"சார் மேடம்" எல்லாம் தேவையில்லை.."டீச்சர்" மட்டும் போதும்.. கேரளாவில் புரட்சி!

Jan 16, 2023,10:57 AM IST
திருவனந்தபுரம் : ஆசிரியர்களை சார், மேடம் என்றெல்லாம் கூப்பிடத் தேவையில்லை. வெறுமனே டீச்சர் என்று கூப்பிட்டால் போதும் என்று கேரள மனித சிறார் உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.



ஆசிரியர்களை பாலின பாகுபாட்டுடன் அழைப்பதற்கு முடிவு கட்ட வேண்டும் என்று கேரள சிறார் உரிமைகள் ஆணையத்திற்குக் கோரிக்கை வந்தது. இதையடுத்து ஆணையம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

அனைத்துப் பள்ளி ஆசிரியர்களையும், பாலின வேறுபாடு இன்றி அனைவருமே இனி  டீச்சர் என்று மட்டுமே சொல்ல வேண்டும். சார், மேடம் என்று சொல்லக் கூடாது என்று ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. சார், மேடம் என்பது பாலின வேறுபாட்டை வெளிக்காட்டுகிறது. மாறாக டீச்சர் என்பது பொதுப்படையாக உள்ளது, மரியாதைக்குரியதாகவும் இருக்கிறது என்று ஆணையம் விளக்கியுள்ளது.

இதுதொடர்பான உரிய சுற்றறிக்கையை அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்புமாறு மாநில பள்ளிக் கல்வித்துறையையும் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

பாட்டாளி மக்கள் கட்சி என்பது தனிப்பட்ட நபரின் சொத்து கிடையாது: அன்புமணி ராமதாஸ்!

news

கூடல் மாநகரில் கூடுகிறது கழகப் பொதுக்குழு.. பொதுத் தேர்தலில் வென்றிடுவோம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

ஈடில்லாத மாபெரும் கலைஞன் கமல்ஹாசன்.. அவரை சிறுமைப்படுத்துவதா?.. நடிகர் சங்கம் கண்டனம்

news

மாநிலங்களவை சீட் ஒதுக்கியதற்கு.. முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற கமலஹாசன்!

news

அன்புமணிக்கு பக்க பலமாகும்.. செளமியா அன்புமணி, 3 மகள்கள்.. உச்சகட்ட எதிர்பார்ப்பில் தொண்டர்கள்!

news

பாமக பொருளாளர் திலகபாமாவை நீக்கிய டாக்டர் ராமதாஸ்.. தொடர்வார் என்று அறிவித்தார் அன்புமணி!

news

அன்புதானே எல்லாம்.. பாமகவின் 6 மாவட்டங்களைச் சேர்ந்த 23 மா.செக்களில் 22 பேர் வருகை!

news

வண்டி வண்டியாக கொண்டு வந்து கொட்டப் போறாங்க.. என்ன பண்ணப் போறீங்க?.. விஜய் கேள்வி

news

தமிழ்நாட்டில் மேலும் 4 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள்.. முதல்வர் மு க ஸ்டாலின்

அதிகம் பார்க்கும் செய்திகள்