மதுரை: தமிழ்நாட்டில் பொது இடங்களில் ஏற்கனவே அமைக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகள், இயக்க அமைப்புகளின் கொடிக்கம்பங்களை 12 வாரத்திற்குள் அகற்ற வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கட்சி கொடி கம்பங்கள் மற்றும் பேனர்கள் வைப்பதால் பல்வேறு விபத்துகள் ஏற்படுகிறது. இதனால் மக்கள் மிகுந்த இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.தேசிய மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் பொது இடங்களில் அரசியல் கட்சிகளின் கொடிகள் நடுவதால் மோதல்கள் உருவாகி சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது.
அதிலும் ஒவ்வொரு கட்சியும் போட்டி போட்டுக் கொண்டு அதிக உயரத்தில் கொடிக் கம்பங்களை அமைக்கின்றன. பெரும் மழை, காற்று காலத்தில் இவை கீழே விழுந்து பல விபரீதங்கள் நேரிட்டுள்ளன. இப்படித்தான் சாலைகளின் நடுவே பெரிய சைஸ் பேனர்கள், தட்டிகளை வைத்தும் மக்களை கஷ்டப்படுத்தி வருகின்றன அரசியல் கட்சிகள். இதற்கெல்லாம் விடிவே இல்லையா என்று மக்கள் புலம்பிக் கொண்டுதான் உள்ளனர். இந்த நிலையில் மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையிலான ஒரு உத்தரவை மதுரை உயர்நீதிமன்றக் கிளை பிறப்பித்துள்ளது.

மதுரை விளாங்குடி பகுதியில் அதிமுக சார்பில் வைக்கப்பட்டிருந்த கொடிக் கம்பத்தை அகற்றி விட்டு அதிக உயரத்தில் வைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு அனுமதி கிடைக்கவில்லை. இதையடுத்து கட்சி சார்பில் உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கில்தான் அதிரடியான சில உத்தரவுகளை ஹைகோர்ட் பெஞ்ச் பிறப்பித்துள்ளது. அதன்படி கூறப்பட்டுள்ளதாவது:
- தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள்,இயக்க அமைப்புகளின் கொடிக்கம்பங்களை 12 வாரங்களில் அகற்ற வேண்டும்.
- பட்டா உள்ள இடங்களில் கொடிக்கம்பங்கள் அமைப்பது குறித்து உரிய விதிகளை அரசு உருவாக்க வேண்டும்.
- வருங்காலங்களில் தேசிய மாநில நெடுஞ்சாலைகள், பொது இடங்களில் கொடிக் கம்பங்கள் அமைக்க அனுமதி வழங்கக் கூடாது உள்ளிட்ட உத்தரவுகளை ஹைகோர்ட் பெஞ்ச் பிறப்பித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!
எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!
நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!
புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
{{comments.comment}}