டெல்லி: லோக்சபா சபாநாயகர் பதவிக்கு தேர்தல் வந்து விட்டது. ஒரு மனதாக தேர்வு இருக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் முன்னாள் சபாநாயகர் ஓம் பிர்லா மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளார். இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் எம்பி கொடிக்குன்னில் சுரேஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். நாளை தேர்தல் நடைபெறவுள்ளது.
லோக்சபா சபாநாயகர் பதவிக்கு இதுவரை தேர்தல் நடந்ததில்லை. இதற்கு முன்பு இருந்த சபாநாயகர்கள் அனைவரும் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருந்தனர். ஆனால் இப்போது முதல் முறையாக தேர்தல் நடைபெறவுள்ளது.
கோட்டாவிலிருந்து கொடி நாட்டிய ஓம் பிர்லா

பாஜக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஓம் பிர்லா, கடந்த லோக்சபாவில் சபாநாயகரா பதவி வகித்தவர் ஆவார். ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவைச் சேர்ந்த இவர், ஆரம்பத்தில் எம்.எல்.ஏவாக இருந்தவர். 2003ம் ஆண்டு கோட்டா தெற்கு சட்டசபைத் தொகுதியில் எம்எல்ஏவாக வெற்றி பெற்ற ஓம் பிர்லா, 2008 தேர்தலிலும் இதே தொகுதியில் வென்றார். அதன் பின்னர் எம்.பி தேர்தலுக்கு மாறி விட்டார் ஓம் பிர்லா.
2014 மற்றும் 2019 லோக்சபா தேர்தல்களில் கோட்டா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் ஓம் பிர்லா. 2014 தேர்தலில் வென்ற பிறகு அவர் நிலைக்குழு உறுப்பினராக பதவி வகித்தார். 2019 தேர்தலில் வென்ற பிறகு அவர் லோக்சபா சபாநாயகர் ஆனார். இவர் சபாநாயகர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார் என்று பாஜகவினர் பலரே கூட எதிர்பார்க்கவில்லை. சர்ப்பிரைஸ் சாய்ஸ்தான் ஓம் பிர்லா.
மார்வாரி சமூகத்தைச் சேர்ந்த ஓம் பிர்லா பாஜகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். சாதாரண மாவட்டத் தலைவர் பதவி முதல் லோக்சபா சபாநாயகர் பதவி வரை அவர் தொடர்ச்சியான வளர்ச்சியை அடைந்துள்ளார். கடந்த 20 ஆண்டுகளில் சபாநாயகராக இருந்த யாருமே அடுத்த முறை நடந்த தேர்தலில் வென்றதில்லை. அந்த வரலாற்றை மாற்றி மீண்டும் எம்.பியாக வெற்றி பெற்று சாதனை படைத்தவர் ஓம் பிர்லா என்பது குறிப்பிடத்தக்கது.
29 வருட கால எம்.பி. கொடிக்குன்னில் சுரேஷ்

கேரள மாநிலம் கொடிக்குன்னில் என்ற ஊரில் பிறந்தவரான சுரேஷ், மூத்த காங்கிரஸ் எம்.பி. ஆவார். 62 வயதாகும் இவர் வழக்கறிஞர் ஆவார். கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக செயல்பட்டு வருகிறார். மத்திய அமைச்சராக முந்தைய மன்மோகன் சிங் ஆட்சியில் பதவி வகித்துள்ளார். 8வது முறையாக இவர் லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமைக்குரியவர்.
முதல் முறையாக 1989ம் ஆண்டு அடூர் தொகுதியிலிருந்து லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட சுரேஷ் தொடர்ந்து 1991, 1996, 1999 ஆகிய தேர்தல்களிலும் இதே தொகுதியில் வெற்றி பெற்றார். 1998 மற்றும் 2004 தேர்தல்களில் இவர் தோல்வி அடைந்தார்.
2009 தேர்தலில் மாவேலிக்கரை தொகுதியில் போட்டியிட்டு லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2014, 2019, 2024 தேர்தல்களிலும் இதே மாவேலிக்கரை தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி. ஆனார். தற்போதைய லோக்சபாவில் அதிக முறை எம்.பியாக பதவி வகித்த எம்.பி என்ற சாதனையுடன் அவர் செயல்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 29 வருடங்கள் அவர் எம்.பியாக பணியாற்றியுள்ளார்.
ஈரான் இறக்குமதி பாதிப்பு...தத்தளிக்கும் தூத்துக்குடி தீப்பெட்டித் தொழில்
விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு
சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!
கடவுளால் அழகாக வடிவமைக்கப்பட்டவர்கள்.. WOMEN EMPOWERMENT
அப்பாவுக்குப் பிறந்த நாள்.. Happy Birthday to my dear Dad!
கூட்டை உடைத்து வெளியே வந்த சுதந்திரப் பெண்கள்.. Women broke the shell
சிபிஐ சம்மன்...மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி
சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு
"ம்ம்... என்னச் சொல்லப் போறானோ? மதன்".. அவளின் (ல்) அவன் (5)
{{comments.comment}}