சுவைத்து பாருங்கள்..!! வாழ்க்கையின் இனிப்பும் கசப்பும்...!!!

Dec 31, 2022,11:51 PM IST

வாழ்வில் கடந்து சென்ற கசப்பான சம்பவங்களை  மறக்க முடியவில்லையா..!! சதைக்குள் சிக்கிக்கொண்ட கண்ணாடி சில்லாக  மனதை நெருடுகிறதா..!! அதை வெளியேற்ற முடியாதது போல் தோன்றினாலும் சாத்தியம் தான்..

எல்லோர் வாழ்விலும் இருண்ட காலங்கள் இருக்க  தான் செய்கிறது.. ஆனால் அவற்றால்தான் வெளிச்சம் எவ்வளவு பிரகாசமாக இருக்கிறது என்று நம்மால் உணரமுடிகிறது.. என்னதான் அந்த கடின நாட்களை கடந்து வந்து இருந்தாலும், அவை தந்த காயங்களும் அதன் வடுவும் நம்முடன் தான் பயணிக்கும்..


வடுக்களை மறைய வைக்க முடியாது.. ஆனால் காயங்களுக்கு ஏற்ற மருந்து இட்டு விரைவில் மனதளவில் குணமாக்குவது வரும் நாட்களுக்கு  மிக அவசியமாகும்.. தேவையற்ற நினைவுகளை தேர்வு செய்து அதை நினைவில் இருந்து அழிக்க நாம் மூளையும் மனதும்  மென்பொருள் கொண்டது அல்ல.. அது நினைவுகளும், உணர்ச்சிகளும், உயிரும் கொண்ட அரிய கூடு..வடுவாகி போன கருப்பு பக்கங்களை நினைவு புத்தகத்தில் இருந்து தேடி எடுங்கள்...


ரணம் தந்த நினைவுகள் வலி கலந்தவையாக தான் இருக்கும்.. ஆனால் கடைசியாக ஒரு முறை என்று  வலி தங்கி கொண்டு  நினைவில் ஊடுருவி, காட்சிகளை வரிசை படுத்துங்கள்.. ஒவ்வொரு தருணமும் இன்று நடந்தது போல எண்ணி கவலை கொள்ளுங்கள்..பிறகு அதில் இருந்து என்ன கற்றுக்கொண்டுள்ளீர்கள் என்று அறிந்து, பெருமிதம் கொள்ளுங்கள்.. அந்த இருளை கடந்து விட்டதை உங்கள் மனதில்  ஆழமாக பதியும் படி உணருங்கள்... அதை தொடர்ந்து  உங்கள் வாழ்வில்இருள் இல்லா நாட்களை எண்ணி நிம்மதி பெருமூச்சு விடுங்கள்.. வாழ்வின் அழகான மகிழ்ச்சியான நாட்களின் சந்தோசத்தை  நினைத்து வானவில் காணுங்கள்..


அதோடு வலிகள் இல்லா வடுக்களுடன், வருங்காலம் தரும் இன்ப துன்பங்களை புன்னகையுடன் எதிர்கொள்ளும்  மன பக்குவம் கொண்டு, நம்பிக்கையான மனநிலையுடன் முன்னேறுங்கள் வாழ்வில்...!

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்