அடுத்த சபாநாயகர் யார்?.. கோட்டா நாயகன் ஓம் பிர்லா Vs மாவேலிக்கரை கொடிக்குன்னில் சுரேஷ்!

Jun 25, 2024,06:22 PM IST

டெல்லி: லோக்சபா சபாநாயகர் பதவிக்கு தேர்தல் வந்து விட்டது. ஒரு மனதாக தேர்வு இருக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.


தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் முன்னாள் சபாநாயகர் ஓம் பிர்லா மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளார். இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் எம்பி கொடிக்குன்னில் சுரேஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். நாளை தேர்தல் நடைபெறவுள்ளது.


லோக்சபா சபாநாயகர் பதவிக்கு இதுவரை தேர்தல் நடந்ததில்லை. இதற்கு முன்பு இருந்த சபாநாயகர்கள் அனைவரும் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருந்தனர். ஆனால் இப்போது முதல் முறையாக தேர்தல் நடைபெறவுள்ளது.


கோட்டாவிலிருந்து கொடி நாட்டிய ஓம் பிர்லா




பாஜக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஓம் பிர்லா, கடந்த லோக்சபாவில் சபாநாயகரா பதவி வகித்தவர் ஆவார். ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவைச் சேர்ந்த இவர், ஆரம்பத்தில் எம்.எல்.ஏவாக இருந்தவர். 2003ம் ஆண்டு கோட்டா தெற்கு சட்டசபைத் தொகுதியில் எம்எல்ஏவாக வெற்றி பெற்ற ஓம் பிர்லா, 2008 தேர்தலிலும் இதே தொகுதியில் வென்றார். அதன் பின்னர் எம்.பி தேர்தலுக்கு மாறி விட்டார் ஓம் பிர்லா. 


2014 மற்றும் 2019 லோக்சபா தேர்தல்களில் கோட்டா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் ஓம் பிர்லா. 2014 தேர்தலில் வென்ற பிறகு அவர் நிலைக்குழு உறுப்பினராக பதவி வகித்தார். 2019 தேர்தலில் வென்ற பிறகு அவர் லோக்சபா சபாநாயகர் ஆனார். இவர் சபாநாயகர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார் என்று பாஜகவினர் பலரே கூட எதிர்பார்க்கவில்லை. சர்ப்பிரைஸ் சாய்ஸ்தான் ஓம் பிர்லா.


மார்வாரி சமூகத்தைச் சேர்ந்த ஓம் பிர்லா பாஜகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். சாதாரண மாவட்டத் தலைவர் பதவி முதல் லோக்சபா சபாநாயகர் பதவி வரை அவர் தொடர்ச்சியான வளர்ச்சியை அடைந்துள்ளார். கடந்த 20 ஆண்டுகளில் சபாநாயகராக இருந்த யாருமே அடுத்த முறை நடந்த  தேர்தலில் வென்றதில்லை. அந்த வரலாற்றை மாற்றி மீண்டும் எம்.பியாக வெற்றி பெற்று சாதனை படைத்தவர் ஓம் பிர்லா என்பது குறிப்பிடத்தக்கது.


29 வருட கால எம்.பி. கொடிக்குன்னில் சுரேஷ்




கேரள மாநிலம் கொடிக்குன்னில் என்ற ஊரில் பிறந்தவரான சுரேஷ், மூத்த காங்கிரஸ் எம்.பி. ஆவார். 62 வயதாகும் இவர் வழக்கறிஞர் ஆவார்.  கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக செயல்பட்டு வருகிறார். மத்திய அமைச்சராக முந்தைய மன்மோகன் சிங் ஆட்சியில் பதவி வகித்துள்ளார். 8வது முறையாக இவர் லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமைக்குரியவர்.  


முதல் முறையாக 1989ம் ஆண்டு அடூர் தொகுதியிலிருந்து லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட சுரேஷ் தொடர்ந்து 1991, 1996, 1999 ஆகிய தேர்தல்களிலும் இதே தொகுதியில் வெற்றி பெற்றார். 1998 மற்றும் 2004 தேர்தல்களில் இவர் தோல்வி அடைந்தார்.  


2009 தேர்தலில் மாவேலிக்கரை தொகுதியில் போட்டியிட்டு லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2014, 2019, 2024 தேர்தல்களிலும் இதே மாவேலிக்கரை தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி. ஆனார். தற்போதைய லோக்சபாவில் அதிக முறை எம்.பியாக பதவி வகித்த எம்.பி என்ற  சாதனையுடன் அவர் செயல்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 29 வருடங்கள் அவர் எம்.பியாக பணியாற்றியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

நேபாளத்தில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு: 14 பேர் பலி

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

தாய்!!!

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்