மின்னல் தாக்கி 10 பேர் பலி.. ஒடிஷாவில்

Sep 03, 2023,09:50 AM IST
புவனேஷ்வர்: ஒடிஷா மாநிலத்தில் மின்னல் தாக்கி 10 பேர் பலியாகியுள்ளனர்.

ஒடிஷாவில் நேற்று பல்வேறு மாவட்டங்களிலும் பலத்த இடி மின்னலுடன் கன மழை கொட்டித் தீர்த்தது.  இதில் குர்தா மாவட்டத்தில் மட்டும் 4 பேர் இடி மின்னல் தாக்கி பலியானார்கள். இதேபோல போலாங்கீர் மாவட்டத்தில் 2 பேரும், அங்குல், போத், தென்கனால், ஜெகதீஷ்சிங் பூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் மின்னல் தாக்கி பலியானார்கள்.



குர்தா மாவட்டத்தில் இடி மின்னல் தாக்கி 3 பேர் பலத்த காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒடிஷாவில் மின்னல் தாக்கி பத்து பேர் பலியானதைத் தொடர்ந்து, மழைக்காலங்களில் குறிப்பாக இடியுடன் கன மழை பெய்யும்போது மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். வெளியில் செல்லக் கூடாது. மின்சாரக் கம்பங்கள், மரங்கள் உள்ளிட்டவற்றின் கீழே ஒதுங்கக் கூடாது. பாழடைந்த, சேதமடைந்த கட்டடங்களில் தஞ்சம் அடையக் கூடாது என்று பேரிடர் மீட்புத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்