ஜல்லிக்கட்டு ஒன்றும் ஐபிஎல் போட்டி அல்ல: உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி

Jan 07, 2026,05:14 PM IST

மதுரை: "ஜல்லிக்கட்டு என்பது வெறும் பொழுதுபோக்கு விளையாட்டு அல்ல; அது ஒரு வீர விளையாட்டு. இது ஒன்றும் ஐபிஎல் (IPL) கிரிக்கெட் போட்டி போன்றது அல்ல" என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.


மதுரை மாவட்டத்தின் உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிபதிகள், பல்வேறு முக்கிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டிகளை அந்தந்த கிராம நிர்வாகக்குழுவினரே நடத்த வேண்டும் என்ற முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.


கடந்த காலங்களில் சில தனிநபர்கள் அல்லது குறிப்பிட்ட குழுக்கள் ஜல்லிக்கட்டை நடத்திய போது பல்வேறு குழப்பங்களும் பிரச்சினைகளும் ஏற்பட்டதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. இதனால், இந்தாண்டு மேற்கண்ட மூன்று இடங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டிகளை தமிழக அரசின் வருவாய் துறையே முன்னின்று நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.





ஜல்லிக்கட்டு போட்டிகளைச் சுமூகமாகவும், பாதுகாப்புடனும் நடத்துவதற்கு அனைத்துச் சமுதாயப் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய ஓர் அறிவுரை குழுவை (Advisory Committee) அமைக்க வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். நீதிமன்றம் ஏற்கனவே வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி, எவ்வித பாரபட்சமுமின்றி இந்தப் போட்டிகள் நடத்தப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.


ஜல்லிக்கட்டு என்பது தமிழகத்தின் கலாச்சாரம் மற்றும் வீரத்தின் அடையாளம். பல போராட்டங்களுக்குப் பிறகு இதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளதால், அதன் புனிதம் கெடாமல் இருக்க வேண்டும் என்பதே நீதிமன்றத்தின் நோக்கமாக உள்ளது. வணிக ரீதியான போட்டிகளைப் போல இதைக் கருதாமல், பாரம்பரிய முறைப்படி நடத்த வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

விஜய் வேண்டுமா? ஸ்டாலின் வேண்டுமா?...தஞ்சையில் விஜய் ஆவேச பேச்சு

news

இந்தி பெயரை மொழிபெயர்த்து தமிழிலேயே குறிப்பிட வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்

news

உலக அமைதியை உருக்குலைக்கும் மத்திய கிழக்கு போர்.. பதற்றத்தைத் தணிப்பாரா பிரதமர் மோடி?

news

Iran war ஈரானின் புதிய தலைவராக அயதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா தேர்வு

news

மக்களின் மனங்களை வென்ற தாய் கிழவி: வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்!

news

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்கா... இல்லையா... இதோ வானிலை மைய அறிவிப்பு!

news

உலக உடல் பருமன் தினம் 2026: குண்டானவர்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் இந்தியாவிற்கு எந்த இடம்?

news

Middle East tension: பதட்டத்தில் மத்திய கிழக்கு.. பரபரக்கும் உறவுகளும், நட்பும்.. அக்கறைக்கு நன்றி

news

சந்தோஷம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்