டில்லி: மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்று இடைக்கால ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்.
மது விலக்குக் கொள்கை தொடர்பான வழக்கில் டெல்லி துணை முதல்வராக இருந்த மனீஷ் சிசோடியா, பிஆர்எஸ் தலைவர் கவிதா மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்திய வரலாற்றிலேயே முதலமைச்சர் பதவி வகித்து வரும் ஒருவர் கைது செய்யப்பட்டது இதுவே முதல் முறை என்று கூறும் அமவிற்கு அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது பரபரப்பாக பேசப்பட்டது.
கடந்த மார்ச் 21ம் தேதி கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் வெஜ்ரிவால், இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை கடந்த மே மாதம் நடந்தது. பின்னர் அப்போது தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்பதற்காக தற்காலி ஜாமீன் வழங்கப்பட்டது. தேர்தல் முடிந்த பின்னர் அவர் மீண்டும் சிறையில் சரணடைந்தார். இந்த நிலைியல் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.
தீர்ப்பின்போது கைது செய்யப்பட்டு 90 நாட்களாகி விட்டதால் இடைக்கால ஜாமீன் அளிப்பதாக கோர்ட் உத்தரவிட்டது. மேலும் முதல்வர் பதவியில் நீடிக்கலாமா இல்லையா என்பதை கெஜ்ரிவால் முடிவுக்கே விட்டு விடுவதாகவும் நீதிபதி தெரிவித்தார். இதுதவிர கெஜ்ரிவால் வழக்கின் சில முக்கிய அம்சங்கள் குறித்து விசாரிக்க பெரிய அமர்வுக்கு வழக்கை மாற்றியும் கோர்ட் உத்தரவிட்டது.
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
{{comments.comment}}