- தென்றல்
இலக்கியங்களில், தலைவன் தலைவி இடையே தோழி மட்டுமல்ல அன்னம், புறா, கிளி, குயில், மான், வண்டு, நாரை ஏன் காற்று, முகில் எல்லாம் காதல் தூது போயின. தபால் துறை வந்ததும் காதலைச் சுமந்து கொண்டு கடிதங்கள் அங்கும் இங்கும் பறந்தன.
போர்க்கடவுளாக மிருகத்தனமாய் உயிர்களைக் கொன்று குவித்து இரத்தக்களரியாய்த் தன் வரலாற்றின் பக்கங்களை எழுதிக்கொண்ட பிரெஞ்ச் மன்னன் நெப்போலியன் போனபார்ட் கூட உருகி உருகி தன் மனைவி ஜோசபினுக்குக் காதல் கடிதம் எழுதித்தான் இருக்கிறார்.
கல்நெஞ்சனோ காட்டானோ யாராய் இருப்பினும் காதல் வந்ததும், கவித்துவமாய் வரிந்து வரிந்து கடிதம் எழுதிப் பரிமாறிக்கொண்ட காலம் இருந்தது. இன்றைய தொழில்நுட்பம் கபளீகரம் செய்துவிட்ட சின்ன சின்ன மகிழ்ச்சிகளில் இதுவும் ஒன்று.
கண்ணதாசன் அவர்கள் எழுதிய காலத்தால் கரைக்க முடியாத கடிதப் பாடல் ஒன்று உண்டு.

"அன்புள்ள மான்விழியே, ஆசையில் ஓர் கடிதம்!
நான் எழுதுவதென்னவென்றால் உயிர் காதலில் ஓர் கவிதை!
அன்புள்ள மன்னவனே, ஆசையில் ஓர் கடிதம்!
அதைக் கைகளில் எழுதவில்லை, இரு கண்களில் எழுதி வந்தேன்!"
பாட்டில் நடிகை ஜமுனாவின் கண்ணசைவைப் பார்த்தால் கண்களில் தான் எழுதி இருக்கிறார் என்று சத்தியமே செய்வீர்கள்.
வாலி அவர்கள் எழுதிய கடிதப் பாடல் ஒன்று உண்டு. நடுநடுவல மானே, தேனே, பொன்மானே எல்லாம் போட்டு எழுதப்பட்ட பாடல்.
"கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே!
பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா?நான் இங்கு சௌக்கியமே! "
Video: காதல் கடிதங்களை பாடல்களில் தூது விட்ட திரைப்பாடல்கள்
இந்த வரிகளை அப்படியே மாற்றி போட்ட கடிதப் பாடல் நினைவுக்கு வருகிறதா?
"நலம், நலமறிய ஆவல்! உன் நலம், நலமறிய ஆவல்!
நீ இங்கு சுகமே, நான் அங்கு சுகமா?"
என்ற வரிகள் அவை. வைரமுத்து அவர்கள் எழுதிய கடிதப் பாடல் தெரியுமா?
"காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்!
வானின் நீலம் கொண்டு வா, பேனா மையோ தீர்ந்திடும்!
சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள்
இரவு, பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சேர்ந்திடும்!"
பெண் பாடுகிறாள்:
"கடிதத்தின் வார்த்தைகளில்
கண்ணா நான் வாழுகிறேன்!
பேனாவில் ஊற்றி வைத்தது எந்தன் உயிரல்லோ! "
ஆண் சொல்கிறான்:
"பொன்னே உன் கடிதத்தை பூவாலே திறக்கின்றேன்!
விரல்பட்டால் உந்தன் ஜீவன் காயம் படுமல்லோ!"
மென்மையான காதலை மயிலிறகால் வருடும் வரிகள்.. மீண்டும் பகிரலாம்!
(தென்றல் தொடர்ந்து வீசும்)
தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!
மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்
தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்
தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?
எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!
முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!
உழவனின் உயிர் நண்பன்!
தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!
{{comments.comment}}