மின்னல் தாக்கி 10 பேர் பலி.. ஒடிஷாவில்

Sep 03, 2023,09:50 AM IST
புவனேஷ்வர்: ஒடிஷா மாநிலத்தில் மின்னல் தாக்கி 10 பேர் பலியாகியுள்ளனர்.

ஒடிஷாவில் நேற்று பல்வேறு மாவட்டங்களிலும் பலத்த இடி மின்னலுடன் கன மழை கொட்டித் தீர்த்தது.  இதில் குர்தா மாவட்டத்தில் மட்டும் 4 பேர் இடி மின்னல் தாக்கி பலியானார்கள். இதேபோல போலாங்கீர் மாவட்டத்தில் 2 பேரும், அங்குல், போத், தென்கனால், ஜெகதீஷ்சிங் பூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் மின்னல் தாக்கி பலியானார்கள்.



குர்தா மாவட்டத்தில் இடி மின்னல் தாக்கி 3 பேர் பலத்த காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒடிஷாவில் மின்னல் தாக்கி பத்து பேர் பலியானதைத் தொடர்ந்து, மழைக்காலங்களில் குறிப்பாக இடியுடன் கன மழை பெய்யும்போது மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். வெளியில் செல்லக் கூடாது. மின்சாரக் கம்பங்கள், மரங்கள் உள்ளிட்டவற்றின் கீழே ஒதுங்கக் கூடாது. பாழடைந்த, சேதமடைந்த கட்டடங்களில் தஞ்சம் அடையக் கூடாது என்று பேரிடர் மீட்புத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

விஜய் பையில் கத்திரிக்கோல்.. ஆதவ் அர்ஜூனாவிடம் மது பாட்டில்.. பரபரத்த சென்னை ஏர்போர்ட்!

news

எந்த நேரத்திலும் தேர்தல் தேதி அறிவிப்பு...தமிழகத்தில் வேகமெடுக்கும் அரசு பணிகள்

news

Iran-Israel War: மேற்கு ஆசியப் போர் எதிரொலி - சமையல் எண்ணெய் விலை அதிரடி உயர்வு

news

10 ஏவுகணைகளை ஏவி அதிரடி காட்டிய கிம்மின் வடகொரியா.. கிலியில் அண்டை நாடுகள்!

news

வணிக பயன்பாட்டு சிலிண்டர் தட்டுப்பாடு: உணவகங்களுக்கு மின்சார மானியம் அறிவிப்பு

news

மதுரை விமான நிலையம்.. திருத்தம்.. மதுரை சர்வதேச விமான நிலையம்.. மத்திய அரசு ஆணை!

news

மகேந்திரகிரியில் கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றி : இஸ்ரோ அறிவிப்பு

news

NDA கூட்டணியில் தவெக விஜய்?.. நயினார் நாகேந்திரன் அளித்த அதிரடி விளக்கம்

news

தொகுதிப் பங்கீட்டில் இழுபறி - பிடிவாதம் காட்டும் இடதுசாரிகள்.. தேமுதிகவுக்கு அதிகம் தர எதிர்ப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்