மதுரை விமான நிலையம்.. ஏப்ரல் 1 முதல் "24*7"..  சு. வெங்கடேசன் நன்றி!

Jan 13, 2023,11:10 AM IST
மதுரை: மதுரை விமான நிலையம் ஏப்ரல் 1ம் தேதி முதல் 24 மணி நேரமும் இயங்கும் என்று மத்திய இந்திய விமான நிலைய ஆணையகம் தெரிவித்துள்ளது.



தமிழ்நாட்டில் சென்னை,  திருச்சி, கோவை, மதுரை ஆகிய நகரங்களில்  உள்ள விமான நிலையங்கள் வர்த்தக ரீதியாக முக்கியமானவையாக திகழ்கின்றன.  இதில் சென்னை, திருச்சி,  கோவை விமான நிலையங்கள் 24 நேரமும் இயங்கி வருபவையாகும்.  ஆனால் மதுரை விமான நிலையம் பகல் நேரத்தில் மட்டுமே இயங்கி வருகிறது.

ஆனால் சமீப காலமாக மதுரை விமான நிலையத்தில் போக்குவரத்து அதிகரித்துள்ளது. அதிக அளவிலான விமானங்களும் இயக்கப்படுகின்றன. எனவே இரவு நேர விமான சேவையை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது. அந்தக் கோரிக்கையை ஏற்று ஏப்ரல் 1ம் தேதி முதல் மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான உத்தரவை மத்திய விமான நிலைய ஆணையகம் வெளியிட்டுள்ளது.

மதுரை மட்டுமல்லாமல், அகர்தலா, இம்பால், போபால்,  சூரத் ஆகிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களும் 24 மணி நேரமும் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்தப் புதியஅறிவிப்புக்கு மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் மகிழ்ச்சியும், நன்றியும் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில் 2026ல் ஆட்சி மாற்றம் வரும்.. பாஜக கூட்டணி குறித்து சொல்ல முடியாது: டாக்டர் ராமதாஸ்!

news

35 புதிய கல்லூரிகள் புதிதாக திறந்தும் ஒரு ஆசிரியர் கூட புதிதாக நியமிக்கவில்லை: அன்புமணி ராமதாஸ்

news

ஜூன் 13,14 மற்றும் 15ம் தேதிகளில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்: வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

தவெக.,வில் இணைந்த அதிமுக, திமுக முன்னாள் எம்எல்ஏ.,க்கள்.. விஜய் தரும் மெசேஜ் என்ன?

news

IRS அதிகாரி அருண்ராஜூக்கு தவெகவில் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் பதவி: தவெக தலைவர் விஜய் அறிவிப்பு

news

Out Of Controlலில் இருக்கும் பாலியல் SIRகளை Control செய்யவது எப்போது?: எடப்பாடி பழனிச்சாமி கேள்வி

news

தவெகவுடன் கூட்டணி குறித்து விஜய்யிடம் தான் கேட்க வேண்டும்... கூட்டணி ஆட்சி வந்தால் நல்லது; பிரேமலதா

news

இன்று வைகாசி விசாகம் 2025 : முருகனுக்கு இந்த நைவேத்தியம் படைத்தால் வாழ்க்கையே மாறும்

news

ராஜமெளலி படத்தில் இணைந்த மாதவன்.. என்ன ரோல் தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்