மதுரை: தமிழ்நாட்டில் பொது இடங்களில் ஏற்கனவே அமைக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகள், இயக்க அமைப்புகளின் கொடிக்கம்பங்களை 12 வாரத்திற்குள் அகற்ற வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கட்சி கொடி கம்பங்கள் மற்றும் பேனர்கள் வைப்பதால் பல்வேறு விபத்துகள் ஏற்படுகிறது. இதனால் மக்கள் மிகுந்த இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.தேசிய மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் பொது இடங்களில் அரசியல் கட்சிகளின் கொடிகள் நடுவதால் மோதல்கள் உருவாகி சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது.
அதிலும் ஒவ்வொரு கட்சியும் போட்டி போட்டுக் கொண்டு அதிக உயரத்தில் கொடிக் கம்பங்களை அமைக்கின்றன. பெரும் மழை, காற்று காலத்தில் இவை கீழே விழுந்து பல விபரீதங்கள் நேரிட்டுள்ளன. இப்படித்தான் சாலைகளின் நடுவே பெரிய சைஸ் பேனர்கள், தட்டிகளை வைத்தும் மக்களை கஷ்டப்படுத்தி வருகின்றன அரசியல் கட்சிகள். இதற்கெல்லாம் விடிவே இல்லையா என்று மக்கள் புலம்பிக் கொண்டுதான் உள்ளனர். இந்த நிலையில் மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையிலான ஒரு உத்தரவை மதுரை உயர்நீதிமன்றக் கிளை பிறப்பித்துள்ளது.
மதுரை விளாங்குடி பகுதியில் அதிமுக சார்பில் வைக்கப்பட்டிருந்த கொடிக் கம்பத்தை அகற்றி விட்டு அதிக உயரத்தில் வைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு அனுமதி கிடைக்கவில்லை. இதையடுத்து கட்சி சார்பில் உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கில்தான் அதிரடியான சில உத்தரவுகளை ஹைகோர்ட் பெஞ்ச் பிறப்பித்துள்ளது. அதன்படி கூறப்பட்டுள்ளதாவது:
- தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள்,இயக்க அமைப்புகளின் கொடிக்கம்பங்களை 12 வாரங்களில் அகற்ற வேண்டும்.
- பட்டா உள்ள இடங்களில் கொடிக்கம்பங்கள் அமைப்பது குறித்து உரிய விதிகளை அரசு உருவாக்க வேண்டும்.
- வருங்காலங்களில் தேசிய மாநில நெடுஞ்சாலைகள், பொது இடங்களில் கொடிக் கம்பங்கள் அமைக்க அனுமதி வழங்கக் கூடாது உள்ளிட்ட உத்தரவுகளை ஹைகோர்ட் பெஞ்ச் பிறப்பித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Trump Taxes: அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த புதிய வரிகள்...எந்தெந்த நாடுகளுக்கு அதிக பாதிப்பு?
பாரத் பந்த்.. நாளை நாடு தழுவிய அளவில்.. தொழிற்சங்கங்களின் போராட்டம்.. பாதிப்பு வரமா?
யாஷ் தயாள் இப்படியா செய்தார்?.. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பவுலர் மீது வந்த பகீர் புகார்!
பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து: முக்கிய தலைவர்கள் இரங்கல்!
ஆனி மாத வளர்பிறை பிரதோஷம்.. சிவன் பார்வதி வழிபாட்டுக்கு உகந்த நாள்!
கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து.. முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல், அதிர்ச்சி!
நிலையற்ற விலையில் தங்கம்... நேற்று குறைந்த தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு!
கடலூர் அருகே விபரீதம்.. பள்ளி வேன் மீது ரயில் மோதி.. 3 பேர் பரிதாப பலி.. தவறு யார் மீது?
அமெரிக்காவில் பெரும் சோகம்.. சுற்றுலா சென்ற இந்தியர், மனைவி, 2 பிள்ளைகளுடன் விபத்தில் சிக்கி பலி
{{comments.comment}}