சபரிமலையில் விமான நிலையம்.. 3500 அடி ரன்வேயுடன்.. விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு!

Jul 22, 2025,11:41 AM IST

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் சபரிமலையில் விமான நிலையம் அமைப்பது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை கேரள மாநில அரசு மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது.


3500 அடி ரன்வேயுடன் கூடிய விமான நிலையமாக இது அமையும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்தனம்திட்டா அருகே செருவல்லியில் இந்த விமான நிலையத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான திட்ட அறிக்கை மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 


இந்த திட்ட அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்ப முதலமைச்சர் பினராயி விஜயனின் கொள்கை ரீதியான ஒப்புதலைப் பெறுவதற்காக நடத்தப்பட்ட ஒரு இறுதிக்கட்ட ஆய்வுக் கூட்டம் ஜூலை 2 அன்று அறிக்கைக்கு ஒப்புதல் அளித்தது. 


திட்ட அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:




புதிய விமான நிலையத்தில் 3,500 மீட்டர் நீள ஓடுபாதை மற்றும் அதே அளவுள்ள டாக்ஸி பாதை இருக்கும்.


விமான நிறுத்துமிடம் (Apron) ஒரே நேரத்தில் இரண்டு கோட் E மற்றும் மூன்று கோட் C விமானங்கள் அல்லது ஏழு கோட் C விமானங்களை கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


பயணிகள் முனையத்தின் வடிவமைப்பில் இரண்டு பல மாடி வளைவு அமைப்பு (Multiple Apron Ramp System) கொண்ட ஏரோபிரிட்ஜ்கள் இருக்கும். இவை ஒரே நேரத்தில் நான்கு கோட் C அல்லது இரண்டு கோட் E விமானங்களைக் கையாளும் திறன் கொண்டவை.


நீண்ட தூரம் செல்லும் பெரிய ரக விமானமான போயிங் 777-300ER (கோட் E) மாதிரி விமானமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெரிய அளவிலான விமானங்களையும் கூட கையாளக் கூடிய வகையில் விமான நிலையம் அமையும் என்பதை சுட்டிக் காட்டுகிறது. 


பயணிகள் முனையக் கட்டிடம் 54,000 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்படும். இது ஆண்டுக்கு 70 லட்சம் பயணிகளை கையாளும் திறன் கொண்டது.


சரக்கு போக்குவரத்திற்காக 1,200 சதுர மீட்டர் பரப்பளவில் ஒரு தனி சரக்கு முனையம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.


இந்த விமான நிலையத் திட்டத்திற்கு மொத்தம் 2,408 ஏக்கர் நிலம் தேவைப்படும். இதில், 950 ஏக்கர்  நிலம் விமான நிறுவனத்திற்குச் சொந்தமாக இருக்கும். இது செயல்பாட்டுப் பகுதியைக் கொண்டிருக்கும். கூடுதலாக 400 ஏக்கர் நிலம் வணிக ரீதியாக குத்தகைக்கு விடப்படும்.


மீதமுள்ள நிலத்தை அரசு தன் வசம் வைத்துக் கொள்ளும். இது துணை உள்கட்டமைப்பு, ஆதரவு சேவைகள் மற்றும் விமான நிலையத்தின் செயல்பாட்டுடன் தொடர்புடைய பிற பொது நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும். நிலம் கையகப்படுத்தும் செலவுகள் தவிர்த்த கட்டுமானச் செலவு ₹5,377 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.


பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மறுவாழ்வு அளித்தல் உள்ளிட்ட நிலம் கையகப்படுத்தும் செலவுகள் ₹2,408 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, செயல்பாட்டு பயன்பாட்டிற்கான நிலத்தை மட்டும் கணக்கில் கொண்டால், மொத்த திட்டச் செலவு ₹7,047 கோடி என கணிக்கப்பட்டுள்ளது.


மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் இப்போது கொள்கை ரீதியான ஒப்புதலுக்காக இந்த திட்டத்தை ஆய்வு செய்யும். ஒப்புதல் அளிக்கப்பட்டால், சபரிமலை விமான நிலையம் கேரளாவின் ஐந்தாவது சர்வதேச விமான நிலையமாக மாறும். திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு மற்றும் கண்ணூர் ஆகிய விமான நிலையங்களுடன் இது இணையும்.


சபரிமலை யாத்திரை காலத்தில் பயண நேரத்தையும், கூட்ட நெரிசலையும் இந்த விமான நிலையம் கணிசமாக குறைக்கும் என்றும், பத்தனம்திட்டா-கோட்டயம்-இடுக்கி பகுதிகளுக்கு நீண்ட கால பொருளாதார நன்மைகளை கொண்டு வரும் என்றும் மாநில அரசு நம்புகிறது.


இதற்கிடையில், திட்ட அமலாக்கத்திற்கு முந்தைய நடவடிக்கையாக, வருவாய்த் துறை விமான நிலையத்திற்கான நிலம் கையகப்படுத்தும் கள ஆய்வைத் தொடங்கியுள்ளது. இந்த கள ஆய்வை நான்கு மாதங்களுக்குள் முடிக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 7ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!

news

ஸ்ரீகாகுளம் கோவில் நிர்வாகம் அனுமதி வாங்கவில்லை...விசாரணைக்கு ஆந்திர முதல்வர் உத்தரவு

news

அரசின் தோல்விக்காக.. ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளை கையேந்த வைப்பது கண்டிக்கத்தக்கது: அன்புமணி

news

மத்திய அரசு பள்ளிகளில் இந்தியை திணிக்கிறது...சித்தராமைய்யா காட்டம்

news

திமுகவிடம் இருந்து தமிழ்நாட்டை மீட்போம்.. 2026ல் உண்மையான மக்களாட்சியை அமைப்போம்: தவெக தலைவர் விஜய்

news

Aadhar update ஆதாரில் இன்று முதல் புதிதாக நடைமுறைக்கு வரும் மாற்றங்கள் பற்றி தெரியுமா?

news

டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோஹன் போபண்ணா அறிவிப்பு

news

ஸ்ரேயாஸ் ஐயர் சிட்னி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

news

தமிழ்நாடு என்றால் தமிழ் என்ற அடையாளத்தை தமிழகம் இழந்து வருகிறது: அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்