சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரை ரத்து செய்ய முடியாது எனக்கூறி, வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.
கடந்த 2011ம் ஆண்டு வளசரவாக்கம் போலீசில் நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக புகார் கொடுத்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கை எதிர்த்து சீமான் அளித்த மனுத்தாக்கலில், கடந்த 2011ம் ஆண்டு அளித்த புகாரை 2012ம் ஆண்டிலேயே திரும்பப் பெறுவதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த கடிதத்தின் அடிப்படையில் வழக்கை முடித்து வைக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்த போது, காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, வழக்கை ரத்து செய்வது தொடர்பாக நடிகை வியலட்சுமி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டது. அதன் பின்னர் இந்த வழக்கு தொடர்ந்து நிலுவையில் இருந்தது.
இந்தநிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் நடிகை விஜயலட்சுமி கொடுது்த புகாரை ரத்து செய்ய முடியாது எனக்கூறி சீமான தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் துன்புறுத்தல் செய்ததாக சீமான் மீது விஜயலட்சுமி அளித்த புகாரை 3 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என வளசரவாக்கம் காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக விஜயலட்சுமி வாக்குமூலத்தை காவல்துறை சீலிட்ட கவரில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அப்போது சீமானின் முதல் மனைவியா விஜயலட்சுமி என்று நீதிபதி கேட்டபோது, விஜயலட்சுமிக்கும் - சீமானுக்கும் மதுரையில் வைத்து திருமணம் நடந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மதுரை, கோவை மெட்ரோ திட்டங்களுக்கு அனுமதி தருக.. பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
காஞ்சிபுரம் மக்களை தவெக தலைவர் விஜய் நாளை சந்திக்கிறார்: புஸ்ஸி ஆனந்த்!
திமுகவுடன் பேச 5 பேர் குழு.. விஜய்யுடன் பேச்சு கிசுகிசுப்புக்கு.. முற்றுப்புள்ளி வைத்தது காங்கிரஸ்
மரபுக்கவிதை புதுக்கவிதையிலும் சிறந்து விளங்கியவர்..தமிழன்பன் மறைவுக்கு முதல்வர் முக ஸ்டாலின் இரங்கல்
திமுக ஆட்சியில் பள்ளி முதல் பள்ளிவாசல் வரை பல்லிளிக்கும் பெண்களின் பாதுகாப்பு: நயினார் நாகேந்திரன்!
திமுக ஆட்சியில், திமுக-வினரிடம் இருந்தே பெண்களைக் காக்க வேண்டிய அவல நிலை: எடப்பாடி பழனிச்சாமி
தமிழகத்தில் நாளை 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிவு... துப்பாக்கி கலாச்சாரத்திற்கு இன்னும் ஒரு சான்று: அன்புமணி
ஜனநாயகன் விஜய்.. ஓவர் டூ மலேசியா.. உற்சாகத்தில் ரசிகர்கள்.. டிசம்பர் 27ல் சரவெடி!
{{comments.comment}}