மேல்மலையனூர் தேர் திருவிழா.. மார்ச் 4 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!

Feb 25, 2025,03:49 PM IST

விழுப்புரம்: மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு வரும் மார்ச் 4 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியாளர் ஷேக் அப்துல் ரகுமான் உத்தரவிட்டுள்ளார்.


அதேபோல் மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளதால், அதற்கு பதிலாக மார்ச் 15ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.



விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகும். அதிலும் இங்கு நடைபெறும் மாசி பெருவிழா வெகு விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த மாசி பெருவிழாவில் தேரோட்டம், மாயன

கொள்ளை நிகழ்வு, தீமிதி திருவிழா ஆகியன  முக்கிய விழாவாக கருதப்படுகிறது.




அந்த வகையில் இந்த வருடம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் மாசி பெருவிழா நாளை மகா சிவராத்திரி அன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதனை தொடர்ந்து அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு, 27ஆம் தேதி ஆண் பூத வாகனத்திலும், 28ஆம் தேதி பெண் பூத வாகனத்திலும், மார்ச் ஒன்றாம் தேதி சிம்ம வாகனத்திலும், மார்ச் இரண்டாம் தேதி அன்ன வாகனத்திலும், மார்ச் மூன்றாம் தேதி யானை வாகனத்திலும்  அம்பாள் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதனை தொடர்ந்து மார்ச் 4ஆம் தேதி மாசி தேரோட்டம் மிக சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. 


முன்னதாக அம்பாளுக்கு அபிஷேகம் ஆராதனை செய்து மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்படும். பின்னர்  மேளதாளம் முழங்க அம்பாள் கோவில் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.  இதனை காண லட்சக்கணக்கான மக்கள்  தேரோட்டத்தில் கலந்துகொண்டு வடம் இழுத்து சாமி தரிசனம் செய்வர்.


இந்த நிலையில் மேல்மலையனூர் தேரோட்டத்தை முன்னிட்டு மார்ச் 4ம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் உத்தரவிட்டுள்ளார். அதேபோல் மார்ச் 4ஆம் தேதிக்கு பதிலாக, மார்ச் 15ஆம் தேதி வேலை நாட்களாக செயல்படும் எனவும் அறிவித்துள்ளார்.



மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் தேரோட்டத்தின் போது கூட்டம் நெரிசலால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படக்கூடும் என்பதால் முன்கூட்டியே திட்டமிட்டு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

படத்தில் வில்லன்...நிஜத்தில் ஹீரோ...வெள்ளம் பாதித்த மக்களுக்காக ஓடி வந்த சோனு சூட்

news

வெனிசுலா விவகாரம்...டிரம்ப்க்கு அமெரிக்க கோர்ட் கொடுத்த அடுத்த குட்டு

news

அதிகமாக வேலை செய்யும்போது சில நேரங்களில் வாழ்க்கையை இழந்துவிடுகிறோம்: ஏ.ஆர். ரகுமான்

news

மழைநீர் வடிகால் பணிகள் முடிந்த பாடில்லை.. மழைநீரும் வடிந்த பாடில்லை.. எடப்பாடி பழனிச்சாமி

news

உட்கட்சி பூசல்களை சரி செய்க...தமிழக பாஜக தலைவர்களுக்கு அமித்ஷா எச்சரிக்கை

news

விராட் கோலிக்கு லண்டனில் உடல் தகுதி தேர்வு நடத்த அனுமதி

news

பிஆர்எஸ் கட்சியில் இருந்து விலகுவதாக கவிதா அறிவிப்பு

news

திருமண நிகழ்வுகள், வேலைகள் இருப்பதால் செல்லவில்லை... டெல்லி செல்லாதது குறித்து அண்ணாமலை விளக்கம்!

news

அன்புமணிக்கு செப்.,10 ம் தேதி வரை மீண்டும் அவகாசம் : டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்