- கவி கலை
வேர் முளைக்கும் வேளையில்
என் வேதனை வெளிவரவில்லை,
தளிர் தழைக்கும் நாளில் - என்
தலை தூக்கியதில்லை,
இலை துளிர்க்கும் நொடியில்- என்
இறுமாப்பு துளிர்க்கவில்லை,
கிளை விரியும் பொழுதில் - என்
கிளர்ச்சி தெரியவில்லை,

பூப் பூக்கும் அழகில்-என்
புன்னகை அறியவில்லை,
காய் காய்க்கும் காலத்தில்-என்
கரிசனை எடுபடவில்லை,
மண்ணோடு மண்ணாகக் கிடந்தாலும்
மறைந்தும் மடியாத விதை நான்.
(சொ.கலையரசி, மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்தவர். தாய் CBSE பள்ளி வேதியியல் ஆசிரியையாக 3 ஆண்டுகள் பணிபுரிந்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக "எழுதுக" என்னும் புத்தகம் எழுதும் இயக்கத்தோடு இணைந்து எழுத்துப்பணியாற்றி வருகிறார். 1. புழுதிமண் கவிதைத்தொகுப்பு, 2. உடைந்தும் உருவெடு குறுநாவல் என இரு நூல்களைப் படைத்துள்ளார். இறையன்பு IAS முன்னிலையில் அவை வெளியிடப்பட்டன.)
Porselvi Rajan Tamil Poem: வெயிலோடு விளையாடி!
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
தோல்வியில் துவளேல்!
உழைப்பாளிகளின் மெளன பாஷை.. செயல் பேசட்டும்!
Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!
ஆகச் சிறந்த அறம்!
PR Helen Poems: இயற்கை
புத்தகம்
Kavi Kalai poem: விதை
{{comments.comment}}