மக்களவைத் தேர்தலில்.. தயாநிதி மாறன் வெற்றி செல்லும்.. சென்னை ஹைகோர்ட் உத்தரவு..!

Mar 07, 2025,07:49 PM IST

சென்னை: மத்திய சென்னை தொகுதிக்கு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தயாநிதி மாறன் வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது தீர்ப்பு வழங்கி உள்ளது.


கடந்த 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மத்திய சென்னை  தொகுதியில் திமுக சார்பில் தயாநிதி மாறன் போட்டியிட்டு இரண்டு லட்சத்து 33 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதே தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட வழக்கறிஞர் எம்.எல் ரவி இந்தத் தேர்தல் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி, தயாநிதி மாறனின் வெற்றியை எதிர்த்து   சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.



இந்த மனுவில் கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஏப்ரல் 17ஆம் தேதியுடன்  பிரச்சார பணிகள் முடிவடைந்த நிலையில் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குபதிவு நடைபெற்றது. அன்று தயாநிதி மாறன் பிரச்சார விளம்பரம் குறித்து பத்திரிகைகளில் வெளியிட்டதாகவும், இது சட்டத்திற்கு புறம்பானது  எனவும் அதில் கூறப்பட்டிருந்தது. மேலும் பிரச்சார செலவு , விளம்பரச் செலவு, பூத் கமிஷன் என தேர்தல் ஆணையம் நியமித்த தொகையை விட அதிக அளவு பணம் செலவழித்ததாகவும் தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்தன. எனவே தயாநிதி மாறனின் வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும் என கூறப்பட்டது.


இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில், தேர்தல் வழக்கை தொடர்ந்து விசாரிக்க எந்த காரணம் இல்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தார். பின்னர் சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறனின் வெற்றி செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஆபரேஷன் சிந்து தொடர்கிறது.. ஈரானிலிருந்து இதுவரை 517 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்

news

17.5 கோடிக்கு வீடு வாங்கி .. 1.6 கோடிக்கு.. வாடகைக்கு விடும் நடிகர் மாதவன்!

news

வாரத்தின் இறுதி நாளான இன்றும் தங்கம் விலை உயர்வு... எவ்வளவு தெரியுமா?

news

தாய்வீடு அனிதா ராஜை ஞாபகம் இருக்கா.. 62 வயதிலும் எப்படி.. ஃபிட்டா இருக்காங்க பாருங்க!

news

தனுசின் குபேரா முதல் நாள் வசூல் இவ்வளவு தானா?.. ராயனை விட மோசம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

news

93 ஆண்டுகளில் இல்லாத வரலாறு.. சதம் போடுவதில் அசகாய சாதனையைப் படைத்த.. ஜெய்ஸ்வால்!

news

போர்களும், மோதல்களும் சூழ்ந்த உலகம்.. யோகா அமைதியைக் கொண்டு வரும்.. பிரதமர் மோடி நம்பிக்கை

news

பாதுகாப்பான Iron Dome தகர்ந்ததா.. ஈரானின் அதிரடியால் இஸ்ரேல் மக்கள் அதிர்ச்சி + பதட்டம்!

news

புதிய பொலிவுடன் வள்ளுவர் கோட்டம்: நாளை திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

அதிகம் பார்க்கும் செய்திகள்