மதுரை விமான நிலையம்.. ஏப்ரல் 1 முதல் "24*7"..  சு. வெங்கடேசன் நன்றி!

Jan 13, 2023,11:10 AM IST
மதுரை: மதுரை விமான நிலையம் ஏப்ரல் 1ம் தேதி முதல் 24 மணி நேரமும் இயங்கும் என்று மத்திய இந்திய விமான நிலைய ஆணையகம் தெரிவித்துள்ளது.



தமிழ்நாட்டில் சென்னை,  திருச்சி, கோவை, மதுரை ஆகிய நகரங்களில்  உள்ள விமான நிலையங்கள் வர்த்தக ரீதியாக முக்கியமானவையாக திகழ்கின்றன.  இதில் சென்னை, திருச்சி,  கோவை விமான நிலையங்கள் 24 நேரமும் இயங்கி வருபவையாகும்.  ஆனால் மதுரை விமான நிலையம் பகல் நேரத்தில் மட்டுமே இயங்கி வருகிறது.

ஆனால் சமீப காலமாக மதுரை விமான நிலையத்தில் போக்குவரத்து அதிகரித்துள்ளது. அதிக அளவிலான விமானங்களும் இயக்கப்படுகின்றன. எனவே இரவு நேர விமான சேவையை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது. அந்தக் கோரிக்கையை ஏற்று ஏப்ரல் 1ம் தேதி முதல் மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான உத்தரவை மத்திய விமான நிலைய ஆணையகம் வெளியிட்டுள்ளது.

மதுரை மட்டுமல்லாமல், அகர்தலா, இம்பால், போபால்,  சூரத் ஆகிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களும் 24 மணி நேரமும் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்தப் புதியஅறிவிப்புக்கு மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் மகிழ்ச்சியும், நன்றியும் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்

news

காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு

news

பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!

news

மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!

news

மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!

news

முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!

news

தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!

news

பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?

news

ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.

அதிகம் பார்க்கும் செய்திகள்