மக்களே விரல் ரெடியா.. 10,214 ஸ்பெஷல் பஸ்கள் தயார்.. சந்தோஷமா ஊருக்குப் போய் ஓட்டுப் போட்டுட்டு வாங்க

Apr 16, 2024,06:08 PM IST

சென்னை: சென்னையில் வசிக்கும் பல்வேறு மாவட்ட மக்கள் வாக்களிப்பதற்கு  சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு வசதியாக 10,214 சிறப்புப் பேருந்துகளை அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது. இதனால் மக்கள் எந்தவிதமான சிரமமும் இல்லாமல் சொந்த ஊர்களுக்குச் செல்ல அரசு அனைத்து ஏற்பாடுகளையும் உறுதி செய்து வருகிறது.


ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.  அதே நாளில், கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டசபைத் தொகுதிக்கு இடைத் தேர்தலும் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் ஏப்ரல் 17ம் தேதி மாலை 6 மணியுடன் முடிவடையவுள்ளது. அதன் பிறகு 18ம் தேதி ஓய்வு நாளாகும். 19ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும். ஜூன்4ம் தேதி வாக்குகள் எண்ணப்படும்.


இந்த நிலையில் சென்னையில் வசிக்கும், அதேசமயம், ஓட்டுகளை சொந்த ஊரில் வைத்துள்ள லட்சக்கணக்கான மக்கள் தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு பயணப்பட ஆரம்பித்துள்ளனர். கடந்த சட்டசபைத் தேர்தலின்போது கடைசி நேரத்தில் சொந்த ஊர்களுக்குப் போக முயன்ற பலர் பஸ்கள் சரிவரக் கிடைக்காமல் பெரும் அவஸ்தைக்குள்ளானார்கள் என்பது நினைவிருக்கலாம். அந்த சிரமம் இந்த முறை வந்து விடக் கூடாது, ஓட்டு போடாமல் மிஸ் ஆகி விடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையுடன் பலர் இப்போதே சொந்த ஊர்களுக்குக் கிளம்பி வருகின்றனர்.




இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் விரைவுப் போக்குவரத்துக் கழகமும் சிறப்புப் பேருந்துகளை இயக்கி மக்களுக்கு சவுகரியமான முறையில் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஏற்பாடு செய்துள்ளது. இதுதொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள தகவல்:


நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 17 மற்றும் ஏப்ரல் 18 ஆகிய தேதிகளில் சென்னையிலிருந்து தினசரி இயங்கக்கூடிய 2092 பேருந்துகளுடன் 2970 சிறப்பு பேருந்துகள் என இரண்டு நாட்களுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 7154 பேருந்துகளும் பிற ஊர்களில் இருந்து மேற்கண்ட இரண்டு நாட்களுக்கு 3060 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 10 ஆயிரத்து 214 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.


நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பின்னர் பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வரும் 20, 21 ஆகிய தேதிகளில் தினசரி இயங்கக்கூடிய 2092 பேருந்துகளுடன் 1825 சிறப்பு பேருந்துகளும் இரண்டு நாட்களுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 6009 பேருந்துகள் ஏனைய பிற முக்கிய ஊர்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 2295 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 8034 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.


கிளாம்பாக்கம் கலைஞர் பேருந்து முனையம், தாம்பரம் சானிடோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம், வள்ளுவர் குருகுலம் மேல்நிலைப்பள்ளி பேருந்து நிறுத்தம், கோயம்பேடு புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலையம், மாதவரம் புதிய பேருந்து நிலையம் ஆகியவற்றில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்