கரூர்: கரூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் சிட்டிங் எம்.பியான ஜோதிமணி பிரச்சாரத்தின் போது தனது தாயை நினைத்துக் கலங்கி கண்ணீர் விட்டதால் கூட்டத்தினர் அவருக்கு ஆறுதல் கூறினர்.
மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் என அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கரூர் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் சிட்டிங் எம்.பியான ஜோதிமணி, அவரது சொந்த கிராமமான பெரியதிருமங்கலத்தில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் மிகவும் உணர்ச்சிகரமாக காணப்பட்டார். ஜோதிமணி பேசுகையில், 300, 400 ரூபாய்க்கு விற்கப்பட்ட சிலிண்டர் இன்றைக்கு 1200, 2000 ரூபாய்க்கு விற்கப்படும் நிலைமைக்கு வந்துள்ளது. இந்த மாதிரியான நிலைமை மாற வேண்டும் என்றால் கை சின்னத்தில் ஓட்டு போட வேண்டும்.
உங்களுக்கு எல்லாம் என்னை நல்லா தெரியும். இதைச் சொல்லி அதை சொல்லி நான் ஒட்டு கேட்க வேண்டியது இல்ல. நான் 4 வருசம் 9 மாதம் 24 நாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கேன். என்னால் முடிந்த வரைக்கு சிறப்பாக பணி ஆற்றி இருக்கேன். பல நேரத்துத்துல நம்ம ஊருக்கு ராத்திரியில தான் வந்திருக்கேன். அந்த அளவுக்கு பணிச்சுமை இருக்கு.
அம்மா இருந்திருந்தாங்கனா அந்த பணிச்சுமை என்று நா தழு தழுத்த குரலில் கண்ணீருடன் பேசிய போது பேச்சை நிறுத்திய ஜோதிமணிக்கு, நாங்கெல்லாம் உங்களுக்கு அம்மாதான் அழுவாதீங்க என்று நம்பிக்கை வார்த்தைகள் கூறி ஆறுதல்படுத்தினர் கிராமத்துப் பெண்கள்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}