- இரா. மும்தாஜ் பேகம்
மனம் கண்களிடம் சொன்னது அதிகமாக கண்ணீர் விடாதே எனக்கு வலிக்கிறது என்று.
"நீ அதிகமாக யாரையும் நேசிக்காதே அவர்கள் உதாசீன படுத்தும்போது எனக்கு கண்ணீர் வருகிறது என்று கண்கள் பதிலளித்தது.
-
மரங்களை விட்டு பூக்கள் உதிர்கின்றன என்பதற்காக மரங்கள் திரும்பவும் பூப்பதையோ காய்ப்பதையோ நிறுத்தி விடுவதில்லை. உறவுகள் பிரிந்து போவதனால் உடைந்து போக மாட்டேன்
-
தேடிப் போகும் அன்பு அழகானது. தேடிவரும் அன்பு ஆழமானது. அன்பை விற்கவோ வாங்கவோ முடியாது அன்பிற்கு அன்பே விலை

ஒருவரை தெரிந்து கொள்வதை விட புரிந்து கொண்டால் தான் அந்த அன்பு ஆயுள் வரை நீடிக்கும்.
-
குற்றம் சொல்ல ஆயிரம் காரணங்கள் இருக்கலாம் மன்னிக்கவும் மறக்கவும் ஒரே காரணம் 'அன்பு' தான்.
-
புரிதல் என்பது எல்லாம் தானாக வர வேண்டும் நாம் சொல்லி புரிய வைப்பதெல்லாம் ஓட்டை பானைக்குள் நீர் வைப்பது போன்றதாகும்.
(இரா. மும்தாஜ் பேகம், கிரியேட்டிவ் ரைட்டர்ஸ், திருச்சி)
அமைச்சர் ஆனந்த் முன்னிலையில்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், மு.சி. சம்பத்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026: இந்திய அணியில் சூர்யவன்ஷி.. ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்!
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.. திருக்குறள் கதைகள்
Classical Tamil: செம்மொழியாகிய தமிழ் மொழியே!
Tamil Poem: மன(தின்)வலி
Tamil Short Story: மக்களின் மனம்!
வீரம் வெளஞ்ச மண்ணு!
ஜூன் ஆறு வந்தது சிறப்பு நாளே !
Tamil Poem: பூவே பொன்பூவே
{{comments.comment}}