அன்புள்ள மான்விழியே.. கடிதம் வாயிலாக காதலைத் தீட்டிய தமிழ்த் திரைப் பாடல்கள்!

Jun 20, 2025,10:42 AM IST

- தென்றல்


இலக்கியங்களில், தலைவன் தலைவி இடையே தோழி மட்டுமல்ல அன்னம், புறா, கிளி, குயில், மான், வண்டு, நாரை ஏன் காற்று, முகில் எல்லாம் காதல் தூது போயின. தபால் துறை வந்ததும் காதலைச் சுமந்து கொண்டு கடிதங்கள் அங்கும் இங்கும் பறந்தன. 


போர்க்கடவுளாக மிருகத்தனமாய் உயிர்களைக் கொன்று குவித்து இரத்தக்களரியாய்த் தன் வரலாற்றின் பக்கங்களை எழுதிக்கொண்ட பிரெஞ்ச் மன்னன் நெப்போலியன் போனபார்ட் கூட உருகி உருகி தன் மனைவி ஜோசபினுக்குக் காதல் கடிதம் எழுதித்தான் இருக்கிறார். 


கல்நெஞ்சனோ காட்டானோ யாராய் இருப்பினும் காதல் வந்ததும், கவித்துவமாய் வரிந்து வரிந்து கடிதம் எழுதிப் பரிமாறிக்கொண்ட காலம் இருந்தது. இன்றைய தொழில்நுட்பம் கபளீகரம் செய்துவிட்ட சின்ன சின்ன மகிழ்ச்சிகளில் இதுவும் ஒன்று.


கண்ணதாசன் அவர்கள் எழுதிய காலத்தால் கரைக்க முடியாத கடிதப் பாடல் ஒன்று உண்டு. 




"அன்புள்ள மான்விழியே, ஆசையில் ஓர் கடிதம்! 

நான் எழுதுவதென்னவென்றால் உயிர் காதலில் ஓர் கவிதை! 

அன்புள்ள மன்னவனே, ஆசையில் ஓர் கடிதம்! 

அதைக் கைகளில் எழுதவில்லை, இரு கண்களில் எழுதி வந்தேன்!"


பாட்டில் நடிகை ஜமுனாவின் கண்ணசைவைப் பார்த்தால் கண்களில் தான் எழுதி இருக்கிறார் என்று சத்தியமே செய்வீர்கள். 


வாலி அவர்கள் எழுதிய கடிதப் பாடல் ஒன்று உண்டு. நடுநடுவல மானே, தேனே, பொன்மானே எல்லாம் போட்டு எழுதப்பட்ட பாடல். 


"கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே! 

பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா?நான் இங்கு சௌக்கியமே! "


Video: காதல் கடிதங்களை பாடல்களில் தூது விட்ட திரைப்பாடல்கள்


இந்த வரிகளை அப்படியே மாற்றி போட்ட கடிதப் பாடல் நினைவுக்கு வருகிறதா? 


"நலம், நலமறிய ஆவல்! உன் நலம், நலமறிய ஆவல்! 

நீ இங்கு சுகமே, நான் அங்கு சுகமா?"

 

என்ற வரிகள் அவை. வைரமுத்து அவர்கள் எழுதிய கடிதப் பாடல் தெரியுமா? 


"காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்! 

வானின் நீலம் கொண்டு வா, பேனா மையோ தீர்ந்திடும்!

சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள்

இரவு, பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சேர்ந்திடும்!"

 

பெண் பாடுகிறாள்:


"கடிதத்தின் வார்த்தைகளில்

கண்ணா நான் வாழுகிறேன்! 

பேனாவில் ஊற்றி வைத்தது எந்தன் உயிரல்லோ! "


ஆண் சொல்கிறான்: 


"பொன்னே உன் கடிதத்தை பூவாலே திறக்கின்றேன்! 

விரல்பட்டால் உந்தன் ஜீவன் காயம் படுமல்லோ!"


மென்மையான காதலை மயிலிறகால் வருடும் வரிகள்.. மீண்டும் பகிரலாம்!


(தென்றல் தொடர்ந்து வீசும்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பாதுகாப்பான Iron Dome தகர்ந்ததா.. ஈரானின் அதிரடியால் இஸ்ரேல் மக்கள் அதிர்ச்சி + பதட்டம்!

news

புதிய பொலிவுடன் வள்ளுவர் கோட்டம்: நாளை திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

முதல்வர் மருந்தகத்தில் மாவு விற்பனை: முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் எக்ஸ் தள பதிவு!

news

கருவறை முதல் கல்லறை வரை... அலட்சியமும் ஊழலும் மலிந்து போன திமுக அரசு: தவெக

news

ஸ்வஸ்திக் சின்னம்.. அதிர்ஷ்டம், மங்கலம் மற்றும் செழிப்பின் அடையாளம்!

news

AI-யிலும் வடிவேலுதான் கிங்கு.. எங்க பார்த்தாலும் அந்தக் குண்டுப் பையன்தான் உருண்டுட்டிருக்கான்!

news

சாலையில் கழன்று ஓடிய அரசுப் பேருந்து சக்கரங்கள்: 3 மாணவர்கள் படுகாயம்

news

அதிரடியாக தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 குறைவு... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்