"55 அடி உயர கொடிக் கம்பத்தில் காக்கா உட்காரும்".. நீதிபதி கருத்து.. அமர் பிரசாத் ரெட்டிக்கு ஜாமீன்

Nov 10, 2023,02:06 PM IST

சென்னை: பாஜக பிரமுகர் அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. 55 அடி உயரத்தில் கொடிக் கம்பம் அமைத்தால், கொடி மக்கள் கண்ணுக்குத் தெரியாது. காக்கா, குருவி உட்காரத்தான் அது பயன்படும் என்றும் நீதிபதி சி.வி.கார்த்திகேயன் கருத்து தெரிவித்துள்ளார்.


தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வீடு பனையூர் பகுதியில் உள்ளது. இந்த வீட்டுக்கு அருகே சமீபத்தில் பாஜகவினர் 55 அடி உயர கொடிக் கம்பத்தை நிறுவ முயற்சித்தனர். இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த பலர் எதிர்ப்பு தெரிவித்ததால் பிரச்சினை வெடித்தது. இதையடுத்து போலீஸாருக்குப் புகார் போகவே போலீஸார் விரைந்து வந்து கொடிக் கம்பத்தை அகற்றினர். மாநகராட்சி அனுமதி இல்லாமல் கொடிக் கம்பம் நிறுவப்பட்டதாக போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.


இந்த சம்பவத்தின்போது பாஜக பிரமுகர் அமர்பிரசாத் ரெட்டி, கொடிக் கம்பத்தை அகற்ற வந்த ஜேசிபி வாகனத்தின் கண்ணாடியை சேதப்படுத்தினார். இதில் கண்ணாடி உடைந்தது. இதையடுத்து அமர்பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேரை கானாத்தூர் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர்.




இந்த மனுவை நீதிபதி சி.வி.கார்த்திகேயன் இன்று விசாரித்தார். அப்போது போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சம்பந்தப்பட்ட இடத்தில் கொடிக் கம்பம் வைக்க மாநகராட்சி அனுமதி தரவில்லை. அனுமதி தரப்படாத இடத்தில் அதை மீறிக் கொடிக்கம்பம் வைக்க முயற்சித்தனர். இந்த வழக்கில் 100க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் அமர்பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேரையும் விடுவித்தால் விசாரணை் பாதிக்கப்படும். சாட்சிகளைக் கலைக்க இவர்கள் முயற்சிப்பார்கள் என்று வாதிடப்பட்டது.


விசாரணையின்போது குறுக்கிட்ட நீதிபதி சி.வி.கார்த்திகேயன், 55 அடி உயரத்தில் கொடிக் கம்பம் வைக்க முடிவு செய்ததே முதலில் முட்டாள்தனமானது. அத்தனை உயரத்தில் கொடிக் கம்பத்தை வைத்து அதில் கொடியைப் பறக்க விட்டால் அது மக்கள் கண்ணுக்கே தெரியாதே. காக்கா, குருவி உட்காரத்தான் அது பயன்படும் என்றார். அதைத் தொடர்ந்து, மாநகராட்சி அனுமதி தராத இடத்தில் மீண்டும் கொடிக் கம்பம் வைக்க மாட்டோ்ம் என்று பிரமானப்பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். ஜேசிபி உரிமையாளருக்கு 6 பேரும் தலா ரூ. 2000 இழப்பீடு தர வேண்டும் என்று உத்தரவிட்டு, 6 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகள்

news

அகமதாபாத் விமான விபத்து.. குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

news

அகமதாபாத்தில் விமான விபத்து...133 பேர் பலி... பயணிகளில் 169 பேர் இந்தியர்கள்.. ஏர் இந்தியா தகவல்!

news

விமான விபத்தில் சிக்கிய.. முன்னாள் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி எப்படி இருக்கிறார்?

news

அகமதாபாத்தில் பரபரப்பு.. ஏர்இந்தியா விமானம் விழுந்து நொறுங்கியது.. 200 பயணிகளின் நிலை என்ன?

news

இனி இல்லை மன அழுத்தம்!

news

காவல்துறை தரம்தாழ்ந்துவிட்டது... இதுதான் திராவிட மாடல் திமுக அரசு தமிழை வளர்க்கும் முறையா?: சீமான்!

news

6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு… 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்... வானிலை ஆய்வு மையம்

news

வயிற்றுக்குள்.. குத்தாட்டம் போடும் குடற்புழுக்களை.. அழித்து ஒழிக்கும் சூப்பர் காய்.. சுண்டைக்காய்!

news

என்னை குலசாமி என சொல்லிக்கொண்டே நெஞ்சில் குத்துகிறார்கள்: டாக்டர் ராமதாஸ் வேதனை பேச்சு!

அதிகம் பார்க்கும் செய்திகள்