"55 அடி உயர கொடிக் கம்பத்தில் காக்கா உட்காரும்".. நீதிபதி கருத்து.. அமர் பிரசாத் ரெட்டிக்கு ஜாமீன்

Nov 10, 2023,02:06 PM IST

சென்னை: பாஜக பிரமுகர் அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. 55 அடி உயரத்தில் கொடிக் கம்பம் அமைத்தால், கொடி மக்கள் கண்ணுக்குத் தெரியாது. காக்கா, குருவி உட்காரத்தான் அது பயன்படும் என்றும் நீதிபதி சி.வி.கார்த்திகேயன் கருத்து தெரிவித்துள்ளார்.


தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வீடு பனையூர் பகுதியில் உள்ளது. இந்த வீட்டுக்கு அருகே சமீபத்தில் பாஜகவினர் 55 அடி உயர கொடிக் கம்பத்தை நிறுவ முயற்சித்தனர். இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த பலர் எதிர்ப்பு தெரிவித்ததால் பிரச்சினை வெடித்தது. இதையடுத்து போலீஸாருக்குப் புகார் போகவே போலீஸார் விரைந்து வந்து கொடிக் கம்பத்தை அகற்றினர். மாநகராட்சி அனுமதி இல்லாமல் கொடிக் கம்பம் நிறுவப்பட்டதாக போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.


இந்த சம்பவத்தின்போது பாஜக பிரமுகர் அமர்பிரசாத் ரெட்டி, கொடிக் கம்பத்தை அகற்ற வந்த ஜேசிபி வாகனத்தின் கண்ணாடியை சேதப்படுத்தினார். இதில் கண்ணாடி உடைந்தது. இதையடுத்து அமர்பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேரை கானாத்தூர் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர்.




இந்த மனுவை நீதிபதி சி.வி.கார்த்திகேயன் இன்று விசாரித்தார். அப்போது போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சம்பந்தப்பட்ட இடத்தில் கொடிக் கம்பம் வைக்க மாநகராட்சி அனுமதி தரவில்லை. அனுமதி தரப்படாத இடத்தில் அதை மீறிக் கொடிக்கம்பம் வைக்க முயற்சித்தனர். இந்த வழக்கில் 100க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் அமர்பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேரையும் விடுவித்தால் விசாரணை் பாதிக்கப்படும். சாட்சிகளைக் கலைக்க இவர்கள் முயற்சிப்பார்கள் என்று வாதிடப்பட்டது.


விசாரணையின்போது குறுக்கிட்ட நீதிபதி சி.வி.கார்த்திகேயன், 55 அடி உயரத்தில் கொடிக் கம்பம் வைக்க முடிவு செய்ததே முதலில் முட்டாள்தனமானது. அத்தனை உயரத்தில் கொடிக் கம்பத்தை வைத்து அதில் கொடியைப் பறக்க விட்டால் அது மக்கள் கண்ணுக்கே தெரியாதே. காக்கா, குருவி உட்காரத்தான் அது பயன்படும் என்றார். அதைத் தொடர்ந்து, மாநகராட்சி அனுமதி தராத இடத்தில் மீண்டும் கொடிக் கம்பம் வைக்க மாட்டோ்ம் என்று பிரமானப்பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். ஜேசிபி உரிமையாளருக்கு 6 பேரும் தலா ரூ. 2000 இழப்பீடு தர வேண்டும் என்று உத்தரவிட்டு, 6 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகள்

news

இந்த வாழ்க்கை ஒரு கனவா?

news

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்

news

பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு

news

2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு

news

Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

news

மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை

news

காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு

அதிகம் பார்க்கும் செய்திகள்