1000 வருடம் பழமையான.. கொடைரோடு ஸ்ரீகுருநாத சுவாமி கோவில்.. 100 வருடங்களுக்குப் பின் கும்பாபிஷேகம்!

Feb 18, 2025,05:56 PM IST

- தேவி


மதுரை: திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள ஸ்ரீகுருநாத சுவாமி கோவிலில் 100 வருடங்களுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டு மகிழ்ந்தனர்.


குலதெய்வ வழிபாடு என்பது நமது குலத்தை காக்கும் கடவுளை குறிக்கும் என்பதாகும். எந்த ஒரு நல்ல விஷயத்தை செய்வதாக இருந்தாலும் தொலைதூர பயணம் மேற்கொள்ளும் போதும் தமிழர்கள் தங்களது வீட்டில் குலதெய்வத்தை நினைத்து காசு முடிந்து வைத்து தனது வேலையை தொடங்குவார்கள். இப்படி செய்வதால் அவர்கள் மேற்கொள்ளும் விஷயங்கள் நல்ல முறையில் நிறைவேறும் என்பது அவர்களது நம்பிக்கையாக இருந்து வருகின்றது.




இப்படி குலதெய்வங்களை போற்றி வணங்கும் குடும்பங்கள் தமிழ்நாட்டில் அதிகம். அப்படி ஒரு குலதெய்வத்தை பற்றி இன்று பார்க்கப் போகிறோம். மதுரை அருகே , திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகில் உள்ள கொடைரோட்டில் அமைந்துள்ளது ஸ்ரீ குருநாத சுவாமி கோவில்.


கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்கள் பழமையாது இக்கோவில். பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட பெருமைக்குரியது. காலப் போக்கில், நாயக்க மன்னர்கள் இக்கோவிலை பராமரித்து போற்றி வந்தனர். ஆட்சி மாற்றங்கள், போர் போன்ற காரணங்களால் இக்கோவில் பாளையக்காரர்கள் வசம் போய் விட்டது. பாளையக்காரர்கள், இக்கோவிலை சிறப்பாக பராமரித்து வந்தனர். 




இக்கோவிலானது மாலையகவுண்டம்பட்டி கணக்குப்பிள்ளை பங்காளிகளின் முதன்மையான குலதெய்வமாக இருக்கின்றது என்பது இதன் சிறப்பம்சங்களில் ஒன்று. சமயநல்லூரில் இருந்து பள்ளப்பட்டி வரை இந்தக்  கோவிலை குல தெய்வமாக ஏற்றவர்கள் உள்ளனர். இக்கோவில் ஒரு சிவ தலமாகும். இங்கு சிவபெருமான் "ஆடி அமர்ந்த கோலம்" ரூபத்தில் காட்சியளிக்கின்றார். இக்கோவிலில் சீலக்காரி அம்மனுக்கும் தனி பீடம்  உண்டு. 




இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த இக்கோவிலில், சமீபத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் மிகவும் சிறப்பாகவும்  விமரிசையாகவும் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகமானது 100 வருடங்களுக்குப் பிறகு நடைபெற்றது என்பது இதன் சிறப்பு அம்சமாகும். கும்பாபிஷேக தினத்தன்று 2000 பக்தர்களுக்கு அன்னதானம் அழைக்கப்பட்டது என்பது மற்றொரு சிறப்பாகும்.


சரி இந்தக் கோவிலுக்கு எப்படிப் போக வேண்டும்?




ரொம்ப சிம்பிள்.. மதுரையிலிருந்தோ அல்லது வேறு எந்த ஊரிலிருந்து வந்தாலும், ரயிலில் வருவதாக இருந்தால் கொடைரோடு ரயில் நிலையத்தில் இறங்கினால் போதும். அங்கிருந்து யாரிடம் கேட்டாலும் கோவிலைக் கூறுவார்கள். நடந்த செல்லும் தூரத்தில்தான் கோவில்  உள்ளது.


பஸ்சில் வருவதாக இருந்தால், கொடைரோடு பஸ் நிலையத்திலிருந்து நடந்து செல்லும் தொலைவில் தான் கோவில் உள்ளது. ஒருமுறை போய் வாருங்கள், குருநாத சுவாமியின் அருளைப் பெற்று நலம் பெறுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில் 2026ல் ஆட்சி மாற்றம் வரும்.. பாஜக கூட்டணி குறித்து சொல்ல முடியாது: டாக்டர் ராமதாஸ்!

news

35 புதிய கல்லூரிகள் புதிதாக திறந்தும் ஒரு ஆசிரியர் கூட புதிதாக நியமிக்கவில்லை: அன்புமணி ராமதாஸ்

news

ஜூன் 13,14 மற்றும் 15ம் தேதிகளில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்: வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

தவெக.,வில் இணைந்த அதிமுக, திமுக முன்னாள் எம்எல்ஏ.,க்கள்.. விஜய் தரும் மெசேஜ் என்ன?

news

IRS அதிகாரி அருண்ராஜூக்கு தவெகவில் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் பதவி: தவெக தலைவர் விஜய் அறிவிப்பு

news

Out Of Controlலில் இருக்கும் பாலியல் SIRகளை Control செய்யவது எப்போது?: எடப்பாடி பழனிச்சாமி கேள்வி

news

தவெகவுடன் கூட்டணி குறித்து விஜய்யிடம் தான் கேட்க வேண்டும்... கூட்டணி ஆட்சி வந்தால் நல்லது; பிரேமலதா

news

இன்று வைகாசி விசாகம் 2025 : முருகனுக்கு இந்த நைவேத்தியம் படைத்தால் வாழ்க்கையே மாறும்

news

ராஜமெளலி படத்தில் இணைந்த மாதவன்.. என்ன ரோல் தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்