ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்த.. லால் சலாம் படம் ஓடிடியில் ரிலீஸ்.. ரசிகர்கள் ஹாப்பி..!

Aug 27, 2024,03:41 PM IST

சென்னை:   ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான லால் சலாம் படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்து வெளியான லால் சலாம் படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். இவர்களுடன் விக்ராந்த், விஷ்ணு விஷால், விக்னேஷ், லிவிங்ஸ்டன்,செந்தில், ஜீவிதா, கே எஸ் ரவிக்குமார் மற்றும் தம்பி ராமையா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.




கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்ய இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.


கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு அதிரடியாக உருவான லால் சலாம் படம் கடந்த  பிப்ரவரி 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை தரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.


இந்த நிலையில் லால் சலாம் படம் வரும் செப்டம்பர் 20ஆம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் சிறப்பு தோற்றத்தில் நடித்த ரஜினியை காணவே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.


இதற்கிடையே ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் மற்றும் ரித்திகா சிங் என மிகப்பெரிய நட்சத்திரகள் நடித்த ஞானவேல் ராஜா இயக்கத்தில் வேட்டையன் திரைப்படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாக உள்ளது. தற்போது இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்