மதுரை: மதுரையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ரத்னவேல் என்பவர் குறைந்த செலவில் தனது ஆட்டோவில் ஏர் கூலர் வசதியை ஏற்படுத்தி அசத்தியுள்ளார்.
மத்த ஊரில் எல்லாம் ஒரு மாதிரி வெயில் அடிச்சா.. இந்த மதுரையில மட்டும் வேற லெவலில் இருக்கும்.. வெள்ளை வெளேர்னு அடிக்கும் அந்த வெயிலையும் தாங்கிக்கிட்டு நம்மாளுங்க அவங்க பாட்டுக்கு போய்ட்டே இருப்பாங்க. அப்படி வெயில் அடிக்கும்.
வீட்டுக்குள்ளேயே இருக்கலாம்னா அதுவும் முடியாது.. வெந்து தணிந்தது காடு.. வீட்டுக்குள்ள எல்லா ரூமுலயும் ஏசியைப் போடுன்னு புலம்ப வச்சுரும்.. வெளியில் போனா ஆத்தாடி.. மண்டை காஞ்சு கருவாடாய்ப் போய்ரும். இப்படிப்பட்ட சூழ்நிலையில ஆட்டோ டிரைவர் ஒருவர் சூப்பரா சிந்திச்சு.. சுப்ரீமா யோசிச்சு.. அசர வைக்கும் ஒரு வேலையைச் செஞ்சிருக்கார் மக்களே.
வெயில் காலத்தில் வரும் வெப்ப காற்றை தவிர்க்க குறைந்த செலவில் ஆட்டோவில் ஏர் கூலர் அமைத்து அசத்தியுள்ளார், மதுரையைச் சேர்ந்த அந்த ஆட்டோ ஓட்டுனர் ரத்தினவேல் பாண்டியன். இது குறித்து அவர் பேசுகையில், என்னுடைய பெயர் ரத்தினவேல் பாண்டியன். நான் ஓரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். சண்டே ஒரு நாள் மட்டும் தான் ஆட்டோ ஓட்டுவேன். வாரத்தின் 6 நாட்கள் ஆபீசில் உட்காந்து இருந்து விட்டு வந்து ஒரு நாள் மட்டும் ஆட்டோ ஓட்டுவேன்.
அப்போது எனக்கு வெயிலின் தாக்கம் அதிகமா இருந்தது. மற்ற ஆட்டோகாரர்கள் எல்லாம் வெயில் தாங்க முடியாமல் ஆட்டோவில் அட்டை வைத்து கட்டியிருப்பார்கள். அதை பார்த்த பிறகு தான் இதை ரெடி பண்ணினேன். நான் முதலில் சின்ன பைப் வைத்து ஏர் கூலர் ரெடி பண்ணியிருந்தேன். அதுல காத்து சரியா வரல. அதுக்கப்புறமா கொஞ்சம் பெரிய பைப் வைத்து ஏர் கூலர் ரெடி பண்ணினேன்.
முதலில் லேசாக தான் காத்து வந்தது. பின்னர் வேகமா போக போக காத்து நல்ல வந்துச்சு. சரி அப்படினு நானும் சந்தேஷமா வண்டி ஓட்ட ஆரம்பிச்சுட்டேன். எதிர் காலத்துல வண்டியில பயணம் செய்பவர்களுக்கும் இதே மாதிரி ஏர் கூலர் ரெடி பண்ணனும்னு ஆசை இருக்கு. இதற்கு மொத்த செலவே ரூ.400தான் ஆச்சு. கம்மி விலையில் இதை ரெடி பண்ணியதால் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.
நா ஆட்டோ ஓட்டனும்னு ஓட்டல. எங்க வீட்டுல அப்பா, தம்பிக எல்லோருமே போலீஸ்காரங்க. எல்லாருமே காக்கி சட்ட போட்டவங்க, நானும் காக்கி சட்டை போடனும்னு ஆசைப்பட்டேன். அப்ப எங்கம்மா கொடுத்த ஐடியா தான் இந்த காக்கி சட்ட. எல்லாம் காக்கிதானே.. இப்ப நானும் காக்கி சட்டை போட்டுட்டேன். வருமானத்துக்கு ஒரு வழியும் கிடைத்திருச்சு.. என்று கூறி புன்னகைக்கிறார்.
மதுரைன்னா சும்மாவாய்யா.. இது "செல்லூர் ராஜு மண்"ணுய்யா.. விடுவோமா நாங்க.. விஞ்ஞானத்தை விரல் இடுக்குல வச்சிருப்போம்ல.. சபாஷ்ண்ணே ரத்தினவேல் பாண்டியண்ணே.. அசத்துங்க!
துபாய், சிங்கப்பூர், கொழும்பு வழியாக.. பாகிஸ்தானுக்கு தங்கு தடையின்றி செல்லும்.. இந்தியப் பொருட்கள்!
பஹல்காம் தாக்குதல் .. மத்திய அரசு, ராணுவம் குறித்து விமர்சனம்.. நாடு முழுவதும் 19 பேர் கைது
விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு.. முதல் முறையாக.. தேமுதிக பொதுக்குழு கூட்டம்.. 30ம் தேதி!
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
{{comments.comment}}