சென்னை: ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜீத் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் தங்கள் கையில் மை வைத்து, வாக்குகளை செலுத்தி தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளனர்.
கடந்த இரண்டு மாதங்களாக லோக்சபா தேர்தலுக்காக அனைவரும் காத்திருந்த எதிர்பார்ப்பு இன்று பூர்த்தியாகிவிட்டது. நடிகர்கள் நடிகைகள், பல்வேறு கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் என காலை முதலிலே நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்கினை செலுத்தி வருகின்றனர்.
இன்று காலை முதல் ஆளாக அஜீத்தான் வாக்களித்தார். வாக்குச் சாவடியை திறப்பதற்கு முன்பாகவே வந்து விட்டார் அஜீத். காத்திருந்து தனது வாக்கை செலுத்தி விட்டு கிளம்பிச் சென்றார். மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமலஹாசன் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அரசு பள்ளியில் தனது வாக்கினை செலுத்தினார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது வாக்கினை செலுத்தி தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.
நடிகர் ஹரிஷ் கல்யாண் வளசரவாக்கம் பள்ளியில் தனது வாக்கினை செலுத்தினார். நடிகர் கருணாகரன் திருவான்மியூரில் தனது குடும்பத்துடன் வந்து தனது வாக்கினை செலுத்தினார்.
நடிகர்கள் சிவகார்த்திகேயன், யோகி பாபு, உதயநிதி ஸ்டாலின், விஜய் சேதுபதி, நடிகரும், எம்பியுமான விஜய் வசந்த் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் தங்கள் வாக்கினை செலுத்தினார்கள். நடிகை குஷ்பூ சுந்தர் சி தனது மகள்களுடன் எனது வாக்கினை செலுத்தினார்.
நடிகை திரிஷாவும் தனது வாக்கை இன்று செலுத்தி ஜனநாயக கடமையாற்றினார். விஜய் சேதுபதி, நடிகர் மன்சூர் அலிகான், இயக்குநர் வெற்றி மாறன், யோகிபாபு, விந்தியா, இயக்குநர் அமீர், உறியடி விஜயக்குமார், இயக்குநர் செல்வராகவன், நடிகர் தனுஷ், இயக்குநர் ஐஆர்வி உதயக்குமார், நடிகை சினேகா, நடிகர் பிரசன்னா, நடிகை அதிதி பாலன், இயக்குநர் லிங்குசாமி என திரையுலகினர் பெரும் திரளாக வந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
இசைஞானி இளையராஜாவும் இன்று வரிசையில் நின்று வாக்களித்து விட்டுச் சென்றார். நடிகை வரலட்சுமி சரத்குமாரும் வாக்களித்து தனது ஜனநாயக கடமையாற்றினார்.
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
{{comments.comment}}