோமவாரத்தில் அனைத்து சிவன் கோவில்களிலும் சங்காபிஷேகம் நடத்தப்படும். இதை சென்று தரிசிக்கலாம். இது தவிர வீடுகளில் மாலை நேரத்தில் வாசற்காலுக்கு அருகில் கோலமிட்டு நல்லெண்ணெய் அல்லது நெய்யால் அகல் விளக்கில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். நிலைவாசலுக்கு அருகில் மேலே குறிப்பிட்டுள்ள கோலத்தை அரிசி மாவு அல்லது கோலமாவில் போடுவது சிறப்பு. இதனை சிவன் கண் கோலம் என்பார்கள். இதன் மத்தியில் வரும் அமைப்பு சிவனின் முக்கண் வடிவத்தை கொண்டதாக இருப்பதால் இதனை சிவன் கண் கோலம் என்கிறோம். இந்த கோலத்தை வாசலில் போடுவதால் சிவனின் அருள் எப்போதும் வீட்டில் நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. இந்த கோலத்தை சுற்றி விளக்கேற்றி வைப்பது மிகவும் நல்லது.
சிவன் வேறு, முருகன் வேறு இல்லை என்பார்கள். கார்த்திகை மாதம் என்பது கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்ட முருகப் பெருமானுக்கும் உரிய மாதமாகும். அதனால் கார்த்திகை மாதத்தில் வரும் சோமவாரத்தின் வீட்டின் பூஜை அறையில் முருகப் பெருமானுக்குரிய ஷட்கோண தீபம் ஏற்றி வழிபடுவதால் நம்முடைய வேண்டுதல்கள் நிறைவேறும். இது தவிர கார்த்திகை சோமவாரத்தில் யாராவது இரண்டு பேருக்கு அன்னதானம் வழங்குவது மிக மிக சிறந்தது. தானங்களில் சிறந்த தானம் அன்னதானம் என்பதால், உலகிற்கே படியளக்கும் ஈசனுக்குரிய விரத நாளில் அன்னதானம் வழங்குவதால் நம்முடைய கர்ம வினைகள் நீங்கும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}