சென்னை: ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜீத் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் தங்கள் கையில் மை வைத்து, வாக்குகளை செலுத்தி தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளனர்.
கடந்த இரண்டு மாதங்களாக லோக்சபா தேர்தலுக்காக அனைவரும் காத்திருந்த எதிர்பார்ப்பு இன்று பூர்த்தியாகிவிட்டது. நடிகர்கள் நடிகைகள், பல்வேறு கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் என காலை முதலிலே நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்கினை செலுத்தி வருகின்றனர்.

இன்று காலை முதல் ஆளாக அஜீத்தான் வாக்களித்தார். வாக்குச் சாவடியை திறப்பதற்கு முன்பாகவே வந்து விட்டார் அஜீத். காத்திருந்து தனது வாக்கை செலுத்தி விட்டு கிளம்பிச் சென்றார். மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமலஹாசன் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அரசு பள்ளியில் தனது வாக்கினை செலுத்தினார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது வாக்கினை செலுத்தி தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.
நடிகர் ஹரிஷ் கல்யாண் வளசரவாக்கம் பள்ளியில் தனது வாக்கினை செலுத்தினார். நடிகர் கருணாகரன் திருவான்மியூரில் தனது குடும்பத்துடன் வந்து தனது வாக்கினை செலுத்தினார்.

நடிகர்கள் சிவகார்த்திகேயன், யோகி பாபு, உதயநிதி ஸ்டாலின், விஜய் சேதுபதி, நடிகரும், எம்பியுமான விஜய் வசந்த் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் தங்கள் வாக்கினை செலுத்தினார்கள். நடிகை குஷ்பூ சுந்தர் சி தனது மகள்களுடன் எனது வாக்கினை செலுத்தினார்.

நடிகை திரிஷாவும் தனது வாக்கை இன்று செலுத்தி ஜனநாயக கடமையாற்றினார். விஜய் சேதுபதி, நடிகர் மன்சூர் அலிகான், இயக்குநர் வெற்றி மாறன், யோகிபாபு, விந்தியா, இயக்குநர் அமீர், உறியடி விஜயக்குமார், இயக்குநர் செல்வராகவன், நடிகர் தனுஷ், இயக்குநர் ஐஆர்வி உதயக்குமார், நடிகை சினேகா, நடிகர் பிரசன்னா, நடிகை அதிதி பாலன், இயக்குநர் லிங்குசாமி என திரையுலகினர் பெரும் திரளாக வந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

இசைஞானி இளையராஜாவும் இன்று வரிசையில் நின்று வாக்களித்து விட்டுச் சென்றார். நடிகை வரலட்சுமி சரத்குமாரும் வாக்களித்து தனது ஜனநாயக கடமையாற்றினார்.
எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை...வெள்ளியின் விலை நிலவரம் என்ன தெரியுமா?
பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்தது போல.. பழமொழியும் உண்மை பொருளும்!
சுவையான சூப்பரான கொத்தமல்லி தொக்கு ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் பண்ணுங்க!
ஏகாம்பரநாதர் கோவிலில் கும்பாபிஷேகம்.. பக்தி வெள்ளத்தில் மூழ்கிய கோவில் நகரம் காஞ்சிபுரம்!
கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்
எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!
உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!
Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!
{{comments.comment}}