மதுரை: மதுரை விமான நிலையம் இன்று முதல் 24 மணி நேரமும் செயல்படவுள்ளது. இதையடுத்து பாதுகாப்புக்காக கூடுதல் சிஎஸ்ஐஎப் படையினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர். மதுரை விமான நிலையம் 24 மணி நேர செயல்பாட்டைத் தொடங்கியுள்ளதால் மதுரையிலிருந்து விமான பயணம் செய்வோர் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டின் முக்கிய விமான நிலையங்களில் ஒன்றாக மதுரை திகழ்ந்து வருகிறது. ஆரம்ப காலத்தில் இது பாதுகாப்புப் படையினருக்கான விமான நிலையமாகத்தான் பயன்படுத்தப்பட்டு வந்தது. பின்னர்தான் இது சிவில் விமான நிலையமாக மாற்றப்பட்டது. அருகாமையில் உள்ள திருச்சி விமான நிலையத்திலிருந்துதான் முன்பு அதிக அளவிலான விமான சேவைகள் இருந்தன. ஆனால் காலப் போக்கில் மதுரை விமான நிலையத்திலிருந்தும் அதிக அளவிலான விமானங்களை இயக்க கோரிக்கை வலுத்து வந்தது.
இதையடுத்து படிப்படியாக மதுரை விமான நிலையத்திலிருந்தும் பல்வேறு இந்திய நகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் விமான சேவைகள் தொடங்கி தற்போது தமிழ்நாட்டின் முக்கியமான, லாபகரமான விமான நிலையங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது மதுரை. இருப்பினும் மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேர சேவை இல்லாமல் இருந்து வந்தது. மேலும் பன்னாட்டு விமான நிலையமாகவும் இது அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வர்த்தக சபையினர் தொடர்ந்து மத்திய அரசுக்கு கோரிக்கைகள் வைத்து வந்தனர். மதுரை எம்.பி. சு. வெங்கடேசன், விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோரும் தொடர்ந்து இதுதொடர்பாக கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் சில மாதங்களுக்கு முன்பு தென் மாவட்டங்களைச் சேர்ந்த எம்பிக்கள் சு. வெங்கட்சன், தங்க தமிழ்ச்செல்வன், கார்த்தி சிதம்பரம், மாணிக்கம் தாகூர், நவாஸ் கனி ஆகியோர் மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு கிஞ்சிரப்புவை நேரில் சந்தித்து மனுவையும் அளித்தனர்.
இந்த நிலையில் இன்று முதல் தனது 24 மணி நேர செயல்பாட்டை மதுரை விமான நிலையம் தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் செய்து முடிக்கப்பட்டு விட்டன. மதுரை விமான நிலையத்திலிருந்து இரவு நேரத்திலும் சேவைகளை விரிவுபடுத்துமாறு விமான நிறுவனங்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டு விட்டன.
24 மணி நேர சேவை தொடங்கவுள்ளதைத் தொடர்ந்து மத்திய அரசுக்கு எம்.பிக்கள் சு. வெங்கடேசன், மாணிக்கம் தாகூர் ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
IPL 2025.. மார்ச் 22 முதல் அதிரடி ஐபிஎல் திருவிழா.. 23ம் தேதி சென்னையின் முதல் போர்.. மும்பையுடன்!
வெயில் அதிகரிக்கும்.. அடுத்த ஒரு வாரத்திற்கு வறண்ட வானிலையே.. IMD Chennai எச்சரிக்கை
திமிராகப் பேசினால்.. தமிழர்களின் தனிக் குணத்தை டெல்லி பார்க்க நேரிடும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
காலாவதியான கொள்கையை.. தமிழகக் குழந்தைகள் மீது திணிப்பது நியாயமா?.. அண்ணாமலை கேள்வி
அஞ்சு கட்சி அமாவாசை.. பத்து ரூபாய் தியாகி.. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு.. ஜெயக்குமார் பதிலடி
டப்பிங் இல்லாமல் நேரடியாக பதில் சொல்வாரா பதுங்குகுழி பழனிச்சாமி.. அமைச்சர் செந்தில் பாலாஜி
விகடனுக்குத் தடை செய்வது.. மும்மொழிக் கொள்கையைத் திணிப்பது.. இதுதான் பாசிசம்.. விஜய்
விகடன் இணையதள முடக்கத்திற்கு.. முதல்வர் மு.க.ஸ்டாலின், சீமான் உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம்!
கும்பமேளா பயணிகள் 18 பேர் பலி.. டெல்லி ரயில் நிலையத்தில் நடந்த விபரீதத்திற்கு இதுதான் காரணம்!
{{comments.comment}}