மின்னல் தாக்கி 10 பேர் பலி.. ஒடிஷாவில்

Sep 03, 2023,09:50 AM IST
புவனேஷ்வர்: ஒடிஷா மாநிலத்தில் மின்னல் தாக்கி 10 பேர் பலியாகியுள்ளனர்.

ஒடிஷாவில் நேற்று பல்வேறு மாவட்டங்களிலும் பலத்த இடி மின்னலுடன் கன மழை கொட்டித் தீர்த்தது.  இதில் குர்தா மாவட்டத்தில் மட்டும் 4 பேர் இடி மின்னல் தாக்கி பலியானார்கள். இதேபோல போலாங்கீர் மாவட்டத்தில் 2 பேரும், அங்குல், போத், தென்கனால், ஜெகதீஷ்சிங் பூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் மின்னல் தாக்கி பலியானார்கள்.



குர்தா மாவட்டத்தில் இடி மின்னல் தாக்கி 3 பேர் பலத்த காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒடிஷாவில் மின்னல் தாக்கி பத்து பேர் பலியானதைத் தொடர்ந்து, மழைக்காலங்களில் குறிப்பாக இடியுடன் கன மழை பெய்யும்போது மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். வெளியில் செல்லக் கூடாது. மின்சாரக் கம்பங்கள், மரங்கள் உள்ளிட்டவற்றின் கீழே ஒதுங்கக் கூடாது. பாழடைந்த, சேதமடைந்த கட்டடங்களில் தஞ்சம் அடையக் கூடாது என்று பேரிடர் மீட்புத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

படிப்புதான் ஒரு பெண்ணுக்கு உண்மையான அணிகலன் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!

news

பாஜக.,வில் அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு? - பின்னணியில் நடந்தது என்ன?

news

திமுக பணத்தை நம்பி உள்ளது, அங்கு உழைக்க ஆளில்லை; இளைஞர்கள் நினைத்தால் ஆட்சியையே மாற்றலாம்: அன்புமணி

news

பறவைக் காய்ச்சல் பரவல்... ஹாஃப்பாயில் சாப்பிடாதீங்க: எச்சரிகை விடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

news

தமிழகத்தில் பிப்., 13ம் தேதி லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என்றும் என் மனைவி சீதா தான்....நான் பிரிந்ததை நினைத்து என்னைக்கும் வருத்தப்பட்டதே இல்லை: பார்த்திபன்

news

சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு எதிராக 100 எம்.பி.,க்களிடம் கையெழுத்து பெற்ற காங்கிரஸ்

news

பாகிஸ்தானின் பல்டி அரசியல்.. ஐசிசி-யின் அதிரடி கடிதத்தால் அடிபணிந்த பிசிபி!

news

தேர்வுகளை நடத்த தெரியாதவர் தமிழ்நாட்டுக்கு முதல்வராக வாய்த்திருப்பது சாபக்கேடு: எடப்பாடி பழனிச்சாமி

அதிகம் பார்க்கும் செய்திகள்