கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் ஆசிரியர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒரு மாத காலமாக பள்ளிக்கு வராமலேயே இருந்துள்ளார். அது குறித்து பள்ளி தலைமை ஆசிரியை விசாரித்ததில் பல திடுக்கிடும் சம்பவம்கள் வெளியாகியுள்ளது. அந்த மாணவியை அதே பள்ளியை சேர்ந்த 3 ஆசிரியர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக தகவல் வந்தது. இதனால் அந்த மாணவி கர்ப்பம் ஆகி கருக்கலைப்பு செய்ததாகவும், அதனால் பள்ளிக்கு வராமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் மாணவியின் பெற்றோர் உட்பட மற்ற மாணவர்களின் பெற்றோர்களும் இன்று பள்ளியின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து குற்றம் செய்த ஆசிரியருக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து அந்தப் பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் சின்னச்சாமி, ஆறுமுகம், பிரகாஷ் ஆகியோர் 3 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், மூன்று ஆசிரியர்களை இடைநீக்கம் செய்து மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவிக்கும் ஆசிரியர்களுக்கும் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது. மேலும், இந்த வழக்கில் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதால் போராட்டத்தை கைவிடும்படி போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}