முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விமர்சித்த விஜய்... அவரது தராதரம் அவ்வளவு தான்: கே.என்.நேருவின் பதில்!

Aug 22, 2025,05:01 PM IST

திருச்சி:  அவரது தராதரம் அவ்வளவு தான். ஒரு மாநிலத்தின் முதல் அமைச்சர், பெரிய கட்சி தலைவர், 40 ஆண்டு காலம் அரசியலில் இருக்கிறார்.  நேற்று அரசியலுக்கு வந்துவிட்டு அவரை அப்படி சொல்வது தரம் தாழ்ந்த செயல் என்று அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.


தவெகவின் 2வது மாநில மாநாடு நேற்று மதுரை பாரபத்தி பகுதியில் மிக பிரம்மாண்ட அளவில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். அந்த மாநாட்டில் தவெக தலைவர் விஜய் பேசுகையில், ஸ்டாலின் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. கபட நாடகமாடும் திமுக அரசை ஆட்சியில் இருந்து அகற்றுவோம்.  இப்போது ஆட்சியில் இருக்கின்ற வெற்று விளம்பர மாடல் ஆட்சி என்ன செய்கிறது என்று தெரியுமா?. 




ரெய்டுன்னு ஒன்னு வந்துட்டா போதும். இதுவரை ஒரு முறை கூட போகாத கூட்டத்துக்கு கூட, அத காரணம் காட்டி டெல்லிக்கு போயி சீக்ரெட் மீட்டிங் நடத்துவார்கள். ஸ்டாலின் அங்கிள்... ஸ்டாலின் அங்கிள்... வாட்ஸ் அங்கிள் இட்ஸ் வெரி ராங் அங்கிள்...பாஜகவோடு உள்ளுக்குள்ள ஒரு உறவை வைத்துக்கொண்டு, வெளியே எதிர்க்கிற மாதிரி ஒரு டிராமா பண்ணிட்டு இருக்காங்க. எதிர்க்கட்சியாக இருந்தால் போங்க மோடி என்று பலூன் காட்டுவதும், இதே ஆளுங்கட்சியாக இருந்தால் வாங்க மோடி என்று குடைபிடித்து கும்பிடு போடுவார்கள்.


அங்கிள்.. அங்கிள்.. உங்களுக்கு மனசாட்சின்னு ஒன்னு இருந்துச்சுன்னா.. நான் கேட்கிற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க அங்கிள்.. நீங்கள் நடத்துகிற ஆட்சியில் நேர்மை இருக்கா, நியாயம் இருக்கா,  ஊழல் இல்லாமல் இருக்கா,  சட்டம் ஒழுங்கு சரியா இருக்கா, பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கா, பொதுமக்களுக்கு பாதுகாப்பு இருக்கா, இயற்கை வளங்களுக்கு பாதுகாப்பு இருக்கா.. சொல்லுங்க மை டியர் அங்கிள்.. என்று விமர்சித்து பேசியிருந்தார். 


இந்த நிலையில்,  இதற்கு திமுக அமைச்சர் கே என் நேரு  திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது,  விஜய்யின் தராதரம் அவ்வளவு தான். 40 ஆண்டு காலம் அரசியலில் இருப்பவரை அங்கிள் என விஜய் பேசியது தரம் தாழ்ந்த செயல். ஒரு மாநிலத்தோடு முதல்வர், பெரிய கட்சியோட தலைவரை, நேற்று அரசியலுக்கு வந்துவிட்டு, அவரை அப்படி சொல்லியிருப்பது அவரது தரம் தாழ்ந்த செயலாகத் தான் இருக்கும். இதற்கு மக்கள் 2026 தேர்தலில் பதில் சொல்வார்கள்.. நாங்களும் வரும் தேர்தலில் பதில் சொல்வோம். 10 பேர், 50 பேர் கூடிட்டாங்கன்னா ஒரு மாநில முதல்வரை எப்படி வேண்டும் என்றாலும் பேசலாம் என்பது எப்படி சரியாக இருக்கும்? என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கரூர் துயர சம்பவம்...விஜய் தாமதமாக வந்ததே காரணம்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் விளக்கம்!

news

கரூர் சம்பவம்...முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அரசு தவறிவிட்டது: சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி!

news

லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கு: நடிகர் விஷால் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

தீபாவளி வருது.. 4 நாளா லீவு கிடைச்சா நல்லாருக்கும்.. எதிர்பார்ப்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்!

news

கல்வி உதவித்தொகை வழங்காமல் நிறுத்தி வைப்பதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும்: அன்புமணி ராமதாஸ்!

news

வானிலை விடுத்த எச்சரிக்கை: 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்... 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!

news

தமிழ்க் கலாச்சாரத்தைக் கேவலப்படுத்தும் பிக் பாஸ்.. தடை செய்யுங்கள்.. த.வா.க. வேல்முருகன் ஆவேசம்

news

பீகார் தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன்.. நிதீஷ் குமார் தோற்பார்.. பிரஷாந்த் கிஷோர்

news

எல்லாமே பக்காவா செட் ஆயிருச்சு.. வட கிழக்கு பருவ மழை இன்று அல்லது நாளை தொடங்கலாம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்