Leo FDFS.. காலை 9 மணிக்குத்தான் முதல் காட்சி.. அரசு உத்தரவு!

Oct 13, 2023,06:18 PM IST

சென்னை:  லியோ படம் தொடர்பாக தமிழ்நாடு அரசு கிடுக்கிப்பிடி உத்தரவுகளை தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளது.


இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர் அமுதா பிறப்பித்துள்ள உத்தரவு:




லியோ படம் அக்டோபர் 19, 20, 21, 22, 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் ஒரு நாளைக்கு 5 காட்சிகளைத் திரையிடலாம்.


முதல் நாளன்று ஓபனிங் ஷோவானது அதாவது முதல் காட்சியானது காலை  9 மணிக்குத்தான் தொடங்க வேண்டும்.  கடைசிக் காட்சி நள்ளிரவு 1.30 மணிக்கு முடிவடைய வேண்டும். இதை அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களும் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்.


லியோ படம் திரையிடப்படும் தியேட்டர்களில் விதிமுறைகள் மீறப்படாமல் இருப்பதைக் கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.


லியோ படத்தின் சிறப்புக் காட்சிகள் திரையிடப்படும் நாட்களில் படம் பார்க்க வருவோரின் பாதுகாப்பு மற்றும் தியேட்டர்களின் பாதுகாப்பையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். 


டிக்கெட் கட்டணங்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக விற்கப்படாமல் இருப்பதும் கணகாணிக்கப்பட வேண்டும். விதிமீறல் மற்றும் உத்தரவுகளை மீறி நடப்போர் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமீபத்திய செய்திகள்

news

தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!

news

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!

அதிகம் பார்க்கும் செய்திகள்