மேல்மலையனூர் தேர் திருவிழா.. மார்ச் 4 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!

Feb 25, 2025,03:49 PM IST

விழுப்புரம்: மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு வரும் மார்ச் 4 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியாளர் ஷேக் அப்துல் ரகுமான் உத்தரவிட்டுள்ளார்.


அதேபோல் மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளதால், அதற்கு பதிலாக மார்ச் 15ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.



விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகும். அதிலும் இங்கு நடைபெறும் மாசி பெருவிழா வெகு விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த மாசி பெருவிழாவில் தேரோட்டம், மாயன

கொள்ளை நிகழ்வு, தீமிதி திருவிழா ஆகியன  முக்கிய விழாவாக கருதப்படுகிறது.




அந்த வகையில் இந்த வருடம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் மாசி பெருவிழா நாளை மகா சிவராத்திரி அன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதனை தொடர்ந்து அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு, 27ஆம் தேதி ஆண் பூத வாகனத்திலும், 28ஆம் தேதி பெண் பூத வாகனத்திலும், மார்ச் ஒன்றாம் தேதி சிம்ம வாகனத்திலும், மார்ச் இரண்டாம் தேதி அன்ன வாகனத்திலும், மார்ச் மூன்றாம் தேதி யானை வாகனத்திலும்  அம்பாள் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதனை தொடர்ந்து மார்ச் 4ஆம் தேதி மாசி தேரோட்டம் மிக சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. 


முன்னதாக அம்பாளுக்கு அபிஷேகம் ஆராதனை செய்து மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்படும். பின்னர்  மேளதாளம் முழங்க அம்பாள் கோவில் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.  இதனை காண லட்சக்கணக்கான மக்கள்  தேரோட்டத்தில் கலந்துகொண்டு வடம் இழுத்து சாமி தரிசனம் செய்வர்.


இந்த நிலையில் மேல்மலையனூர் தேரோட்டத்தை முன்னிட்டு மார்ச் 4ம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் உத்தரவிட்டுள்ளார். அதேபோல் மார்ச் 4ஆம் தேதிக்கு பதிலாக, மார்ச் 15ஆம் தேதி வேலை நாட்களாக செயல்படும் எனவும் அறிவித்துள்ளார்.



மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் தேரோட்டத்தின் போது கூட்டம் நெரிசலால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படக்கூடும் என்பதால் முன்கூட்டியே திட்டமிட்டு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்

news

மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!

news

எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!

news

Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!

news

பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)

news

சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!

news

A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!

news

மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!

news

True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?

அதிகம் பார்க்கும் செய்திகள்