அட்டை பெட்டியில் வழங்கப்பட்ட சிசுவின் சடலம்.. KMC பிணவறை உதவியாளர் சஸ்பெண்ட்!

Dec 11, 2023,05:44 PM IST

சென்னை: அட்டை பெட்டியில்  வைத்து குழந்தையின் சடலம் வழங்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை பிணவறை உதவியாளர் பன்னீர் செல்வம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.


ஒட்டுமொத்த மனங்களையும் சிதறடிக்கும் வகையிலான சம்பவம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நடந்து அனைவரையும் பதறச்  செய்தது. அந்த சம்பவத்திற்குக் காரணமான நபர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.


சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் மசூத். இவரது மனைவி செளம்யா. இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வந்தார். மிச்சாங் புயலின் போது அவருக்கு பிரசவ வழி ஏற்பட்டது. நாலாபக்கமும் வெள்ள நீர் சூழ்ந்த நிலையில் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. தண்ணீர் அதிகளவில் சூழ்ந்திருந்த காரணத்தினால் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடியவில்லை. ஆம்புலன்ஸுக்கு போன் போட்டும் லைன் கிடைக்கவில்லை. இந்த நிலையில் வீட்டிலேயே குழந்தை பிறந்தது.




குழந்தையின் தொப்புள் கூட எடுக்கப்படாத நிலையில் அக்கம் பக்கத்தினர் சேர்ந்து சைக்கிள் ரிக்ஷாவில் வைத்து பக்கத்தில் இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு செளம்யாவை அனுமதிக்க மறுத்துள்ளனர். பின்னர் போலீஸ் தலையீட்டின் பேரில் இன்னொரு மருத்துவமனையில் அனுமதித்து செளம்யாவுக்கு மட்டும் ட்ரீட்மென்ட் கொடுத்துள்ளனர். பின்னர் குழந்தையைத் தூக்கிக் கொண்டு தந்தை மசூத், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு ஓடியுள்ளார்.


அங்கு நடந்ததுதான் மிகப் பெரிய கொடுமை. இதுகுறித்து மசூத் கூறுகையில், எனது குழந்தை இறந்து விட்டது என்று கூறி அட்டைப் பெட்டியில் போட்டு மார்ச்சுவரியில் கொடுன்னு சென்னாங்க. நானும் கொண்டு போய் கொடுத்தேன். மறு நாள் ஆதார் கார்டு கொண்டு வரச் சொன்னாங்க. ஆதார்டு கார்டை கொடுத்துட்டு குழந்தையை அதே  அட்டை பெட்டியில போட்டு தான் கொடுத்தாங்க என்றார். அவர் அட்டைப் பெட்டியைத் தாங்கியபடி வந்த காட்சி தமிழ்நாட்டையே அதிர வைத்து விட்டது.


இவ்வளவு அலட்சியமாக அரசு மருத்துவமனை, அதிலும் தலைநகர் சென்னையில் உள்ள மிகப் பிரபலமான கீழ்ப்பாக்கம் மருத்துவமனை நடக்கலாமா என்ற பெரும் விமர்சனம் எழுந்தது.  இந்த விவகாரம் தொடர்பாக தற்போது விசாரணை நடத்தப்பட்டு, குழந்தையின் உடலை அட்டைப் பெட்டியில் போட்டு வழங்கிய பிணவறை உதவியாளர் பன்னீர் செல்வம் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 


இது தொடர்பாக விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், மறு உத்தரவு வரம் வரை பன்னீர் செல்வம் பணி இடைநீக்கம் தொடரும் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

சஞ்சய் தத்துக்கு இன்னொரு படம் பண்ணுவேன்.. அதுல மிஸ்டேக்கை சரி பண்ணிடுவேன் - லோகேஷ் கனகராஜ்

news

வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினார் சுபான்ஷு சுக்லா.. ஆக்ஸியம் 4 குழுவினரும் பத்திரமாக திரும்பினர்!

news

கோவை, நீலகிரிக்கு நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்

news

இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு

news

அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி

news

ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்

news

Brain Health: இந்த 3 உணவுகள் சாப்பிட்டால் மூளை பாதிப்பு ஏற்படும்...எச்சரிக்கும் டாக்டர்கள்

news

இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?

news

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

அதிகம் பார்க்கும் செய்திகள்