மின்னல் தாக்கி 10 பேர் பலி.. ஒடிஷாவில்

Sep 03, 2023,09:50 AM IST
புவனேஷ்வர்: ஒடிஷா மாநிலத்தில் மின்னல் தாக்கி 10 பேர் பலியாகியுள்ளனர்.

ஒடிஷாவில் நேற்று பல்வேறு மாவட்டங்களிலும் பலத்த இடி மின்னலுடன் கன மழை கொட்டித் தீர்த்தது.  இதில் குர்தா மாவட்டத்தில் மட்டும் 4 பேர் இடி மின்னல் தாக்கி பலியானார்கள். இதேபோல போலாங்கீர் மாவட்டத்தில் 2 பேரும், அங்குல், போத், தென்கனால், ஜெகதீஷ்சிங் பூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் மின்னல் தாக்கி பலியானார்கள்.



குர்தா மாவட்டத்தில் இடி மின்னல் தாக்கி 3 பேர் பலத்த காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒடிஷாவில் மின்னல் தாக்கி பத்து பேர் பலியானதைத் தொடர்ந்து, மழைக்காலங்களில் குறிப்பாக இடியுடன் கன மழை பெய்யும்போது மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். வெளியில் செல்லக் கூடாது. மின்சாரக் கம்பங்கள், மரங்கள் உள்ளிட்டவற்றின் கீழே ஒதுங்கக் கூடாது. பாழடைந்த, சேதமடைந்த கட்டடங்களில் தஞ்சம் அடையக் கூடாது என்று பேரிடர் மீட்புத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!

news

குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!

news

எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு

news

குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

news

பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு

news

தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!

news

Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்