மதுரை: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை மதுரை மாவட்ட நிர்வாகமும் , மதுரை மாநகராட்சியும் இணைந்து நடத்த சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவு பிரப்பித்துள்ளது.
தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாகக் கருதப்படுவது ஜல்லிக்கட்டு. பொங்கல் திருநாளையொட்டி நடத்தப்படும் இவ்வீர விளையாட்டு மிகவும் சிறப்புடையதாகும். பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டாலும், மதுரை மாவட்டத்தில் நடத்தப்படும் இவ்விளையாட்டு உலக பிரசித்தி பெற்றதாகும்.
குறிப்பாக அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டிகள்தான் உலகப் பிரசித்தி பெற்றது. ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டு, நீண்ட சட்டப் போராட்டம் நடந்து தற்போது உச்சநீதிமன்றமே இந்தப் போட்டி கலாச்சாரம் தொடர்புடையது என்று கூறி தடைகளை தகர்த்து உத்தரவிட்டு விட்டது. இதனால் ஜல்லிக்கட்டுக்கு இருந்து வந்த அத்தனை சிக்கல்களும் நீங்கி விட்டன.

ஜல்லிகட்டு போட்டி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15ம் தேதி அவனியாபுரத்திலும், 16ம் தேதி பாலமேட்டிலும், 17ம் தேதி அலங்காநல்லூரிலும் நடைபெறும். இப்போட்டியினை காண வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் இருந்து பார்வையாளர்கள் வருவார்கள்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியினை தென்கால் பாசன விவசாயிகளின் சங்கத்தின் நிர்வாகிகள் கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வந்தனர். ஆனால் இதில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கே முக்கியத்துவம் தரப்படுவதாக குற்றம்சாட்டி நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. இதையடுத்து போட்டியை மாவட்ட நிர்வாகமே நடத்த வேண்டும் என மதுரையை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜல்லிகட்டு போட்டியில் ஜாதி, மதத்தை புகுத்துவதை ஏற்றுகொள்ள முடியாது. இந்த போட்டிகளை மதுரை மாவட்ட நிர்வாகமே இனி நடத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}