- அஸ்வின்
சென்னை: சற்றுமுன் வெளியாகி உள்ள கோட் திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் ப்ரோமோ அனைவரையும் பெரும் சர்ப்பிரைஸில் ஆழ்த்தியுள்ளது.
இதை நாங்க எதிர்பார்க்கவே இல்லையே.. இப்படி ஒரு இனிமையான சர்ப்பிரைஸா என்று விஜய் ரசிகர்களோடு, யுவன் ஷங்கர் ராஜா ரசிகர்களும் சேர்ந்து குஷியாகி விட்டனர்.
பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வரும் கோட் படத்தின் முதல் சிங்கிள் வேற லெவலில் பட்டையைக் கிளப்பியது. அது பார்ட்டி பாட்டு.. ஆனால் இப்போது வரப் போவது பேமிலி பாட்டு.. முதல் பாட்டை எழுதியவர் கார்த்தி வைரமுத்து.. 2வது பாட்டை எழுதியிருப்பவர் கபிலன் வைரமுத்து.

கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்பு புதிய கீதை படத்தில் இணைந்த விஜய் - யுவன் கூட்டணி இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளது ஆரம்பத்திலிருந்தே ரசிகர்களை எகிற வைத்து வருகிறது. இந்த திரைப்படத்தில் விஜய் இரண்டு பாடலை பாடியுள்ளார். முதல் பாடல் விசில் போடு மிகப்பெரிய சென்சேஷனாக இருந்து வருகிறது. இந்த நிலையில் 2வது சிங்கிள், விஜய் பிறந்த நாளான நாளை வெளியாகவுள்ளது. அதன் புரமோவை இன்று மாலை வெளியிட்டனர்.
இது பல சர்ப்பிரைஸ்களை அள்ளித் தெளித்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜாவின் சகோதரி பவதாரணியுடன் இணைந்து இப்பாடலை விஜய் பாடியுள்ளார் என்பதுதான் மிகப் பெரிய சர்ப்பிரைஸ். பவதாரணியின் கடைசி திரைப்பாடலாக இது இருக்கும் என்று தெரிகிறது. பாடலின் சில வரிகள்தான் இந்த புரோமோவில் இடம் பெற்றுள்ளது. ஆனால் பவதாரணியின் அந்தக் குரலைக் கேட்டதுமே கண்களில் நீர் துளிர்த்து விடுகிறது. அப்படி ஒரு உருக்கம்.
அதை விட பெரிய மகிழ்ச்சி விஜய்யின் அந்த தாலாட்டு வரிகள்.. பாடலில் விஜய் புகுந்து விளையாடியிருப்பார் என்று அந்த சில வரிகளே எடுத்துரைக்கிறது. விஜய் இளையராஜா குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருடன் இணைந்து பின்னணி பாடியுள்ளது இதுவே முதல் முறையாகும். விஜய்க்காக இளையராஜா பாடியுள்ளார்.. இளையராஜா இசையில் விஜய் பாடியுள்ளார். யுவன் இசையிலும் விஜய் பாடியுள்ளார்.. ஆனால் இளையராஜா குடும்பத்தைச் சேர்ந்த, அதிலும் மறைந்த பவதாரணியுடன் இணைந்து அவர் பாடியுள்ள இந்தப் பாடல் வேற லெவல் ஆச்சரியமாக அமைந்துள்ளது.
முழுப் பாடலையும் கேட்க இப்போதே ரசிகர்கள் பரவசமாக காத்திருக்கிறார்கள்.. பார்ட்டி டூ பேமிலியா என்றும் வெங்கட் பிரபுவை கேட்டு கலாய்த்துக் கொண்டுள்ளனர் ரசிகர்கள்.. புரோமோ இப்படி வெறித்தனமாக இருந்தால்.. முழுப் பாடல் வேற ரகமாக இருக்கும் இது நிச்சயம் பிரமாண்ட சாதனை படைக்கும் என்று ரசிகர்கள் உற்சாகமாக கூறி வருகிறார்கள்.
திருப்பரங்குன்றம் விவகாரம்.. மதுரை ஹைகோர்ட் தீர்ப்பை எதிர்த்து.. உச்சநீதிமன்றத்தை நாடும் தமிழக அரசு
திருப்பரங்குன்றம் விவகாரம்... தமிழக அரசின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி
பாஜக காலுன்ற முடியாத மாநிலம் தமிழகம்..மத்திய அரசு வஞ்சிக்கிற போக்கை கடைபிடிக்குறது: செல்வப்பெருந்தகை
மாம்பழம் சின்னம் முடக்கப்படும்...பாமக வழக்கில் தேர்தல் கமிஷன் பதில்
திமுக.,வுடன் பேச்சுவார்த்தை நடத்திய காங்கிரஸ் ஐவர் குழு...பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
{{comments.comment}}