ரூ 1.87 லட்சத்திற்கு ஏலம் போன கூரைக் கத்தாழை மீன்.. இதுதான் காரணமாம்.. அசர வைக்கும் மேட்டர்!

Apr 22, 2024,05:17 PM IST

தஞ்சாவூர்: ஒரு மீன் ரூ.1.87 லட்சத்திற்கு ஏலம்  போனதுதான் இப்போது டாக் ஆப் தி தமிழ்நாடு ஆக இருக்கிறது. அப்படி என்னங்க இருக்கு அந்த மீனில் என்றுதான் பலரும் ஆச்சரியத்துடன் கேட்கின்றனர். மேட்டர் இருக்குங்க.


இந்த மீனின் வயிற்றில் இருக்கும் காற்றுப்பைக்கு தான் கிராக்கியும், விலையும் அதிகமாம். இந்த காற்று பை மருத்துவ குணங்கள் அதிகம் கொண்டது என்பதால்தான் இந்த அளவுக்கு இந்த மீனுக்கு விலை வைக்கிறார்கள்.


அதிராம்பட்டினம் நகராட்சியில் உள்ள மல்லிப்பட்டினத்தில்  மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தில் இருந்து தினமும் மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடித்து விற்பனை செய்து வருகின்றனர். இங்கிருக்கும் மீன்களை வாங்கி ஏராளமானவர்கள் ஏலம் விடுவதும் வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.




அதிராம்பட்டினம் கரையூர் தெருவை சேர்ந்தவர் ரவி. இவர் மீன்பிடிக்க சென்ற போது, இவரது வலையில் அரிய வகை கூரை கத்தாழை மீன் சிக்கியது.  25 கிலோ எடையுள்ள  இந்த மீன் 1.87 லட்சத்திற்கு  ஏலம் போயுள்ளது. இதுதான் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வகை மீன்களுக்கு செவில் சுவாசத்தோடு, வயிற்று பகுதியிலும் ஒரு  சுவாச பையும் கூடுதலாக இருப்பதால், மற்ற மீன்களை விட இந்த மீன்கள் அதிகளவில் சுவாசிக்கும் தன்மை கொண்டிருக்குமாம்.


குறிப்பாக இந்த மீன்களின் அடி வயிற்றில் இருக்கும் சுவாச பை தான் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இந்த சுவாச பைக்கு நெட்டி என்று பெயராம். இந்த நெட்டி ஆண் மீன்களுக்கு பெரிதாகவும், பெண் மீன்களுக்கு சிறிய அளவிலும் இருக்குமாம். இந்த நெட்டி ஐசிங்கிளாஸ் எனும் பளபளக்கும் ஒரு வகை வேதிப்பொருட்களை கொண்டதாகும். இது விலை உயர்ந்த ஒயின் தயாரிக்கவும், மருந்துகள் தயாரிக்க மூலப்பொருளாகவும், ஆண்மையை போக்கும் மருந்தாகவும் இவை பயன்படுகிறது. இந்த நெட்டி கிராம் கணக்கில் விற்பனை செய்யப்பட்டு வருகிறதாம்.


ஒரு மீனில் 50 கிராம் அல்லது 100 கிராம் நெட்டி கிடைக்கும் என்று மீனவர்கள் கூறுகின்றனர். இந்த வகை மீன்கள் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களுக்கும் எற்றுமதி செய்யப்படுவதும் உண்டாம். இந்த கூரைக் கத்தாழை மீன் கிடைத்தால் அதைப் பிடிக்கும் மீனவர் லட்சாதிபதி ஆவது உறுதி என்று மீனவ மக்கள் சந்தோஷமாக கூறுகிறார்கள்.


சமீபத்திய செய்திகள்

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்