சென்னை உயர்நீதிமன்ற பெண் வழக்கறிஞர் சங்கத் தலைவர் என்.எஸ்.ரேவதி, நிர்வாகிகள் பொறுப்பேற்பு

Oct 02, 2024,10:23 AM IST

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.


சென்னை உயர் நீதிமன்றத்தின் பெண் வழக்கறிஞர் சங்கத்திற்கு கடந்த 2019 ம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டது.  அந்த நிர்வாகிககளின் பதவிக்காலம் முடிந்தும்  கடந்த நான்கரை ஆண்டுகளாக தேர்தல் நடத்தாமல் அதே நிர்வாகிகள் விதிகளுக்கு முரணாக செயல்ப்பட்டு வந்தனர்.




இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி, சென்னை உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தேர்தல் கடந்த செப் 27ம் தேதி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதில், சென்னை உயர் நீதிமன்றத்தின் 

தலைவராக என்.எஸ் ரேவதியும், துணை தலைவராக ராஜலட்சுமியும், செயலாளராக பர்வீன், நூலகராக மார்க்கெரெட் லாரன்ஸ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டனர்.


சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீராம் சான்றிதழ்களை வழங்கினார்.  இதைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.


புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட உயர்நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் அடுத்த 2 ஆண்டுகள் பதவியில் நீடிப்பார்கள் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!

news

அட்சய திருதியை முன்னிட்டு.. தங்கத்தின் விலை தொடர் சரிவு.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!

news

Swearing in: அமைச்சராக இன்று மாலை பதவி ஏற்கிறார்.. மனோ தங்கராஜ்

news

ஜனாதிபதி கையால் பத்மபூஷன் விருதை பெற.. குடும்பத்துடன் டெல்லிக்கு கிளம்பினார்.. நடிகர் அஜித்!

news

Cabinet Reshuffle: பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்.. மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராகிறார்!

news

அமைச்சர்கள் நீக்கம்.. தானாக எடுத்தது அல்ல.. தவிர்க்க முடியாமல் எடுக்கப்பட்டது.. டாக்டர் தமிழிசை

news

IPl 2025.. எல்லை தாண்டி எகிறி அடிக்கும் வீரர்கள்.. ஐபிஎல்லில் இதுவரை குவிக்கப்பட்ட Super சிக்சர்கள்!

news

துபாய், சிங்கப்பூர், கொழும்பு வழியாக.. பாகிஸ்தானுக்கு தங்கு தடையின்றி செல்லும்.. இந்தியப் பொருட்கள்!

news

பஹல்காம் தாக்குதல் .. மத்திய அரசு, ராணுவம் குறித்து விமர்சனம்.. நாடு முழுவதும் 19 பேர் கைது

அதிகம் பார்க்கும் செய்திகள்