வெத்தல பாக்கு மாத்திட்டோம்.. வேட்பாளர்கள் யார் என்பதை பிறகு சொல்வோம்.. பிரேமலதா விஜயகாந்த்

Mar 21, 2024,10:38 PM IST

சென்னை: தேமுதிக சார்பில் போட்டியிடும் ஐந்து வேட்பாளர்களையும் கூடிய விரைவில் அறிவிப்போம் என்று கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.


அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிகவுக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி மத்திய சென்னை, திருவள்ளூர் (தனி), கடலூர், விருதுநகர், தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் தேமுதிக போட்டியிடவுள்ளது. இதற்கான வேட்பாளர் பட்டியல் இன்னும் வெளியாகவில்லை. இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்றும் லிஸ்ட் வரவில்லை.


முன்னதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும், அதிமுக தலைவர்களும் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக  அலுவலகத்திற்கு வருகை தந்தனர். பின்னர் மறைந்த விஜயகாந்த்தின் நினைவிடத்தில் அவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். அதன் பின்னர் தனது கட்சி நிர்வாகிகள் மத்தியில் பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.  




அப்போது பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில்,  கேப்டன் விஜயகாந்த் இல்லாமல் சந்திக்கும் முதல் தேர்தல் இது. கூட்டணி அமைத்திருக்கிறோம். அரும்பாடுபட்டு 5 தொகுதிகளைப் பெற்றுள்ளோம். ஐந்திலும் வெற்றி பெற்றாக வேண்டும். இரவு பகலாக உழைக்க வேண்டும்.  அதிமுக எப்படி அம்மா இல்லாமல் முதல் மக்களவைத் தேர்தலை சந்திக்கிறதோ, அதேபோல கேப்டன் இல்லாமல் நாம் சந்திக்கும் முதல் தேர்தல் இது. 


கேப்டனுக்கு ரோல் மாடல் புரட்சித் தலைவர் எம்ஜிஆர்தான். புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி, புரட்சிக் கலைஞர் கேப்டன் ஆகிய தெய்வங்களின் ஆசிர்வாதத்துடன் நாளை நமதே 40ம் நமதே என்று கூட்டணி தர்மத்தோடு நடந்து கொண்டு அத்தனை தொகுதிகளிலும் வென்றெடுத்து சரித்திரத்தை மாற்றியமைக்க வேண்டும். 2026ம் ஆண்டு, 2011 சரித்திரத்தை மீண்டும் நிரூபிப்போம் என்றார் பிரேமலதா விஜயகாந்த்.


அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், மார்ச் 24ம் தேதி திருச்சியில் நடைபெறும் அதிமுக பொதுக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சித்  தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளோம். அப்போது 40 வேட்பாளர்களையும் மேடையில் ஏற்றி அறிமுகப்படுத்தவுள்ளனர். அப்போது முதல் பிரச்சாரக் கூட்டம் தொடங்கும் என்றார் பிரேமலதா விஜயகாந்த்.


அப்போது செய்தியாளர்கள், வேட்பாளர் பட்டியல் குறித்து கேட்டபோது, வெத்தலை பாக்கு மாத்திட்டோம்.. அடுத்து வேட்பாளர்கள் யார் என்பதையும் அறிவிப்போம்.. பொறுமையா இருங்க. சொல்வோம். நேர்காணல் நடந்து வருகிறது. முடிந்ததும் வேட்பாளர்கள் யார் என்பதை முடிவு செய்து அறிவிப்போம். திருச்சி கூட்டத்தில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி விட்டு, மார்ச் 25ம் தேதி வேட்பு மனு தாக்கல் நடைபெறும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்தார்.


ராஜ்யசபா சீட்டும் கொடுக்கிறதா அதிமுக


பிரேமலதா விஜயகாந்த் தனது பேட்டியின்போது கூறுகையில், ராஜ்யசபா சீட்டுக்கான வேட்பாளர் யார் என்பதையும் இன்னும் முடிவு செய்யவில்லை என்று கூறினார். ஒரு ஃபுளோவில் அவர் இதைச் சொன்னாரா அல்லது அதிமுக தங்களுக்கு ராஜ்யசபா சீட் தர ஒப்புக் கொண்டுள்ளதை சூசகமாக சுட்டிக் காட்டினாரா என்று தெரியவில்லை.


எப்போது தேர்தல் தொடர்பான கூட்டணி குறித்து தேமுதிக பேசினாலும் கூடவே ராஜ்யசபா சீட் மஸ்ட் என்பதையும் வலியுறுத்தியே வந்துள்ளது என்பது நினைவிருக்கலாம். ஆனால் இதுவரை எந்தக் கட்சியும் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் தந்ததே இல்லை. ஆனால் இப்போது பிரேமலதா விஜயகாந்த் பேசியிருப்பதைப் பார்த்தால் இந்த முறை சீட் கிடைத்து விடும் போல தெரிகிறது. 


அப்படியானால் அந்த ராஜ்யசபா சீட் மூலமாக நாடாளுமன்றத்திற்குப் போகப் போவது பிரேமலதா விஜயகாந்தா அல்லது சுதீஷா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்