அள்ளி அள்ளித் தரும் தாயுள்ளம்.. மேலும் 91 சென்ட் நிலம் தானம்.. அசத்தும் மதுரை பூரணத்தம்மாள்!

Feb 05, 2024,10:21 PM IST

மதுரை: மதுரை ஆயி பூரணத்தம்மாள் தனக்குச் சொந்தமான மேலும் 91 சென்ட் நிலத்தை அரசுப் பள்ளிக்குத் தானமாக கொடுத்து ஆச்சரியப்படுத்தியுள்ளார். இந்த நிலத்தின் மதிப்பு ரூ. 3 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.


மதுரை கொடிக்குளம்  பகுதியைச் சேர்ந்தவர் ஆயி பூரணத்தம்மாள். இவரது ஒரே மகள் ஜனனி காலமாகி விட்டார். மதுரை கனரா வங்கியில் வேலை பார்த்து வரும் பூரணத்தம்மாள் தனது மகள் நினைவாக, கொடிக்குளம் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு தனக்குச் சொந்தமான 1.52 ஏக்கர் நிலத்தை தானமாக அளித்து அனைவரையும் நெகிழ வைத்தார். இதன் சந்தை மதிப்பு ரூ. 7 கோடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


இதையடுத்து  மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் இவரை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார். இவரைப் பற்றி நெகிழ்ச்சியுடன் பதிவிட்டார். இவரை நேரில் சந்தித்தும் வணங்கினார். இதையடுத்து தமிழ்நாடு அரசும் அவருக்கு முதலமைச்சர் சிறப்பு விருது அளித்து குடியரசு தின விழாவில் கெளரவித்தது.




இந்த நிலையில் மீண்டும் மக்களை நெகிழ வைக்கும் காரியத்தை செய்துள்ளார் பூரணத்தம்மாள். தனக்குச் சொந்தமான மேலும் 91 சென்ட் நிலத்தையும் அரசுப் பள்ளிக்கே எழுதிக் கொடுத்து விட்டார் பூரணத்தம்மாள். இதன் மதிப்பு ரூ. 3 கோடியாகும்.


அடுத்தடுத்து அரசுப் பள்ளிக்கூடத்திற்கு தனது நிலத்தை தானமாக அளித்து அனைவரது உள்ளத்திலும் மிகப் பெரிய இடத்தைப் பெற்றுள்ளதோடு, கல்விக்கு பூரணம்மாள் கொடுத்துள்ள இந்த முக்கியத்துவம் அனைவரையும் உருக வைத்துள்ளது.


"கல்வித்தந்தை" என்று கூறிக் கொள்ளும் பலரை நாம் பார்த்திருக்கிறோம்.. அந்தப் பெயரை வைத்துக் கொண்டு, வசூல் வேட்டையாடி கல்லாக் கட்டுவோர்தான் அதிகம்.. ஆனால்  உண்மையில்.. இவர்தான் பூரணத்தம்மாள்தான் உண்மையான "கல்வித்தாய்".. மனதார பாராட்டுவோம்!

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்