அடூர், கேரளா: கேரள மாநிலம் அடூர் பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன குருப் என்பவர் பத்தனம்திட்டா கோர்ட்டில் ஒரு வழக்குத் தொடர்ந்துள்ளார். இது கேரளாவையும் தாண்டி கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிக்கல் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ண குருப். முதியவர். இவர்தான் கோர்ட்டுக்கு வந்து நூதன வழக்கைப் போட்டவர். பத்தனம் திட்டா கோர்ட்டில் ராதாகிருஷ்ண குருப் தாக்கல் செய்த மனுவில், எனது பக்கத்து வீட்டில் அனில்குமார் என்பவர் வசிக்கிறார். அவர் கோழி, சேவல் வளர்க்கிறார். அவரது வீட்டு சேவல் அதிகாலையிலேயே கூவ ஆரம்பித்து விடுகிறது.
விடாமல் அது கூவுவதால் என்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை. அதிகாலை 3 மணிக்கே என்னை கூவி எழுப்பி விட்டு விடுகிறது. இதனால் எனது தூக்கம் கெட்டு பெரும் சிரமத்துக்குள்ளாகிறேன். அனில் குமாரிடம் இதுகுறித்துப் புகார் கூறியும் அவர் நடவடிக்கை எடுக்கவில்ல. இதுகுறித்து அதிகாரிகளுக்கு உரிய உத்தரவிட்டு அந்த சேவலை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்தப் புகாரை விசாரித்த கோர்ட், மாவட்ட வருவாய் அதிகாரி இதுகுறித்து விசாரிக்க உத்தரவிட்டது. இதையடுத்து ஆர்டிஓ அதிகாரிகள் உடனடியாக விசாரணையில் இறங்கினர். நேரடியாக அனில் குமார் வீட்டுக்கு வந்து ஆய்வு செய்தனர். அப்போது அனில் குமார் தனது சேவல், கோழிகளை வீட்டின் மொட்டை மாடியில் விட்டிருப்பது தெரிய வந்தது. அதில் உள்ள ஒரு சேவல்தான் குருப்பின் தூக்கத்தைக் கெடுப்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து அனில்குமாரையும், ராதாகிருஷ்ண குருப்பையும் உட்கார வைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையின்போது சம்பந்தப்பட்ட சேவலை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று அனில் குமாருக்கு உத்தரவிடப்பட்டது. அதாவது மொட்டை மாடியில் அந்த சேவலை வைக்காமல், வீட்டின் தென் பகுதியில் உள்ள இடத்திற்கு மாற்ற அனில் குமாருக்கு உத்தரவிடப்பட்டது. சேவலை இப்படி இடமாற்றம் செய்ய அவருக்கு 14 நாட்கள் அவகாசமும் அளிக்கப்ப்டுள்ளது.
சேவல் இடம் மாறிய பிறகாவது ராதாகிருஷ்ணன் குருப்பு நிம்மதியாக தூங்கட்டும்!
சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!
A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!
உருவம் முக்கியமல்ல, கடமையே முக்கியம்.. Conversation between minute and hour
மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!
What is yourss is Yours.. உனக்கானது உன்னை வந்தடையும்!
True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?
Porselvi Rajan Tamil Poem: வெயிலோடு விளையாடி!
Deepa Ravi Poem: வேறெதுவும் தேவையில்லை!
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
{{comments.comment}}