மதுரை விமான நிலையம்.. ஏப்ரல் 1 முதல் "24*7"..  சு. வெங்கடேசன் நன்றி!

Jan 13, 2023,11:10 AM IST
மதுரை: மதுரை விமான நிலையம் ஏப்ரல் 1ம் தேதி முதல் 24 மணி நேரமும் இயங்கும் என்று மத்திய இந்திய விமான நிலைய ஆணையகம் தெரிவித்துள்ளது.



தமிழ்நாட்டில் சென்னை,  திருச்சி, கோவை, மதுரை ஆகிய நகரங்களில்  உள்ள விமான நிலையங்கள் வர்த்தக ரீதியாக முக்கியமானவையாக திகழ்கின்றன.  இதில் சென்னை, திருச்சி,  கோவை விமான நிலையங்கள் 24 நேரமும் இயங்கி வருபவையாகும்.  ஆனால் மதுரை விமான நிலையம் பகல் நேரத்தில் மட்டுமே இயங்கி வருகிறது.

ஆனால் சமீப காலமாக மதுரை விமான நிலையத்தில் போக்குவரத்து அதிகரித்துள்ளது. அதிக அளவிலான விமானங்களும் இயக்கப்படுகின்றன. எனவே இரவு நேர விமான சேவையை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது. அந்தக் கோரிக்கையை ஏற்று ஏப்ரல் 1ம் தேதி முதல் மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான உத்தரவை மத்திய விமான நிலைய ஆணையகம் வெளியிட்டுள்ளது.

மதுரை மட்டுமல்லாமல், அகர்தலா, இம்பால், போபால்,  சூரத் ஆகிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களும் 24 மணி நேரமும் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்தப் புதியஅறிவிப்புக்கு மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் மகிழ்ச்சியும், நன்றியும் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி

news

சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு

news

விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு

news

ஈரான் இறக்குமதி பாதிப்பு...தத்தளிக்கும் தூத்துக்குடி தீப்பெட்டித் தொழில்

news

தவெக வேட்பாளர்களுடன் விஜய் நேர்காணல் ...அப்போ சிபிஐ சம்மன் என்னாச்சு?

news

சிலிண்டர் தட்டுப்பாடு...பிரதமர் மோடி பதவி விலக எதிர்க்கட்சிகள் முழக்கம்

news

"ம்ம்... என்னச் சொல்லப் போறானோ? மதன்".. அவளின் (ல்) அவன் (5)

news

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு...சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது

news

சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்