அடூர், கேரளா: கேரள மாநிலம் அடூர் பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன குருப் என்பவர் பத்தனம்திட்டா கோர்ட்டில் ஒரு வழக்குத் தொடர்ந்துள்ளார். இது கேரளாவையும் தாண்டி கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிக்கல் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ண குருப். முதியவர். இவர்தான் கோர்ட்டுக்கு வந்து நூதன வழக்கைப் போட்டவர். பத்தனம் திட்டா கோர்ட்டில் ராதாகிருஷ்ண குருப் தாக்கல் செய்த மனுவில், எனது பக்கத்து வீட்டில் அனில்குமார் என்பவர் வசிக்கிறார். அவர் கோழி, சேவல் வளர்க்கிறார். அவரது வீட்டு சேவல் அதிகாலையிலேயே கூவ ஆரம்பித்து விடுகிறது.
விடாமல் அது கூவுவதால் என்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை. அதிகாலை 3 மணிக்கே என்னை கூவி எழுப்பி விட்டு விடுகிறது. இதனால் எனது தூக்கம் கெட்டு பெரும் சிரமத்துக்குள்ளாகிறேன். அனில் குமாரிடம் இதுகுறித்துப் புகார் கூறியும் அவர் நடவடிக்கை எடுக்கவில்ல. இதுகுறித்து அதிகாரிகளுக்கு உரிய உத்தரவிட்டு அந்த சேவலை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்தப் புகாரை விசாரித்த கோர்ட், மாவட்ட வருவாய் அதிகாரி இதுகுறித்து விசாரிக்க உத்தரவிட்டது. இதையடுத்து ஆர்டிஓ அதிகாரிகள் உடனடியாக விசாரணையில் இறங்கினர். நேரடியாக அனில் குமார் வீட்டுக்கு வந்து ஆய்வு செய்தனர். அப்போது அனில் குமார் தனது சேவல், கோழிகளை வீட்டின் மொட்டை மாடியில் விட்டிருப்பது தெரிய வந்தது. அதில் உள்ள ஒரு சேவல்தான் குருப்பின் தூக்கத்தைக் கெடுப்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து அனில்குமாரையும், ராதாகிருஷ்ண குருப்பையும் உட்கார வைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையின்போது சம்பந்தப்பட்ட சேவலை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று அனில் குமாருக்கு உத்தரவிடப்பட்டது. அதாவது மொட்டை மாடியில் அந்த சேவலை வைக்காமல், வீட்டின் தென் பகுதியில் உள்ள இடத்திற்கு மாற்ற அனில் குமாருக்கு உத்தரவிடப்பட்டது. சேவலை இப்படி இடமாற்றம் செய்ய அவருக்கு 14 நாட்கள் அவகாசமும் அளிக்கப்ப்டுள்ளது.
சேவல் இடம் மாறிய பிறகாவது ராதாகிருஷ்ணன் குருப்பு நிம்மதியாக தூங்கட்டும்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}