- அஸ்வின்
சென்னை: சற்றுமுன் வெளியாகி உள்ள கோட் திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் ப்ரோமோ அனைவரையும் பெரும் சர்ப்பிரைஸில் ஆழ்த்தியுள்ளது.
இதை நாங்க எதிர்பார்க்கவே இல்லையே.. இப்படி ஒரு இனிமையான சர்ப்பிரைஸா என்று விஜய் ரசிகர்களோடு, யுவன் ஷங்கர் ராஜா ரசிகர்களும் சேர்ந்து குஷியாகி விட்டனர்.
பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வரும் கோட் படத்தின் முதல் சிங்கிள் வேற லெவலில் பட்டையைக் கிளப்பியது. அது பார்ட்டி பாட்டு.. ஆனால் இப்போது வரப் போவது பேமிலி பாட்டு.. முதல் பாட்டை எழுதியவர் கார்த்தி வைரமுத்து.. 2வது பாட்டை எழுதியிருப்பவர் கபிலன் வைரமுத்து.

கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்பு புதிய கீதை படத்தில் இணைந்த விஜய் - யுவன் கூட்டணி இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளது ஆரம்பத்திலிருந்தே ரசிகர்களை எகிற வைத்து வருகிறது. இந்த திரைப்படத்தில் விஜய் இரண்டு பாடலை பாடியுள்ளார். முதல் பாடல் விசில் போடு மிகப்பெரிய சென்சேஷனாக இருந்து வருகிறது. இந்த நிலையில் 2வது சிங்கிள், விஜய் பிறந்த நாளான நாளை வெளியாகவுள்ளது. அதன் புரமோவை இன்று மாலை வெளியிட்டனர்.
இது பல சர்ப்பிரைஸ்களை அள்ளித் தெளித்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜாவின் சகோதரி பவதாரணியுடன் இணைந்து இப்பாடலை விஜய் பாடியுள்ளார் என்பதுதான் மிகப் பெரிய சர்ப்பிரைஸ். பவதாரணியின் கடைசி திரைப்பாடலாக இது இருக்கும் என்று தெரிகிறது. பாடலின் சில வரிகள்தான் இந்த புரோமோவில் இடம் பெற்றுள்ளது. ஆனால் பவதாரணியின் அந்தக் குரலைக் கேட்டதுமே கண்களில் நீர் துளிர்த்து விடுகிறது. அப்படி ஒரு உருக்கம்.
அதை விட பெரிய மகிழ்ச்சி விஜய்யின் அந்த தாலாட்டு வரிகள்.. பாடலில் விஜய் புகுந்து விளையாடியிருப்பார் என்று அந்த சில வரிகளே எடுத்துரைக்கிறது. விஜய் இளையராஜா குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருடன் இணைந்து பின்னணி பாடியுள்ளது இதுவே முதல் முறையாகும். விஜய்க்காக இளையராஜா பாடியுள்ளார்.. இளையராஜா இசையில் விஜய் பாடியுள்ளார். யுவன் இசையிலும் விஜய் பாடியுள்ளார்.. ஆனால் இளையராஜா குடும்பத்தைச் சேர்ந்த, அதிலும் மறைந்த பவதாரணியுடன் இணைந்து அவர் பாடியுள்ள இந்தப் பாடல் வேற லெவல் ஆச்சரியமாக அமைந்துள்ளது.
முழுப் பாடலையும் கேட்க இப்போதே ரசிகர்கள் பரவசமாக காத்திருக்கிறார்கள்.. பார்ட்டி டூ பேமிலியா என்றும் வெங்கட் பிரபுவை கேட்டு கலாய்த்துக் கொண்டுள்ளனர் ரசிகர்கள்.. புரோமோ இப்படி வெறித்தனமாக இருந்தால்.. முழுப் பாடல் வேற ரகமாக இருக்கும் இது நிச்சயம் பிரமாண்ட சாதனை படைக்கும் என்று ரசிகர்கள் உற்சாகமாக கூறி வருகிறார்கள்.
சென்னை புத்தகக் கண்காட்சி 2026.. தேதி சொல்லியாச்சு.. புத்தகப் பிரியர்களே.. ரெடியாகுங்க!
தென்காசி மற்றும் திருநெல்வேலியில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் கொடுத்த அலர்ட்!
மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது அரசியலா?.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
இந்தியா முழுவதும் இன்று ஒரே நாளில் 500க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் ரத்து
திருப்பரங்குன்றம் தீப வழக்கு... தீர்ப்பு ஒத்திவைப்பு: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
நான் எந்த சூழ்நிலையிலும் தனிக் கட்சி ஆரம்பிப்பேன் என்று சொல்லவில்லை ஓ. பன்னீர்செல்வம்!
சென்னையில்.. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படும் அபாயம்!
ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு.. ரிசர்வ் வங்கி நடவடிக்கை.. இஎம்ஐ குறையலாம்!
திருவண்ணாமலை தூய்மைப் பணியாளர்களை.. கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன கலெக்டர்
{{comments.comment}}