Leo FDFS.. காலை 9 மணிக்குத்தான் முதல் காட்சி.. அரசு உத்தரவு!

Oct 13, 2023,06:18 PM IST

சென்னை:  லியோ படம் தொடர்பாக தமிழ்நாடு அரசு கிடுக்கிப்பிடி உத்தரவுகளை தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளது.


இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர் அமுதா பிறப்பித்துள்ள உத்தரவு:




லியோ படம் அக்டோபர் 19, 20, 21, 22, 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் ஒரு நாளைக்கு 5 காட்சிகளைத் திரையிடலாம்.


முதல் நாளன்று ஓபனிங் ஷோவானது அதாவது முதல் காட்சியானது காலை  9 மணிக்குத்தான் தொடங்க வேண்டும்.  கடைசிக் காட்சி நள்ளிரவு 1.30 மணிக்கு முடிவடைய வேண்டும். இதை அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களும் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்.


லியோ படம் திரையிடப்படும் தியேட்டர்களில் விதிமுறைகள் மீறப்படாமல் இருப்பதைக் கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.


லியோ படத்தின் சிறப்புக் காட்சிகள் திரையிடப்படும் நாட்களில் படம் பார்க்க வருவோரின் பாதுகாப்பு மற்றும் தியேட்டர்களின் பாதுகாப்பையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். 


டிக்கெட் கட்டணங்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக விற்கப்படாமல் இருப்பதும் கணகாணிக்கப்பட வேண்டும். விதிமீறல் மற்றும் உத்தரவுகளை மீறி நடப்போர் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்