மதுரை: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை மதுரை மாவட்ட நிர்வாகமும் , மதுரை மாநகராட்சியும் இணைந்து நடத்த சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவு பிரப்பித்துள்ளது.
தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாகக் கருதப்படுவது ஜல்லிக்கட்டு. பொங்கல் திருநாளையொட்டி நடத்தப்படும் இவ்வீர விளையாட்டு மிகவும் சிறப்புடையதாகும். பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டாலும், மதுரை மாவட்டத்தில் நடத்தப்படும் இவ்விளையாட்டு உலக பிரசித்தி பெற்றதாகும்.
குறிப்பாக அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டிகள்தான் உலகப் பிரசித்தி பெற்றது. ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டு, நீண்ட சட்டப் போராட்டம் நடந்து தற்போது உச்சநீதிமன்றமே இந்தப் போட்டி கலாச்சாரம் தொடர்புடையது என்று கூறி தடைகளை தகர்த்து உத்தரவிட்டு விட்டது. இதனால் ஜல்லிக்கட்டுக்கு இருந்து வந்த அத்தனை சிக்கல்களும் நீங்கி விட்டன.

ஜல்லிகட்டு போட்டி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15ம் தேதி அவனியாபுரத்திலும், 16ம் தேதி பாலமேட்டிலும், 17ம் தேதி அலங்காநல்லூரிலும் நடைபெறும். இப்போட்டியினை காண வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் இருந்து பார்வையாளர்கள் வருவார்கள்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியினை தென்கால் பாசன விவசாயிகளின் சங்கத்தின் நிர்வாகிகள் கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வந்தனர். ஆனால் இதில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கே முக்கியத்துவம் தரப்படுவதாக குற்றம்சாட்டி நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. இதையடுத்து போட்டியை மாவட்ட நிர்வாகமே நடத்த வேண்டும் என மதுரையை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜல்லிகட்டு போட்டியில் ஜாதி, மதத்தை புகுத்துவதை ஏற்றுகொள்ள முடியாது. இந்த போட்டிகளை மதுரை மாவட்ட நிர்வாகமே இனி நடத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
அன்பு.. எத்தனை முறை காயப்பட்டாலும், மூளை அறியும், ஆனால் மனம் கேட்காது!
Monday Motivation: வாரீர்! வாரீர்!! பிள்ளைகாள்.. இலக்கணம் எளிதே தமிழ் இலக்கணம் எளிதே!
பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை
தமிழக அரசு குதிரை பேரத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது: கனிமொழி கடும் விமர்சனம்!
"இந்திரா காந்தி இருந்திருந்தால் பாஜக-விற்கு தடை விதித்திருப்பார்" - அசோக் கெலாட் சர்ச்சை பேச்சு
4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்...அதிமுக மனு விசாரணைக்கு ஏற்பு
அமைதியின் சிகரம் யோகினி.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!
"எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை?" - எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!
சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முதல்வர் அக்கறை காட்ட வேண்டும்! உதயநிதி ஸ்டாலின் காட்டம்
{{comments.comment}}