சென்னை: நடிகையும் எம்.பி.யுமான ஜெயப்பிரதா சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிப் படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜெயப்பிரதா. தமிழில் கமல்ஹாசனுடன் இணைந்தும், பிற நடிகர்களுடனும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். நினைத்தாலே இனிக்கும், சலங்கை ஒலி உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார்.
பின்னர் அரசியலில் புகுந்த இவர் சமாஜ்வாடிக் கட்சியில் ஆரம்பத்தில் இருந்தார். பின்னர் அதிலிருந்து விலகினார். தற்போது பாஜகவில் இருக்கிறார். உத்தரப் பிரதேச மாநில அரசியலில் இவர் ஈடுபட்டுள்ளார். இவர் மீது சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நீண்ட காலமாக ஒரு வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.
அதாவது முன்பு ஜெயப்பிரதா என்ற தியேட்டரை சென்னையில் நடத்தி வந்தார். அதில் பணியாற்றிய ஊழியர்களுக்கு இஎஸ்ஐக்காக பணம் பிடித்து விட்டு அதை செலுத்தாமல் இருந்து வந்தார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள், எழும்பூர் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் ஜெயப்பிரதா உள்ளிட்ட 3 பேருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டதுடன் 5000 அபராதமும் விதித்து எழும்பூர் கோர்ட் உத்தரவிட்டது. இதை எதிர்த்து சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் அப்பீல்செய்தார் ஜெயப்பிரதா. அங்கு வழக்கு விசாரணைக்கு ஏற்கப்பட்டது. ஆனால் தண்டனை நிறுத்திவைக்கப்படவில்லை. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார் ஜெயப்பிரதா.
இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது என்றும், முதன்மை அமர்வு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய மறுத்தும் உத்தரவிட்டது. மேலும் 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும். மேலும், நிலுவையில் உள்ள ரூ. 20 லட்சம் தொகையை இஎஸ்ஐக்கு செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதனால் ஜெயப்பிரதாவுக்கு சிக்கல் எழுந்துள்ளது. இதையெல்லாம் செய்தால்தான் அவருக்கு ஜாமீன் கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது.
அகமதாபாத் விமான விபத்து.. குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
அகமதாபாத்தில் விமான விபத்து...133 பேர் பலி... பயணிகளில் 169 பேர் இந்தியர்கள்.. ஏர் இந்தியா தகவல்!
அகமதாபாத்தில் விமான விபத்து... விடுதியில் சாப்பிட்டு கொண்டிருந்த மருத்துவ மாணவர்கள் 5 பேர் பலி?
ராஜ்யசபா எம்.பி ஆனார் ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்.. அதிமுக, திமுக வேட்பாளர்களும் வெற்றி!
விமான விபத்தில் சிக்கிய.. முன்னாள் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி எப்படி இருக்கிறார்?
அகமதாபாத்தில் பரபரப்பு.. ஏர்இந்தியா விமானம் விழுந்து நொறுங்கியது.. 200 பயணிகளின் நிலை என்ன?
காவல்துறை தரம்தாழ்ந்துவிட்டது... இதுதான் திராவிட மாடல் திமுக அரசு தமிழை வளர்க்கும் முறையா?: சீமான்!
6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு… 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்... வானிலை ஆய்வு மையம்
என்னை குலசாமி என சொல்லிக்கொண்டே நெஞ்சில் குத்துகிறார்கள்: டாக்டர் ராமதாஸ் வேதனை பேச்சு!
{{comments.comment}}