டில்லி: மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்று இடைக்கால ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்.
மது விலக்குக் கொள்கை தொடர்பான வழக்கில் டெல்லி துணை முதல்வராக இருந்த மனீஷ் சிசோடியா, பிஆர்எஸ் தலைவர் கவிதா மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்திய வரலாற்றிலேயே முதலமைச்சர் பதவி வகித்து வரும் ஒருவர் கைது செய்யப்பட்டது இதுவே முதல் முறை என்று கூறும் அமவிற்கு அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது பரபரப்பாக பேசப்பட்டது.

கடந்த மார்ச் 21ம் தேதி கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் வெஜ்ரிவால், இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை கடந்த மே மாதம் நடந்தது. பின்னர் அப்போது தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்பதற்காக தற்காலி ஜாமீன் வழங்கப்பட்டது. தேர்தல் முடிந்த பின்னர் அவர் மீண்டும் சிறையில் சரணடைந்தார். இந்த நிலைியல் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.
தீர்ப்பின்போது கைது செய்யப்பட்டு 90 நாட்களாகி விட்டதால் இடைக்கால ஜாமீன் அளிப்பதாக கோர்ட் உத்தரவிட்டது. மேலும் முதல்வர் பதவியில் நீடிக்கலாமா இல்லையா என்பதை கெஜ்ரிவால் முடிவுக்கே விட்டு விடுவதாகவும் நீதிபதி தெரிவித்தார். இதுதவிர கெஜ்ரிவால் வழக்கின் சில முக்கிய அம்சங்கள் குறித்து விசாரிக்க பெரிய அமர்வுக்கு வழக்கை மாற்றியும் கோர்ட் உத்தரவிட்டது.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}