சென்னை: மத்திய சென்னை தொகுதிக்கு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தயாநிதி மாறன் வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது தீர்ப்பு வழங்கி உள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் தயாநிதி மாறன் போட்டியிட்டு இரண்டு லட்சத்து 33 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதே தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட வழக்கறிஞர் எம்.எல் ரவி இந்தத் தேர்தல் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி, தயாநிதி மாறனின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவில் கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஏப்ரல் 17ஆம் தேதியுடன் பிரச்சார பணிகள் முடிவடைந்த நிலையில் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குபதிவு நடைபெற்றது. அன்று தயாநிதி மாறன் பிரச்சார விளம்பரம் குறித்து பத்திரிகைகளில் வெளியிட்டதாகவும், இது சட்டத்திற்கு புறம்பானது எனவும் அதில் கூறப்பட்டிருந்தது. மேலும் பிரச்சார செலவு , விளம்பரச் செலவு, பூத் கமிஷன் என தேர்தல் ஆணையம் நியமித்த தொகையை விட அதிக அளவு பணம் செலவழித்ததாகவும் தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்தன. எனவே தயாநிதி மாறனின் வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும் என கூறப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில், தேர்தல் வழக்கை தொடர்ந்து விசாரிக்க எந்த காரணம் இல்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தார். பின்னர் சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறனின் வெற்றி செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!
அட்சய திருதியை முன்னிட்டு.. தங்கத்தின் விலை தொடர் சரிவு.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!
Swearing in: அமைச்சராக இன்று மாலை பதவி ஏற்கிறார்.. மனோ தங்கராஜ்
ஜனாதிபதி கையால் பத்மபூஷன் விருதை பெற.. குடும்பத்துடன் டெல்லிக்கு கிளம்பினார்.. நடிகர் அஜித்!
Cabinet Reshuffle: பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்.. மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராகிறார்!
அமைச்சர்கள் நீக்கம்.. தானாக எடுத்தது அல்ல.. தவிர்க்க முடியாமல் எடுக்கப்பட்டது.. டாக்டர் தமிழிசை
IPl 2025.. எல்லை தாண்டி எகிறி அடிக்கும் வீரர்கள்.. ஐபிஎல்லில் இதுவரை குவிக்கப்பட்ட Super சிக்சர்கள்!
துபாய், சிங்கப்பூர், கொழும்பு வழியாக.. பாகிஸ்தானுக்கு தங்கு தடையின்றி செல்லும்.. இந்தியப் பொருட்கள்!
பஹல்காம் தாக்குதல் .. மத்திய அரசு, ராணுவம் குறித்து விமர்சனம்.. நாடு முழுவதும் 19 பேர் கைது
{{comments.comment}}