சென்னை : பிரபல தமிழ் சினிமா தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் இன்று காலை உடல் நலக்குறைவின் காரணமாக காலமானார். அவருக்கு வயது 86. வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார். இந்திய சினிமா துறையில் ஒரு பெரிய ஆளுமையாக இருந்த ஏவிஎம் சரவணனின் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது இழப்பிற்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஏவிஎம் சரவணனின் உடல் அஞ்சலிக்காக ஏவிஎம் ஸ்டுடியோஸில் இன்று பிற்பகல் 3:30 மணி வரை வைக்கப்பட்டிருக்கும் என அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். சென்னை, ஏவிஎம் ஸ்டுடியோஸ், 3வது மாடியில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம். தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய சக்தியாக விளங்கிய ஏவிஎம் சரவணன், புகழ்பெற்ற ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தை பல ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தி வந்தார். இவரது தந்தை ஏவி மெய்யப்ப செட்டியார் துவங்கிய ஏவிஎம் நிறுவனத்தை திறம்பட நடத்தி வந்தவர் ஏவிஎம் சரவணன்.

இந்தியத் திரைப்படக் கூட்டமைப்பின் தலைவர், அகில உலகத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் துணைத்தலைவர், தமிழ்நாட்டுசு சுற்றுலா வாரியத்தின் பண்பாட்டுக் கழக இயக்குநர், சென்னை மாநகர செரீப், ஆகிய பொறுப்புகளை வகித்துள்ளார். தமிழக அரசின் கலைமாமணி விருது உள்ளிட்ட பல விருதுகளையும் சிறந்த தயாரிப்பிற்காக இவர் பெற்றுள்ளார்.
அவரது நீண்ட மற்றும் சிறப்பான சினிமா வாழ்க்கையில், பல முக்கிய படங்களைத் தயாரித்துள்ளார். "நானும் ஒரு பெண்" (1963), "சம்சாரம் அது மின்சாரம்" (1986), "மின்சார கனவு" (1997), "சிவாஜி: தி பாஸ்" (2007), "வேட்டைக்காரன்" (2009), மற்றும் "அயன்" (2009). இந்த படங்கள் தமிழ் சினிமாவின் வரலாற்றில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன.
ஏவிஎம் சரவணன் அவர்கள், தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு மகத்தான பங்களிப்பைச் செய்துள்ளார். அவரது தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் புரொடக்ஷன்ஸ், பல தலைமுறை ரசிகர்களை மகிழ்வித்துள்ளது. அவரது படங்கள் எப்போதும் தரமாகவும், புதுமையாகவும் இருந்தன. அவர் ஒரு சிறந்த தயாரிப்பாளராக மட்டுமல்லாமல், ஒரு நல்ல மனிதராகவும் அறியப்பட்டார்.
அமைச்சர் ஆனந்த் முன்னிலையில்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், மு.சி. சம்பத்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026: இந்திய அணியில் சூர்யவன்ஷி.. ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்!
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.. திருக்குறள் கதைகள்
Classical Tamil: செம்மொழியாகிய தமிழ் மொழியே!
Tamil Poem: மன(தின்)வலி
Tamil Short Story: மக்களின் மனம்!
வீரம் வெளஞ்ச மண்ணு!
ஜூன் ஆறு வந்தது சிறப்பு நாளே !
Tamil Poem: பூவே பொன்பூவே
{{comments.comment}}