கரூர் கூட்ட நெரிசல்.. விஜய்யிடம் நாளை சம்பவம் செய்யப் போகும் சிபிஐ.. டெல்லியில் விசாரணை

Jan 11, 2026,01:59 PM IST

டெல்லி: தவெக தலைவர் விஜய்யிடம், நாளை டெல்லியில் சிபிஐ சிறப்பு விசாரணை நடைபெறவுள்ளது.


தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் நடிகர் விஜய், கரூர் கூட்ட நெரிசல் (Karur Stampede) தொடர்பான சிபிஐ விசாரணைக்காக டெல்லி செல்லவிருக்கிறார். 


கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட அரசியல் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர் மற்றும் 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக முதலில் தமிழக காவல்துறை விசாரித்த நிலையில், உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியது.


இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் கரூர் வந்து விசாரணையைத் தொடங்கினர். விசாரணையின்போது பல்வேறு அதிகாரிகள், தவெக தலைவர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதன் உச்சமாக தற்போது தவெக தலைவர் விஜய்யிடம் விசாரணை நடைபெறவுள்ளது.



ஜனவரி 12ம் தேதி அதாவது நாளை டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் நேரில் ஆஜராகுமாறு விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதற்காக விஜய் டெல்லி செல்லவுள்ளார். இன்று மாலை அல்லது நாளை அதிகாலையில் அவர் டெல்லி செல்லக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


கூட்டத்திற்கான அனுமதி, பாதுகாப்பு ஏற்பாடுகள், கூட்ட நெரிசல் ஏற்பட்டதற்கான காரணம் மற்றும் கட்சி நிர்வாகிகளின் பங்களிப்பு குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்படும். ஏற்கனவே விஜய்யின் கட்சி நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், சி.டி.ஆர் நிர்மல் குமார் போன்றோரிடம் சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது. மேலும், நேற்று (ஜனவரி 10) கரூரில் விஜய்யின் பிரசார வாகனத்தை தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.


இந்த வழக்கைத் தொடர்ந்து கண்காணித்து வரும் உச்ச நீதிமன்றம், ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழுவின் மேற்பார்வையில் இந்த சிபிஐ விசாரணை நடைபெறுவதை உறுதி செய்துள்ளது. விஜய்யின் அரசியல் பயணத்தில் இது ஒரு முக்கியமான சட்டப்போராட்டமாகப் பார்க்கப்படுகிறது.


விஜய் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகும்போது போதிய பாதுகாப்பு அளிக்குமாறு டெல்லி காவல்துறையிடம் தவெக முறையிட்டுள்ளது. அதை ஏற்றுள்ள டெல்லி காவல்துறை, உரிய பாதுகாப்பு நிச்சயம் அளிக்கப்படும் என்று உறுதி தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Budget: ஆகஸ்ட் 5-இல் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு!

news

பெரம்பூர் தேர்தல் வழக்கு : முதல்வர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

news

எம்எல்ஏ.,வை கைது செய்ய முடியுமா?: சபாநாயகர் விளக்கம்!

news

பிரதமர் மோடி நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்க வேண்டும் : ராகுல் காந்தி விமர்சனம்

news

“எங்களுக்கு அநீதி நடந்துள்ளது” – 'ஜனநாயகன்' ரிலீஸ் குறித்து இயக்குனர் எச்.வினோத் பரபரப்பு பேட்டி!

news

"புத்தகப் பை சுமை குறைக்கப்படும்": பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!

news

மக்களவையில் 2ஆவது நாளாக எதிர்கட்சிகள் அமளி: தொடர்ந்து அவை ஒத்திவைப்பு!

news

பிரதமர் மோடி தலைமையில் தே.ஜ.கூட்டணி எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம்

news

பி.வி. சிந்துவுக்கு விராட் கோலி சொன்ன அந்த ஒரு வார்த்தை.. ஜப்பானில் நடந்த மேஜிக்!

அதிகம் பார்க்கும் செய்திகள்