மதுரை: "ஜல்லிக்கட்டு என்பது வெறும் பொழுதுபோக்கு விளையாட்டு அல்ல; அது ஒரு வீர விளையாட்டு. இது ஒன்றும் ஐபிஎல் (IPL) கிரிக்கெட் போட்டி போன்றது அல்ல" என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தின் உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிபதிகள், பல்வேறு முக்கிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டிகளை அந்தந்த கிராம நிர்வாகக்குழுவினரே நடத்த வேண்டும் என்ற முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
கடந்த காலங்களில் சில தனிநபர்கள் அல்லது குறிப்பிட்ட குழுக்கள் ஜல்லிக்கட்டை நடத்திய போது பல்வேறு குழப்பங்களும் பிரச்சினைகளும் ஏற்பட்டதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. இதனால், இந்தாண்டு மேற்கண்ட மூன்று இடங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டிகளை தமிழக அரசின் வருவாய் துறையே முன்னின்று நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டிகளைச் சுமூகமாகவும், பாதுகாப்புடனும் நடத்துவதற்கு அனைத்துச் சமுதாயப் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய ஓர் அறிவுரை குழுவை (Advisory Committee) அமைக்க வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். நீதிமன்றம் ஏற்கனவே வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி, எவ்வித பாரபட்சமுமின்றி இந்தப் போட்டிகள் நடத்தப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு என்பது தமிழகத்தின் கலாச்சாரம் மற்றும் வீரத்தின் அடையாளம். பல போராட்டங்களுக்குப் பிறகு இதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளதால், அதன் புனிதம் கெடாமல் இருக்க வேண்டும் என்பதே நீதிமன்றத்தின் நோக்கமாக உள்ளது. வணிக ரீதியான போட்டிகளைப் போல இதைக் கருதாமல், பாரம்பரிய முறைப்படி நடத்த வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
Akshaya Tritiya 2026: அட்சய திருதியை.. எப்போது சாமி கும்பிடலாம்.. பஞ்சாங்கம் என்ன சொல்கிறது?
Kanakathara Sthothram: அட்சய திருதியை.. ஸ்ரீ ஆதி சங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரம் படிப்போம்!
அட்சய திருதியை.. சித்திரை மாத பொன்னான நாளிது.. மூன்றாம் பிறையில் வரும் நாளிது!
அட்சய திருதியை அன்று...இதை வைத்துப் பூஜை செய்வோம்.. காலத்தின் அவசியம் இது!
IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்
மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!
பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)
{{comments.comment}}