ஜல்லிக்கட்டு ஒன்றும் ஐபிஎல் போட்டி அல்ல: உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி

Jan 07, 2026,05:14 PM IST

மதுரை: "ஜல்லிக்கட்டு என்பது வெறும் பொழுதுபோக்கு விளையாட்டு அல்ல; அது ஒரு வீர விளையாட்டு. இது ஒன்றும் ஐபிஎல் (IPL) கிரிக்கெட் போட்டி போன்றது அல்ல" என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.


மதுரை மாவட்டத்தின் உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிபதிகள், பல்வேறு முக்கிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டிகளை அந்தந்த கிராம நிர்வாகக்குழுவினரே நடத்த வேண்டும் என்ற முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.


கடந்த காலங்களில் சில தனிநபர்கள் அல்லது குறிப்பிட்ட குழுக்கள் ஜல்லிக்கட்டை நடத்திய போது பல்வேறு குழப்பங்களும் பிரச்சினைகளும் ஏற்பட்டதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. இதனால், இந்தாண்டு மேற்கண்ட மூன்று இடங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டிகளை தமிழக அரசின் வருவாய் துறையே முன்னின்று நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.





ஜல்லிக்கட்டு போட்டிகளைச் சுமூகமாகவும், பாதுகாப்புடனும் நடத்துவதற்கு அனைத்துச் சமுதாயப் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய ஓர் அறிவுரை குழுவை (Advisory Committee) அமைக்க வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். நீதிமன்றம் ஏற்கனவே வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி, எவ்வித பாரபட்சமுமின்றி இந்தப் போட்டிகள் நடத்தப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.


ஜல்லிக்கட்டு என்பது தமிழகத்தின் கலாச்சாரம் மற்றும் வீரத்தின் அடையாளம். பல போராட்டங்களுக்குப் பிறகு இதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளதால், அதன் புனிதம் கெடாமல் இருக்க வேண்டும் என்பதே நீதிமன்றத்தின் நோக்கமாக உள்ளது. வணிக ரீதியான போட்டிகளைப் போல இதைக் கருதாமல், பாரம்பரிய முறைப்படி நடத்த வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

காங்கிரஸால் காயப்பட்டுள்ளோம்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்.. திமுக

news

ரோஜா பூ கொடுத்து புதிய மாணவர்களை அன்புடன் வரவேற்ற தேவகோட்டை ஆசிரியர்கள்!

news

புதிய கல்வியாண்டு.. அனைவரும் இணைந்து அறிவுச் சுடரை உயர்த்திப் பிடிப்போம்!

news

Tamil Life Qoutes: தெரிந்து கொள்வதை விட புரிந்து கொண்டால் .. அன்பு ஆயுள் வரை நீடிக்கும்.!

news

மாணவர் நலனைக் காப்பாற்றுங்கள்.. அமைச்சரிடம் கணினி ஆசிரியர்கள் கோரிக்கை

news

Vipuvana sangadahara chaturthi: விபுவன சங்கடஹர சதுர்த்தி.. விரதம் இருந்து விநாயகனை வழிபடுவோம்

news

லீவு முடிஞ்சாச்சு.. பள்ளிக்கூடம் திறந்தாச்சு.. உற்சாகமாக திரண்டு வந்த மாணவ, மாணவியர்!

news

Om Sai.. அன்பே சாய்!

news

Remembering SPB: S. P. பாலசுப்ரமணியம் .. ஒரு தெய்வீக ஆன்மா!

அதிகம் பார்க்கும் செய்திகள்