மதுரை: தமிழ்நாட்டில் பொது இடங்களில் ஏற்கனவே அமைக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகள், இயக்க அமைப்புகளின் கொடிக்கம்பங்களை 12 வாரத்திற்குள் அகற்ற வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கட்சி கொடி கம்பங்கள் மற்றும் பேனர்கள் வைப்பதால் பல்வேறு விபத்துகள் ஏற்படுகிறது. இதனால் மக்கள் மிகுந்த இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.தேசிய மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் பொது இடங்களில் அரசியல் கட்சிகளின் கொடிகள் நடுவதால் மோதல்கள் உருவாகி சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது.
அதிலும் ஒவ்வொரு கட்சியும் போட்டி போட்டுக் கொண்டு அதிக உயரத்தில் கொடிக் கம்பங்களை அமைக்கின்றன. பெரும் மழை, காற்று காலத்தில் இவை கீழே விழுந்து பல விபரீதங்கள் நேரிட்டுள்ளன. இப்படித்தான் சாலைகளின் நடுவே பெரிய சைஸ் பேனர்கள், தட்டிகளை வைத்தும் மக்களை கஷ்டப்படுத்தி வருகின்றன அரசியல் கட்சிகள். இதற்கெல்லாம் விடிவே இல்லையா என்று மக்கள் புலம்பிக் கொண்டுதான் உள்ளனர். இந்த நிலையில் மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையிலான ஒரு உத்தரவை மதுரை உயர்நீதிமன்றக் கிளை பிறப்பித்துள்ளது.

மதுரை விளாங்குடி பகுதியில் அதிமுக சார்பில் வைக்கப்பட்டிருந்த கொடிக் கம்பத்தை அகற்றி விட்டு அதிக உயரத்தில் வைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு அனுமதி கிடைக்கவில்லை. இதையடுத்து கட்சி சார்பில் உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கில்தான் அதிரடியான சில உத்தரவுகளை ஹைகோர்ட் பெஞ்ச் பிறப்பித்துள்ளது. அதன்படி கூறப்பட்டுள்ளதாவது:
- தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள்,இயக்க அமைப்புகளின் கொடிக்கம்பங்களை 12 வாரங்களில் அகற்ற வேண்டும்.
- பட்டா உள்ள இடங்களில் கொடிக்கம்பங்கள் அமைப்பது குறித்து உரிய விதிகளை அரசு உருவாக்க வேண்டும்.
- வருங்காலங்களில் தேசிய மாநில நெடுஞ்சாலைகள், பொது இடங்களில் கொடிக் கம்பங்கள் அமைக்க அனுமதி வழங்கக் கூடாது உள்ளிட்ட உத்தரவுகளை ஹைகோர்ட் பெஞ்ச் பிறப்பித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்
எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!
உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!
Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!
11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!
கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை
இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?
{{comments.comment}}