வாழ்வில் கடந்து சென்ற கசப்பான சம்பவங்களை மறக்க முடியவில்லையா..!! சதைக்குள் சிக்கிக்கொண்ட கண்ணாடி சில்லாக மனதை நெருடுகிறதா..!! அதை வெளியேற்ற முடியாதது போல் தோன்றினாலும் சாத்தியம் தான்..
எல்லோர் வாழ்விலும் இருண்ட காலங்கள் இருக்க தான் செய்கிறது.. ஆனால் அவற்றால்தான் வெளிச்சம் எவ்வளவு பிரகாசமாக இருக்கிறது என்று நம்மால் உணரமுடிகிறது.. என்னதான் அந்த கடின நாட்களை கடந்து வந்து இருந்தாலும், அவை தந்த காயங்களும் அதன் வடுவும் நம்முடன் தான் பயணிக்கும்..
வடுக்களை மறைய வைக்க முடியாது.. ஆனால் காயங்களுக்கு ஏற்ற மருந்து இட்டு விரைவில் மனதளவில் குணமாக்குவது வரும் நாட்களுக்கு மிக அவசியமாகும்.. தேவையற்ற நினைவுகளை தேர்வு செய்து அதை நினைவில் இருந்து அழிக்க நாம் மூளையும் மனதும் மென்பொருள் கொண்டது அல்ல.. அது நினைவுகளும், உணர்ச்சிகளும், உயிரும் கொண்ட அரிய கூடு..வடுவாகி போன கருப்பு பக்கங்களை நினைவு புத்தகத்தில் இருந்து தேடி எடுங்கள்...
ரணம் தந்த நினைவுகள் வலி கலந்தவையாக தான் இருக்கும்.. ஆனால் கடைசியாக ஒரு முறை என்று வலி தங்கி கொண்டு நினைவில் ஊடுருவி, காட்சிகளை வரிசை படுத்துங்கள்.. ஒவ்வொரு தருணமும் இன்று நடந்தது போல எண்ணி கவலை கொள்ளுங்கள்..பிறகு அதில் இருந்து என்ன கற்றுக்கொண்டுள்ளீர்கள் என்று அறிந்து, பெருமிதம் கொள்ளுங்கள்.. அந்த இருளை கடந்து விட்டதை உங்கள் மனதில் ஆழமாக பதியும் படி உணருங்கள்... அதை தொடர்ந்து உங்கள் வாழ்வில்இருள் இல்லா நாட்களை எண்ணி நிம்மதி பெருமூச்சு விடுங்கள்.. வாழ்வின் அழகான மகிழ்ச்சியான நாட்களின் சந்தோசத்தை நினைத்து வானவில் காணுங்கள்..
அதோடு வலிகள் இல்லா வடுக்களுடன், வருங்காலம் தரும் இன்ப துன்பங்களை புன்னகையுடன் எதிர்கொள்ளும் மன பக்குவம் கொண்டு, நம்பிக்கையான மனநிலையுடன் முன்னேறுங்கள் வாழ்வில்...!
இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு
காற்றில் கலந்தார் கன்னடத்து பைங்கிளி... சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்
சஞ்சய் தத்துக்கு இன்னொரு படம் பண்ணுவேன்.. அதுல மிஸ்டேக்கை சரி பண்ணிடுவேன் - லோகேஷ் கனகராஜ்
வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினார் சுபான்ஷு சுக்லா.. ஆக்ஸியம் 4 குழுவினரும் பத்திரமாக திரும்பினர்!
கோவை, நீலகிரிக்கு நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி
ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்
Brain Health: இந்த 3 உணவுகள் சாப்பிட்டால் மூளை பாதிப்பு ஏற்படும்...எச்சரிக்கும் டாக்டர்கள்
இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?
{{comments.comment}}