சென்னை: தனது மகளை ஆன்மீக தலைவர் ஜக்கி வாசுதேவ் திருமணம் செய்து கொடுத்து, நல்ல நிலைக்கு ஆளாக்கி வாழ வைத்துள்ளார். ஆனால் மற்ற பெண்கள் மொட்டையடித்துக் கொண்டு துறவி போல வாழுமாறு அவர் வலியுறுத்துவது ஏன் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேட்டுள்ளது.
ஆன்மீக தலைவரான ஜக்கி வாசுதேவ் தனது இரு மகள்களையும் மொட்டையடித்துக் கொண்டு துறவிகள் போல ஈஷா பவுண்டேஷனிலேயே தங்க வைத்துள்ளதாகவும், அவர்களை மீட்கக் கோரியும் கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக ஓய்வு பெற்ற பேராசிரியர் எஸ்.காமராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அவரது மகள்களுக்கு தற்போது முறையே 42 மற்றும் 39 வயதாகிறது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம் மற்றும் வி. சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காமராஜின் இரு மகள்களும் நேரில் ஆஜரானார்கள். தங்களது சொந்த விருப்பத்தின் பேரிலேயே ஈஷா பவுண்டேஷனில் தங்கியிருப்பதாக இருவரும் நீதிபதிகளிடம் தெரிவித்தனர். தாங்கள் கட்டாயப்படுத்தி அடைத்து வைக்கப்படவில்லை என்றும் அவர்கள் கூறினர்.
இதையடுத்து காவல்துறைக்கு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கை நாங்கள் மேலும் விசாரிக்க விரும்புகிறோம். ஈஷா பவுண்டேஷன் தொடர்பாக நிலுவையில் உள்ள அனைத்து வழக்கு விவரங்களையும் தொகுத்து எங்களுக்கு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
விசாரணையின்போது நீதிபதி சிவஞானம் கூறுகையில், இவர் (ஜக்கி வாசுதேவ்) தனது மகளை நன்றாக திருமணம் செய்து கொடுத்து நல்ல முறையில் செட்டில் செய்துள்ளார். ஆனால் மற்ற இளம் பெண்கள் மொட்டையடித்துக் கொண்டு பரிதாபகரமான வாழ்க்கை போல வாழ வேண்டும் என்று ஏன் விரும்புகிறார் என்பது புரியவில்லை என்று தெரிவித்தார்.
தனது இரு மகள்களையும் ஜக்கி வாசுதேவ் மூளைச் சலவை செய்து தனது ஆசிரமத்திலேயே தங்க வைத்திருப்பதாக காமராஜ் குற்றம் சாட்டுகிறார். ஆனால் இதை ஈஷா பவுண்டேஷன் மறுத்துள்ளது. இரு பெண்களும் அவர்களது சுய விருப்பத்தின் பேரில்தான் தங்கியிருப்பதாக அது கூறுகிறது. கடந்த 10 வருடமாக தனது மகள்களை மீட்க காமராஜ் சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இந்த வாழ்க்கை ஒரு கனவா?
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்
பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு
2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு
Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்
மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை
காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு
{{comments.comment}}