- அஸ்வின்
சென்னை: சற்றுமுன் வெளியாகி உள்ள கோட் திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் ப்ரோமோ அனைவரையும் பெரும் சர்ப்பிரைஸில் ஆழ்த்தியுள்ளது.
இதை நாங்க எதிர்பார்க்கவே இல்லையே.. இப்படி ஒரு இனிமையான சர்ப்பிரைஸா என்று விஜய் ரசிகர்களோடு, யுவன் ஷங்கர் ராஜா ரசிகர்களும் சேர்ந்து குஷியாகி விட்டனர்.
பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வரும் கோட் படத்தின் முதல் சிங்கிள் வேற லெவலில் பட்டையைக் கிளப்பியது. அது பார்ட்டி பாட்டு.. ஆனால் இப்போது வரப் போவது பேமிலி பாட்டு.. முதல் பாட்டை எழுதியவர் கார்த்தி வைரமுத்து.. 2வது பாட்டை எழுதியிருப்பவர் கபிலன் வைரமுத்து.

கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்பு புதிய கீதை படத்தில் இணைந்த விஜய் - யுவன் கூட்டணி இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளது ஆரம்பத்திலிருந்தே ரசிகர்களை எகிற வைத்து வருகிறது. இந்த திரைப்படத்தில் விஜய் இரண்டு பாடலை பாடியுள்ளார். முதல் பாடல் விசில் போடு மிகப்பெரிய சென்சேஷனாக இருந்து வருகிறது. இந்த நிலையில் 2வது சிங்கிள், விஜய் பிறந்த நாளான நாளை வெளியாகவுள்ளது. அதன் புரமோவை இன்று மாலை வெளியிட்டனர்.
இது பல சர்ப்பிரைஸ்களை அள்ளித் தெளித்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜாவின் சகோதரி பவதாரணியுடன் இணைந்து இப்பாடலை விஜய் பாடியுள்ளார் என்பதுதான் மிகப் பெரிய சர்ப்பிரைஸ். பவதாரணியின் கடைசி திரைப்பாடலாக இது இருக்கும் என்று தெரிகிறது. பாடலின் சில வரிகள்தான் இந்த புரோமோவில் இடம் பெற்றுள்ளது. ஆனால் பவதாரணியின் அந்தக் குரலைக் கேட்டதுமே கண்களில் நீர் துளிர்த்து விடுகிறது. அப்படி ஒரு உருக்கம்.
அதை விட பெரிய மகிழ்ச்சி விஜய்யின் அந்த தாலாட்டு வரிகள்.. பாடலில் விஜய் புகுந்து விளையாடியிருப்பார் என்று அந்த சில வரிகளே எடுத்துரைக்கிறது. விஜய் இளையராஜா குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருடன் இணைந்து பின்னணி பாடியுள்ளது இதுவே முதல் முறையாகும். விஜய்க்காக இளையராஜா பாடியுள்ளார்.. இளையராஜா இசையில் விஜய் பாடியுள்ளார். யுவன் இசையிலும் விஜய் பாடியுள்ளார்.. ஆனால் இளையராஜா குடும்பத்தைச் சேர்ந்த, அதிலும் மறைந்த பவதாரணியுடன் இணைந்து அவர் பாடியுள்ள இந்தப் பாடல் வேற லெவல் ஆச்சரியமாக அமைந்துள்ளது.
முழுப் பாடலையும் கேட்க இப்போதே ரசிகர்கள் பரவசமாக காத்திருக்கிறார்கள்.. பார்ட்டி டூ பேமிலியா என்றும் வெங்கட் பிரபுவை கேட்டு கலாய்த்துக் கொண்டுள்ளனர் ரசிகர்கள்.. புரோமோ இப்படி வெறித்தனமாக இருந்தால்.. முழுப் பாடல் வேற ரகமாக இருக்கும் இது நிச்சயம் பிரமாண்ட சாதனை படைக்கும் என்று ரசிகர்கள் உற்சாகமாக கூறி வருகிறார்கள்.
வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அனைவரும் கம்பி எண்ணப்போவது உறுதி: எடப்பாடி பழனிச்சாமி
அப்பா வின் ஆட்சியில் தொடர்ந்து காணாமல் போகும் அப்பாவி குழந்தைகள்: நயினார் நாகேந்திரன்
புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?
என் திரை வாழ்வை சீர்குலைக்க நடந்த சதி செயல்: நடிகர் திலீப் பேட்டி
ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு
பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!
திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற திருகொண்டீஸ்வரம் .. பசுபதீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர யாகம்
எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை...வெள்ளியின் விலை நிலவரம் என்ன தெரியுமா?
{{comments.comment}}