திருவனந்தபுரம்: கேரள மாநிலம் சபரிமலையில் விமான நிலையம் அமைப்பது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை கேரள மாநில அரசு மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது.
3500 அடி ரன்வேயுடன் கூடிய விமான நிலையமாக இது அமையும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்தனம்திட்டா அருகே செருவல்லியில் இந்த விமான நிலையத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான திட்ட அறிக்கை மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்ட அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்ப முதலமைச்சர் பினராயி விஜயனின் கொள்கை ரீதியான ஒப்புதலைப் பெறுவதற்காக நடத்தப்பட்ட ஒரு இறுதிக்கட்ட ஆய்வுக் கூட்டம் ஜூலை 2 அன்று அறிக்கைக்கு ஒப்புதல் அளித்தது.
திட்ட அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:
புதிய விமான நிலையத்தில் 3,500 மீட்டர் நீள ஓடுபாதை மற்றும் அதே அளவுள்ள டாக்ஸி பாதை இருக்கும்.
விமான நிறுத்துமிடம் (Apron) ஒரே நேரத்தில் இரண்டு கோட் E மற்றும் மூன்று கோட் C விமானங்கள் அல்லது ஏழு கோட் C விமானங்களை கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பயணிகள் முனையத்தின் வடிவமைப்பில் இரண்டு பல மாடி வளைவு அமைப்பு (Multiple Apron Ramp System) கொண்ட ஏரோபிரிட்ஜ்கள் இருக்கும். இவை ஒரே நேரத்தில் நான்கு கோட் C அல்லது இரண்டு கோட் E விமானங்களைக் கையாளும் திறன் கொண்டவை.
நீண்ட தூரம் செல்லும் பெரிய ரக விமானமான போயிங் 777-300ER (கோட் E) மாதிரி விமானமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெரிய அளவிலான விமானங்களையும் கூட கையாளக் கூடிய வகையில் விமான நிலையம் அமையும் என்பதை சுட்டிக் காட்டுகிறது.
பயணிகள் முனையக் கட்டிடம் 54,000 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்படும். இது ஆண்டுக்கு 70 லட்சம் பயணிகளை கையாளும் திறன் கொண்டது.
சரக்கு போக்குவரத்திற்காக 1,200 சதுர மீட்டர் பரப்பளவில் ஒரு தனி சரக்கு முனையம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த விமான நிலையத் திட்டத்திற்கு மொத்தம் 2,408 ஏக்கர் நிலம் தேவைப்படும். இதில், 950 ஏக்கர் நிலம் விமான நிறுவனத்திற்குச் சொந்தமாக இருக்கும். இது செயல்பாட்டுப் பகுதியைக் கொண்டிருக்கும். கூடுதலாக 400 ஏக்கர் நிலம் வணிக ரீதியாக குத்தகைக்கு விடப்படும்.
மீதமுள்ள நிலத்தை அரசு தன் வசம் வைத்துக் கொள்ளும். இது துணை உள்கட்டமைப்பு, ஆதரவு சேவைகள் மற்றும் விமான நிலையத்தின் செயல்பாட்டுடன் தொடர்புடைய பிற பொது நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும். நிலம் கையகப்படுத்தும் செலவுகள் தவிர்த்த கட்டுமானச் செலவு ₹5,377 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மறுவாழ்வு அளித்தல் உள்ளிட்ட நிலம் கையகப்படுத்தும் செலவுகள் ₹2,408 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, செயல்பாட்டு பயன்பாட்டிற்கான நிலத்தை மட்டும் கணக்கில் கொண்டால், மொத்த திட்டச் செலவு ₹7,047 கோடி என கணிக்கப்பட்டுள்ளது.
மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் இப்போது கொள்கை ரீதியான ஒப்புதலுக்காக இந்த திட்டத்தை ஆய்வு செய்யும். ஒப்புதல் அளிக்கப்பட்டால், சபரிமலை விமான நிலையம் கேரளாவின் ஐந்தாவது சர்வதேச விமான நிலையமாக மாறும். திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு மற்றும் கண்ணூர் ஆகிய விமான நிலையங்களுடன் இது இணையும்.
சபரிமலை யாத்திரை காலத்தில் பயண நேரத்தையும், கூட்ட நெரிசலையும் இந்த விமான நிலையம் கணிசமாக குறைக்கும் என்றும், பத்தனம்திட்டா-கோட்டயம்-இடுக்கி பகுதிகளுக்கு நீண்ட கால பொருளாதார நன்மைகளை கொண்டு வரும் என்றும் மாநில அரசு நம்புகிறது.
இதற்கிடையில், திட்ட அமலாக்கத்திற்கு முந்தைய நடவடிக்கையாக, வருவாய்த் துறை விமான நிலையத்திற்கான நிலம் கையகப்படுத்தும் கள ஆய்வைத் தொடங்கியுள்ளது. இந்த கள ஆய்வை நான்கு மாதங்களுக்குள் முடிக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி நாளை டில்லி பயணம்...நயினார் சொன்ன நல்லது.. யாருக்கு நடக்க போகிறது?
வாக்கு என்பது மக்களின் நம்பிக்கையை பெற்றதற்கான அடையாளம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
பாமக கட்சியும்,மாம்பழச் சின்னமும் ராமதாஸ் அவர்களுக்குத் தான் சொந்தம்: எம்எல்ஏ அருள் பரபரப்பு பேட்டி!
தேர்தலில் விஜய்-சீமானுக்கு தான் போட்டி...எங்களுக்கு கவலையில்லை: அமைச்சர் ஐ.பெரியசாமி
அதிமுக ஓட்டுகள் தவெகவுக்கு போகாது: விஜய்க்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அன்புமணிக்கே மாம்பழ சின்னம்.. தேர்தல் கமிஷன் சொல்லி விட்டது.. வழக்கறிஞர் பாலு தகவல்
ஒட்டுமொத்த மீடியாக்களையும் ஆக்கிரமித்த திமுக, தவெக.. எங்கே கோட்டை விடுகிறது அதிமுக?
10 நாள் கெடு முடிந்தது.. யாருக்கு புரிய வேண்டுமோ புரியும்.. செங்கோட்டையனின் புதிய மெசேஜ்
அன்புக்கரங்கள்.. இரு பெற்றோர்களையும் இழந்த குழந்தைகளுக்கு உதவும் திட்டம்.. இன்று முதல்!
{{comments.comment}}