பச்சைப் பட்டுடுத்தி.. தங்கக் குதிரை வாகனத்தில்.. வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்

Apr 23, 2024,10:18 AM IST

மதுரை: மதுரை வைகை ஆற்றில் பச்சைப் பட்டுடுத்தி, தங்கக் குதிரை வாகனத்தில் இறங்கினார் அருள்மிகு கள்ளழகர். பச்சைப் பட்டு உடுத்தியிருப்பதால் இந்த ஆண்டு நல்ல மழைப்பொழிவு கிடைத்து, விவசாயம் செழித்தோங்கும், வறட்சி நீங்கும் என்பது ஐதீகம் ஆகும்.


மதுரை சித்திரைத் திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வுகள் மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் வைகை ஆற்றில் அருள்மிகு கள்ளழகர் இறங்கும் வைபவம்தான். இரு வேறு கோவில்களின் விழாக்களை ஒருங்கிணைத்து மதுரையில் நடைபெறும் இந்த சித்திரைத் திருவிழா மிகப் பெரிய சமய ஒற்றுமைக்கான அடையாள விழாவாகும். சைவமும், வைணவமும் இங்கு கைகோர்த்து மக்களுக்கு அருள் பாலிக்கும் அதிசயமும், ஆச்சரியமும் உலகில் வேறு எங்கும் பார்க்க முடியாத ஒரு அற்புதமாகும்.


சைவ விழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி திருக்கல்யாணம் முடிந்து விட்ட நிலையில் இன்று வைணவத்தின் உச்சமான மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் மிகக் கோலாகலமாக, மிக விமரிசையாக நடந்தேறியது.


தங்கை மீனாட்சியின் திருமணத்திற்காக மதுரைக்குப் புறப்படுகிறார் கள்ளழகர். திருமாலிருஞ்சோலையிலிருந்து புறப்படும் அழகர் பெருமான், ஒவ்வொரு மண்டகப்படியாக சென்று சென்று அவர்களின் வரவேற்பைப் பெற்று மதுரை வருவதற்குள் மீனாட்சியின் திருமணம் நடந்து முடிந்து விடுகிறது. தங்கையின் கல்யாணத்தை நாம் வருவதற்கு முன்பே நடத்தி விட்டார்களே என்ற ஆதங்கத்தில் மதுரைக்குள்ளையே வராமல் அப்படியே ஆற்றோராமாகவே அவர் திரும்பச் சென்று விடுவதாக ஐதீகம்.




12 நாட்கள் நடைபெறும் இந்த சித்திரைத் திருவிழா மதுரை மட்டுமல்லாமல் தென் மாவட்ட மக்களுக்கே முத்திரைத் திருவிழாவாகும். மதுரையைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் அக்கம் பக்கத்து மாவட்டத்துக்காரர்களும் திரண்டு வந்து இதை கண்டு களித்து மகிழ்ந்து அருள் பெற்றுச் செல்வார்கள். கள்ளழகர் பெருமான் நேற்று மதுரைக்கு வந்து சேர்ந்தபோது தல்லாகுளம் பகுதியில் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. எதிர்சேவை என்று அழைக்கப்படுகிறது இந்த வரவேற்பு நிகழ்ச்சி. 


பச்சைப் பட்டுடுத்தி:  லட்சக்கணக்கில் கூடிய பக்தர்கள் மகிழ்ச்சி ஆரவாரத்தோடு தண்ணீர் பீய்ச்சி அழகரை மதுரைக்குள் வரவேற்றனர். அதன் பின்னர் இன்று காலை வைகை ஆற்றில் அழகர் இறங்கும் வைபவம் நடந்தேறியது.  ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை அணிந்து கொண்டு, பச்சைப் பட்டு உடுத்தி, தங்கக் குதிரை வாகனத்தில் காலை 6 மணியளவில் ஆற்றில் இறங்கி அருள் பாலித்தார் கள்ளழகர். கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த பிரவேசத்தை மகிழ்ச்சி பொங்க கொண்டாடி மகிழ்ந்தனர். பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சியடித்தும், கோவிந்தா கோவிந்தா என்று கோஷங்களை முழங்கியும் அழகரை வணங்கி மகிழ்ந்தனர்.


கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தையொட்டி சிறப்பானன பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விக்டர் மேம்பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. அங்கு முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள் அனுமதிக்கப்பட்டு அழகரை வசதியாக தரிசிக்க காவல்துறை ஏற்பாடு செய்திருந்ததை பலரது பாராட்டுக்களைப் பெற்றது. மத சார்பின்றி, ஜாதி பாகுபாடு இல்லாமல் அனைத்துத் தரப்பு மக்களும் கொண்டாடும் மதுரை சித்திரைத் திருவிழா இன்றுடன் நிறைவுக்கு வந்தது.

சமீபத்திய செய்திகள்

news

திருச்சி வருகிறார் பிரதமர் மோடி.. ரூ. 5650 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்

news

LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!

news

சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

news

கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்

news

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு

news

என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை

news

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி

news

சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு

அதிகம் பார்க்கும் செய்திகள்