சென்னை: பாஜக பிரமுகர் அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. 55 அடி உயரத்தில் கொடிக் கம்பம் அமைத்தால், கொடி மக்கள் கண்ணுக்குத் தெரியாது. காக்கா, குருவி உட்காரத்தான் அது பயன்படும் என்றும் நீதிபதி சி.வி.கார்த்திகேயன் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வீடு பனையூர் பகுதியில் உள்ளது. இந்த வீட்டுக்கு அருகே சமீபத்தில் பாஜகவினர் 55 அடி உயர கொடிக் கம்பத்தை நிறுவ முயற்சித்தனர். இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த பலர் எதிர்ப்பு தெரிவித்ததால் பிரச்சினை வெடித்தது. இதையடுத்து போலீஸாருக்குப் புகார் போகவே போலீஸார் விரைந்து வந்து கொடிக் கம்பத்தை அகற்றினர். மாநகராட்சி அனுமதி இல்லாமல் கொடிக் கம்பம் நிறுவப்பட்டதாக போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தின்போது பாஜக பிரமுகர் அமர்பிரசாத் ரெட்டி, கொடிக் கம்பத்தை அகற்ற வந்த ஜேசிபி வாகனத்தின் கண்ணாடியை சேதப்படுத்தினார். இதில் கண்ணாடி உடைந்தது. இதையடுத்து அமர்பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேரை கானாத்தூர் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர்.
இந்த மனுவை நீதிபதி சி.வி.கார்த்திகேயன் இன்று விசாரித்தார். அப்போது போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சம்பந்தப்பட்ட இடத்தில் கொடிக் கம்பம் வைக்க மாநகராட்சி அனுமதி தரவில்லை. அனுமதி தரப்படாத இடத்தில் அதை மீறிக் கொடிக்கம்பம் வைக்க முயற்சித்தனர். இந்த வழக்கில் 100க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் அமர்பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேரையும் விடுவித்தால் விசாரணை் பாதிக்கப்படும். சாட்சிகளைக் கலைக்க இவர்கள் முயற்சிப்பார்கள் என்று வாதிடப்பட்டது.
விசாரணையின்போது குறுக்கிட்ட நீதிபதி சி.வி.கார்த்திகேயன், 55 அடி உயரத்தில் கொடிக் கம்பம் வைக்க முடிவு செய்ததே முதலில் முட்டாள்தனமானது. அத்தனை உயரத்தில் கொடிக் கம்பத்தை வைத்து அதில் கொடியைப் பறக்க விட்டால் அது மக்கள் கண்ணுக்கே தெரியாதே. காக்கா, குருவி உட்காரத்தான் அது பயன்படும் என்றார். அதைத் தொடர்ந்து, மாநகராட்சி அனுமதி தராத இடத்தில் மீண்டும் கொடிக் கம்பம் வைக்க மாட்டோ்ம் என்று பிரமானப்பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். ஜேசிபி உரிமையாளருக்கு 6 பேரும் தலா ரூ. 2000 இழப்பீடு தர வேண்டும் என்று உத்தரவிட்டு, 6 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
ஞானச்செறுக்கு நிறைந்த.. பாட்டுப் புலவன்.. முண்டாசுக் கவிஞன் .. பாரதியாரின் நினைவு நாள் இன்று!
பாமகவின் செயல் தலைவர் பதவி அடுத்து யாருக்கு.. டாக்டர் ராமதாஸின் சாய்ஸ் இவரா?
தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி மொழி ஏற்பு!
தொடர்ந்து 3வது நாளாக மாற்றமின்றி இருந்து வரும் தங்கம், வெள்ளி விலை.... இதோ இன்றைய விலை நிலவரம்!
பாமக வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கம் : டாக்டர் ராமதாஸ் அதிரடி
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 11, 2025... இன்று அன்பு பெருகும்
திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகள் பலிகடா ஆக்கப்படுவது கண்டிக்கத்தக்கது: அண்ணாமலை
திருமண உதவித் திட்டம்: 5,460 தங்க நாணயங்கள் கொள்முதலுக்கு டெண்டர் அறிவிப்பு
முதல் ரவுண்டில் பாதிகூட்டணியை காணோம்..2வதில் டிரைவர் கூட இருப்பாரானு தெரியலை: உதயநிதி ஸ்டாலின்!
{{comments.comment}}