- அஸ்வின்
சென்னை: சற்றுமுன் வெளியாகி உள்ள கோட் திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் ப்ரோமோ அனைவரையும் பெரும் சர்ப்பிரைஸில் ஆழ்த்தியுள்ளது.
இதை நாங்க எதிர்பார்க்கவே இல்லையே.. இப்படி ஒரு இனிமையான சர்ப்பிரைஸா என்று விஜய் ரசிகர்களோடு, யுவன் ஷங்கர் ராஜா ரசிகர்களும் சேர்ந்து குஷியாகி விட்டனர்.
பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வரும் கோட் படத்தின் முதல் சிங்கிள் வேற லெவலில் பட்டையைக் கிளப்பியது. அது பார்ட்டி பாட்டு.. ஆனால் இப்போது வரப் போவது பேமிலி பாட்டு.. முதல் பாட்டை எழுதியவர் கார்த்தி வைரமுத்து.. 2வது பாட்டை எழுதியிருப்பவர் கபிலன் வைரமுத்து.

கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்பு புதிய கீதை படத்தில் இணைந்த விஜய் - யுவன் கூட்டணி இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளது ஆரம்பத்திலிருந்தே ரசிகர்களை எகிற வைத்து வருகிறது. இந்த திரைப்படத்தில் விஜய் இரண்டு பாடலை பாடியுள்ளார். முதல் பாடல் விசில் போடு மிகப்பெரிய சென்சேஷனாக இருந்து வருகிறது. இந்த நிலையில் 2வது சிங்கிள், விஜய் பிறந்த நாளான நாளை வெளியாகவுள்ளது. அதன் புரமோவை இன்று மாலை வெளியிட்டனர்.
இது பல சர்ப்பிரைஸ்களை அள்ளித் தெளித்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜாவின் சகோதரி பவதாரணியுடன் இணைந்து இப்பாடலை விஜய் பாடியுள்ளார் என்பதுதான் மிகப் பெரிய சர்ப்பிரைஸ். பவதாரணியின் கடைசி திரைப்பாடலாக இது இருக்கும் என்று தெரிகிறது. பாடலின் சில வரிகள்தான் இந்த புரோமோவில் இடம் பெற்றுள்ளது. ஆனால் பவதாரணியின் அந்தக் குரலைக் கேட்டதுமே கண்களில் நீர் துளிர்த்து விடுகிறது. அப்படி ஒரு உருக்கம்.
அதை விட பெரிய மகிழ்ச்சி விஜய்யின் அந்த தாலாட்டு வரிகள்.. பாடலில் விஜய் புகுந்து விளையாடியிருப்பார் என்று அந்த சில வரிகளே எடுத்துரைக்கிறது. விஜய் இளையராஜா குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருடன் இணைந்து பின்னணி பாடியுள்ளது இதுவே முதல் முறையாகும். விஜய்க்காக இளையராஜா பாடியுள்ளார்.. இளையராஜா இசையில் விஜய் பாடியுள்ளார். யுவன் இசையிலும் விஜய் பாடியுள்ளார்.. ஆனால் இளையராஜா குடும்பத்தைச் சேர்ந்த, அதிலும் மறைந்த பவதாரணியுடன் இணைந்து அவர் பாடியுள்ள இந்தப் பாடல் வேற லெவல் ஆச்சரியமாக அமைந்துள்ளது.
முழுப் பாடலையும் கேட்க இப்போதே ரசிகர்கள் பரவசமாக காத்திருக்கிறார்கள்.. பார்ட்டி டூ பேமிலியா என்றும் வெங்கட் பிரபுவை கேட்டு கலாய்த்துக் கொண்டுள்ளனர் ரசிகர்கள்.. புரோமோ இப்படி வெறித்தனமாக இருந்தால்.. முழுப் பாடல் வேற ரகமாக இருக்கும் இது நிச்சயம் பிரமாண்ட சாதனை படைக்கும் என்று ரசிகர்கள் உற்சாகமாக கூறி வருகிறார்கள்.
May 1: 'ஒவ்வொரு வேர்வைக்கும் வெற்றி வேர் வைக்கும்!'
மதுரை குலுங்கக் குலுங்க.. பச்சைப் பட்டுடுத்தி.. வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்
சித்திரை திருவிழா.. மதுரை குலுங்க.. கள்ளழகர் வைகை ஆற்றில் நாளை இறங்குகிறார்!
அனுபவம் அறிவோம்.. செலவு குறைந்த புதுவிதமான சிறந்த திருமணம்!
May 1.. உழைப்பாளர் தினம்.. தொழிலாளிகள் உழைப்பு.. இது மேதின சிறப்பு!
May 1: காலத்தின் நெற்றியில் நீ இடும் கையெழுத்து.. காய்ந்த உன் கரங்களின் வியர்வை முத்து!
ரவிவர்மன் எழுதாத கலையோ.. மறக்க முடியாத ஓவிய வித்தகர்.. ராஜா ரவிவர்மா!
சித்தார்த்தனின் புத்த பூர்ணிமா!
அழகு மாறும்.. ஆன்மா அப்படியே இருக்கும்!
{{comments.comment}}