காலைல 3 மணி இருக்கும்.. சேவல் கொக்கரக்கோன்னு கூவிருது.. கோர்ட்டுக்குப் போன அடூர் ராதாகிருஷ்ணன்!

Feb 19, 2025,06:26 PM IST

அடூர், கேரளா: கேரள மாநிலம் அடூர் பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன குருப் என்பவர் பத்தனம்திட்டா கோர்ட்டில் ஒரு வழக்குத் தொடர்ந்துள்ளார். இது கேரளாவையும் தாண்டி கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.


பள்ளிக்கல் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ண குருப். முதியவர். இவர்தான் கோர்ட்டுக்கு வந்து நூதன வழக்கைப் போட்டவர்.  பத்தனம் திட்டா கோர்ட்டில் ராதாகிருஷ்ண குருப் தாக்கல் செய்த மனுவில், எனது பக்கத்து வீட்டில் அனில்குமார் என்பவர் வசிக்கிறார். அவர் கோழி, சேவல் வளர்க்கிறார். அவரது வீட்டு சேவல் அதிகாலையிலேயே கூவ ஆரம்பித்து விடுகிறது.


விடாமல் அது கூவுவதால் என்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை. அதிகாலை 3 மணிக்கே என்னை கூவி எழுப்பி விட்டு விடுகிறது. இதனால் எனது தூக்கம் கெட்டு பெரும் சிரமத்துக்குள்ளாகிறேன். அனில் குமாரிடம் இதுகுறித்துப் புகார் கூறியும் அவர் நடவடிக்கை எடுக்கவில்ல. இதுகுறித்து அதிகாரிகளுக்கு உரிய உத்தரவிட்டு அந்த சேவலை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.




இந்தப் புகாரை விசாரித்த கோர்ட், மாவட்ட வருவாய் அதிகாரி இதுகுறித்து விசாரிக்க உத்தரவிட்டது. இதையடுத்து ஆர்டிஓ அதிகாரிகள் உடனடியாக விசாரணையில் இறங்கினர். நேரடியாக அனில் குமார் வீட்டுக்கு வந்து ஆய்வு செய்தனர். அப்போது அனில் குமார் தனது சேவல், கோழிகளை வீட்டின் மொட்டை மாடியில் விட்டிருப்பது தெரிய வந்தது. அதில் உள்ள ஒரு சேவல்தான் குருப்பின் தூக்கத்தைக் கெடுப்பதும் தெரிய வந்தது. 


இதையடுத்து அனில்குமாரையும், ராதாகிருஷ்ண குருப்பையும் உட்கார வைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையின்போது சம்பந்தப்பட்ட சேவலை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று அனில் குமாருக்கு உத்தரவிடப்பட்டது. அதாவது மொட்டை மாடியில் அந்த சேவலை வைக்காமல், வீட்டின்  தென் பகுதியில் உள்ள இடத்திற்கு மாற்ற அனில் குமாருக்கு உத்தரவிடப்பட்டது. சேவலை இப்படி இடமாற்றம் செய்ய அவருக்கு 14 நாட்கள் அவகாசமும் அளிக்கப்ப்டுள்ளது.


சேவல் இடம் மாறிய பிறகாவது ராதாகிருஷ்ணன் குருப்பு நிம்மதியாக தூங்கட்டும்!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் இன்று16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

மாம்பழ விவசாயிகளின் நலனுக்காக... பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

news

தமிழ்நாட்டில் புதிய முதலீடுகள்... அம்பலமான திமுக அரசின் புளுகு: அன்புமணி காட்டம்

news

4 ஆண்டுகளாக அரசு முடங்கிக் கிடந்ததற்கு, இப்போது நடக்கும் கண்துடைப்பு முகாம்களே சாட்சி: அண்ணாமலை

news

ஆந்திராவில் பிரம்மாண்ட ஏஐ மையம் அமைக்கும் கூகுள்... இன்று ஒப்பந்தம் கையெழுத்து!

news

பொண்டாட்டி இலவசம் என்று கூறுவதா.. மனிதராகவே இருக்கத் தகுதியற்ற சி.வி. சண்முகம்.. அமைச்சர் கீதா ஜீவன்

news

முதல்வர் நிதீஷ் குமார் வீட்டின் முன் போராட்டம்.. சீட் கிடைக்காததால் ஜேடியு எம்.எல்.ஏ தர்ணா

news

பீகார் சட்டசபைத் தேர்தல்.. இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் தொடரும் இழுபறி

news

41 குடும்பங்களுக்கும் மாதம் ரூ. 5000.. தவெக சார்பில் ஜேப்பியார் கல்லூரி தலைவர் வழங்குகிறார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்