மதுரை: உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா வரும் ஏப்ரல் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 12ஆம் தேதி வரை முக்கிய வைபோவங்கள் நடைபெற உள்ளன.
சங்க இலக்கியம், கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், இலக்கியம், கலை என பல்வேறு அடையாளங்களுடன் திகழும் மதுரை மாநகருக்கு என்று சிறப்பு அந்தஸ்து உள்ளது. சங்கம் வளர்த்த மதுரை, தூங்கா நகரம், மிகப் பழமையான நகரம், கோயில் மாநகரம், என்ற பல்வேறு சிறப்பு பெயர்களை பெற்றுள்ளது. குறிப்பாக மதுரையின் அடையாளமாக, மதுரையின் மையப் பகுதியில், கம்பீரமாக நான்கு கோபுரங்களுடன் காட்சி அளிக்கிறது மீனாட்சியம்மன் கோவில். இக்கோவில் ஆயிரம் வருடங்களுக்கு மேல் மிகவும் பழமையான பிரசித்தி பெற்ற தலமாகும்.
இங்கு ஆவணி மூலத் திருவிழா, பங்குனி உத்திரம், முளைகட்டு திருவிழா, மாசி திருவிழா, சித்திரை திருவிழா என வருடம் முழுவதும் கொண்டாடப்படும் திருவிழாக்களால் மதுரை மாநகர் எப்போதுமே களைக்கட்டி இருக்கும். அதிலும் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படும் சித்திரை திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. பத்து நாட்கள் திருவிழாவாக கொண்டாடப்படும் இத்திருவிழாவில் மீனாட்சி அம்மன் ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரத்துடன் நான்கு மாசி வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். இதில் மீனாட்சி திருக்கல்யாணம், பட்டாபிஷேகம், திக்கு விஜயம், திருத்தேரோட்டம், பூப்பல்லாக்கு, போன்றவை மிகப் பிரம்மாண்டமாக நடைபெறும்.
அதே சமயத்தில் இந்த விழாக்களின் போது மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பரதநாட்டியம், என ஆட்டம் பாட்டத்துடன் யானை, ஒட்டகம், காமதேனு என அணி வகுப்புகள் இருக்கும். இது மட்டுமல்லாமல் தங்கை மீனாட்சி திருக்கல்யாணத்தை காண வரும் கள்ளழகர் புறப்பாடு, கள்ளழகர் எதிர்சேவை, கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குதல் போன்றவை முக்கியமான விழாக்களாகும்.
இந்த சித்திரைத் திருவிழாவை காண உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல் வெளியூரிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரைக்கு வந்த வண்ணம் இருப்பர். அப்போது மதுரையே உலுங்கும் அளவிற்கு எங்கு பார்த்தாலும் மனித தலைகளாக ஆக்கிரமித்து இருக்கும். மக்கள் மனதில் மகிழ்ச்சி உற்சாகம் ஆட்டம் பாட்டம் என பரபரப்பாக காணப்படும். அந்த வகையில் அனைவரின் எதிர்பார்ப்புடன் திகழும் 2025 ஆம் ஆண்டுக்கான சித்திரத் திருவிழா வரும் ஏப்ரல் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 12ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
மதுரை சித்திரை திருவிழா இந்த ஆண்டு வரும் 28ஆம் தேதி திங்கட்கிழமை மீனாட்சியம்மன் கோவிலில் சாந்தி பூஜை நடைபெறும். பின்னர் ஏப்ரல் 29ஆம் தேதி செவ்வாய் கிழமை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
மே 8, வியாழன் அன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்
மே 9, வெள்ளிக்கிழமை, திருத்தேரோட்டம்
மே 11, ஞாயிறு, கள்ளழகர் எதிர்சேவை
மே 12, திங்கட்கிழமை, கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் ஆகியவை நடைபெறுகிறது.
மதுரை சித்திரை திருவிழாவை காண பக்தர்கள் எதிர்பார்த்து காத்து வருகின்றனர் அதே சமயம் இந்த வருடம் சித்திரை திருவிழா பள்ளி மாணவர்களின் விடுமுறை முடிந்து சரியான நேரத்தில் வருகிறது. இதனால் கூட்டம் மேலும் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நலம் காக்கும் ஸ்டாலின்... சிறப்பு மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தங்கம் விலையில் அதிரடி... ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120 உயர்வு!
தேசிய விருது பெற்ற.. பார்க்கிங் குழு.. தோழி ஊர்வசி.. தம்பி ஜி.வி.பிரகாஷுக்கு ..கமல்ஹாசன் வாழ்த்து!
ஆடிப்பெருக்கு.. நீரின்றி அமையாது உலகு.. தண்ணீர்த் தாயை போற்றி வணங்கி வழிபடுவோம்!
மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் மரணம்.. மாரடைப்பு.. சோட்டானிக்கரை ஹோட்டலில் பரபரப்பு!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 02, 2025... இன்று மகிழ்ச்சியை அனுபவிக்க போகும் ராசிகள்
71வது தேசிய திரைப்பட விருதுகள்.. ஷாருக் கான் சிறந்த நடிகர்.. எம்.எஸ். பாஸ்கர் சிறந்த துணை நடிகர்!
10 ஆண்டுகளில் முதல் முறையாக... சென்னை மெட்ரோ ரயிலில்... ஜூலை மாதத்தில் 1 கோடி பேர் பயணம்!
சொந்த ஊர் கொண்டு செல்லப்பட்ட கவினின் உடல்... நேரில் அஞ்சலி செலுத்த வந்த அரசியல் தலைவர்கள்!
{{comments.comment}}