சென்னை: புதுமுகங்கள் நடிக்கும் வித்தியாசமான த்ரில்லர் படம் தான் குற்றம் புதிது. இப்படத்திற்கு பூஜை போடப்பட்டுள்ளது.
"குற்றம் புதிது " படத்தை அறிமுக இயக்குனர் ரஜித் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். ஜிகேஆர் சினி ஆர்ட்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் டாக்டர் எஸ் கார்த்திகேயன், தருண் கார்த்திகேயன் பிரமாண்டாமாக தயாரிக்கும் படம்.

கதாநாயகனாக தருண் மற்றும் செஷ்வித்தா நாயகியாக நடிக்கிறார்கள். இவர்களுடன் மதுசூதன் ராவ், ராமசந்திரன், பாய்ஸ் ராஜன், பிரியதர்ஷினி, ஸ்ரீநிதி, சங்கீதா மற்றும் தினேஷ் செல்லையா, ஸ்ரீகாந்த், மீரா ராஜ், டார்லிங் நிவேதா ஆகியோர் நடிக்கிறார்கள்.
ரஜித், கிரிஷ் பாடல் வரி எழுத,ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, கரண் பி கிருபா இசையமைக்கிறார். கமலக்கண்ணன் படத் தொகுப்பை கவனிக்கிறார். இப்படத்திற்கு மக்கள் தொடர்பாளராக நித்தீஸ் ஸ்ரீராம், மணவை புவன், தயாரிப்பு மேலாளராய் ஆனந்த் பணியாற்றுகிறார். படத்தின் VISUAL EFFECTS பணிகளை WIREFRAME MEDIA நிறுவனம் ஏற்றுள்ளது.

அதிரடியாக உருவாகும் இந்த படம் “கற்பனைக்கு அப்பாற்பட்டதை எதார்த்தமான பாணியில் பேச காத்திருக்கிறது. இந்த படத்தின் பூஜை இன்று சென்னை பிரசாத் லேபில் சிறப்பாக நடைபெற்றது. படப்பிடிப்பு இம்மாதம் 23ம் தேதி தொடங்குகிறது. இப்படத்தை படக்குழுவினர் ஒரே கட்டமாக எடுத்து முடிக்க இருப்பதாக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இளம் அரசு ஊழியர்களை ஒட்டுமொத்தமாக வசீகரித்த தவெக.. திமுகவின் பின்னடைவு!
சட்டசபையை வென்ற கையோடு.. நாடாளுமன்றத்திற்குள்ளும் நுழைய தவெகவுக்கு ஒரு அரிய வாய்ப்பு!
விஜய்யின் எழுச்சி.. தப்புக் கணக்குப் போட்டு விட்டார்களா திராவிடக் கட்சிகள்?
ஆர் பி சௌத்ரி .. அவர் ஒரு அபூர்வம்!
The Clockmaker’s Apprentice.. ஒரு கடிகாரத்தை வைத்து பின்னப்பட்ட கதை!
Strong and of good courage.. இரும்பை விட மேலான வலிமை!
தனித்துவத்தையும், பண்பாட்டு விழுமியங்களையும்.. மெல்ல மெல்ல இழந்து வருகின்றோம்!
No one stands closer to you.. மனசாட்சியை விட சிறந்த நண்பர் யார்?
Following your own heart is a brave thing .. அங்க என்ன சொல்லுதோ.. அதுவே சரியானது!
{{comments.comment}}